/tamil-ie/media/media_files/uploads/2021/05/Baakiyalakshmi2.jpg)
மயூவை அழைக்க தனது வீட்டிற்கே சென்ற கோபி, ஒருவழியாக யார் கண்ணிலும் சிக்காமல் ராதிகா மற்றும் அவரது மகள் மயூவை அழைத்துக்கொண்டு வந்துவிட்டான். அதன் பின் தனது வீட்டிற்கு செல்ல முடிவெடுக்கும் கோபி, ராதிகாவிடம் கூறுகிறான். அப்போது டீச்சர் வீடு அருகிலேயே ஒரு வீடு இருக்கிறது என்றும் அதை பார்க்க போவதாகவும் ராதிகா சொல்கிறாள்.
இதை கேட்டு அதிர்ச்சியடையும் கோபி, ஏதேதோ சொல்லி தடுக்க பார்க்கிறார். ஆனால் ராதிகா அந்த வீட்டை பார்த்துவிட்டு பிடித்திருந்தால் மேலும் பேசலாம் என சொல்லிவிடுகிறார். இதனால் பல வகையில் சிந்திக்கும் கோபி, ஒரு வழியாக பெங்களூரில் இருந்து வருவது போல தனது வீட்டுக்குள் செல்கிறான் அப்போது அவன் கையில், ஸ்னாக்சுடன் வருவது அனைவருக்கும் சர்ப்ரைஸாக உள்ளது. இதை பார்த்த இனியா, நீங்கள் வாங்கி வரவே மாட்டிர்களே என கேட்கிறாள்
அதற்கு சமாளிக்கும் கோபி, எதுவும் தெரியாதது போல நம் வீட்டில் ஒரு குழந்தை இருக்குல்ல, அவளுக்கு தான் வாங்கி வந்தேன் என கூறுகிறான. இதற்கிடையே ஜெனி, எப்போ பெயின்ட் அடிக்க போகிறோம் என கேள்வி கேட்க அதற்கு தனது பொய்யால் சமாளிக்கிறான் கோபி. அப்போது மயூ நம் போட்டோக்களை பார்த்துக்கொண்டிருந்தாள் என பாக்யா சென்னதும் கோபி அதிர்ச்சி இடைகிறான். ஆனால் அதற்குள் உங்கள் போட்டோவை பார்க்கவில்லை என பாக்யா சொன்னதும் தப்பிச்சோம்டா சாமி என்பது போல நிம்மதி அடைகிறார்.
அதன்பிறகு ஜெனி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் கோபி, போட்டோக்கள் அங்கேயே இருக்கட்டும். நாம் பெயின்ட் அடித்துவிட்டு மாட்டிக்கொள்ளலாம் என கூறுகிறான். அதன்பிறகு ராதிகா வந்ததையும், புது வீடு பார்ப்பதாக சொன்னது பற்றியும் பாக்யா கூறுகிறாள். மேலும் அருகில் இருக்கும் வீடு விலைக்கு வருவதாகவும், அதை பார்க்க ராதிகா வருவதாகவும் கூறுகிறாள். இதனால் கோபமடையும், கோபி நீ ஏன் அவங்களுக்கு உதவி செய்தே தீருவேன் என சுத்திட்டு இருக்க என கேட்கிறார். ஒருவேளை ராதிகா அருகில் வந்துவிட்டால் என்ன ஆகும் என டென்ஸனாக தனக்கு தானே பேசிக்கொள்கிறார் கோபி. அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.