Bharathi Kannamma Serial Today Episode : நேற்றைய எபிசோட்டின் இறுதியில், வெண்பாவை கடத்த திட்டம் போடும் துர்கா, தனது திட்டத்தை செயல்படுத்தும் விதமான கோவிலுக்கு கிளம்பும் வெண்பாவை காரில் வைத்து கடத்தி கொண்டு வருகிறான். இதனால் அதிர்ச்சியடையும் வெண்பா, என்னை ஏன்டா கடத்திருக்க, உனக்கு என்ன வேணும் என கத்துகிறாள். அமைதியா இரு இல்லைன்னா கழுத்தை அறுத்துருவேன் என மிரட்டும் துர்கா, நீ திருந்திருவ, உன்னை விட்ரலாம்னு நினைச்சேன். ஆனா நீ கடைசி வரை கண்ணம்மா, பாரதியை சேர விட மாட்ட போல. உன்னால அவுங்க அனுபவிச்ச கஷ்டம் போதாத என சொல்கிறான்.
அதற்கு வெண்பா, நான் வீட்ல சும்மா பேசிட்டு இருந்தேன் என சொல்கிறாள். ஆனால் துர்கா, நீ என்னைவிட கேவலமானவனு எனக்கு தெரியும். உன் அழகுக்கு எத்தனையோ பசங்க வருவாங்க. அவனுங்கல யாரையாவது லவ் பண்லாம்ல. அதை விட்டுட்டு ஏன்டி கல்யாணம் ஆனவன் வாழ்க்கைல விளையாடுற என கேட்கிறான். ஆனால் அதனை காதில் வாங்காத வெண்பா உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் கேளு, நான் தர்றேன் என சொல்கிறாள். ஆனால் இதற்கு அசராத துர்கா துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறான்.
அதன்பிறகு துர்காவிடம் உனக்கு என்னதான் வேணும் கேளு என வெண்பா சொல்கிறாள். அப்போது துர்கா பேப்பர் ஒன்றை கொடுத்து, அடுத்து வரும் முப்பது நாளைக்கு மருத்துவமனை மூடப்படுகிறது என எழுதி கையெழுத்து போட சொல்கிறான். அவளும் அவன் சொன்ன மாதிரி எழுதி கையெழுத்து போடுகிறாள். அதை அவன் தன்னுடைய ஆட்களிடம் கொடுத்து, இதை பத்து ஜெராக்ஸ் போட்டு, வெண்பா மருத்துவமனையில் ஒட்டுங்க என சொல்கிறான். அதன்பிறகு அவளை கட்டி போட்டு, இன்னும் ஒரு மாசம் நீ இங்கதான் இருக்க போற என சொல்கிறான்.
இதற்கிடையே சுமதியை சந்தித்து பேசும் கண்ணம்மா அவரது கணவரை பற்றி விசாரிக்கிறாள். அதற்கு சுமதி ரொம்ப மாறிட்டாரு நல்லா இருக்காரு. உனக்குத்தான் நன்றி சொல்லணும் என சொல்கிறாள் மேலும் தம்பி மனைவி கர்ப்பமா இருக்கா, அதான் கொஞ்ச நாள் அங்க இருந்துட்டு வந்தேன் என சொல்கிறாள். இதனைத் தொடர்ந்து கட்டி போடப்பட்டிருக்கும் வெண்பா, உனக்கு என்னதான்டா வேணும் என துர்காவிடம் கேட்கிறாள்.
நீதான் வேணும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி உன்ன லவ் பண்றேன்னு உன் பின்னாடி நான் திரிஞ்சப்ப என்னை எவ்வளவு அசிங்கப்படுத்துன, அதுக்கு பழி வாங்க போறேன் என சொல்கிறான். எதுவுமே தெரியாத வருணை வச்சு கண்ணம்மா வாழ்க்கைய நாசம் பண்ணில, அதே மாதிரி அவனை வச்சு உன் வாழ்க்கையும் நாசம் பண்ண போறேன் என சொல்கிறான். இந்த ஒரு மாசம் நீ இங்கதான் இருக்க போற, அமைதியா இரு என சொல்கிறான் இத்துடன் இன்றைய எபிசொடு முடிவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil