/tamil-ie/media/media_files/uploads/2021/05/bakiyalakshmi-may-10-epi.jpg)
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
ராதிகாவிடம் டீச்சர் போன் செய்வதாக கூறும் கோபி பின்னர் ஒருவழியாக சமாளிக்கிறான். பின்னர் பாக்கியாவிடம் கோபி வெறுப்பாக பேசுகிறான். என் வீட்டில் என்ன கண்டுகிறது இல்ல, என்ன பணத்துக்காக அந்த வீட்டில் யூஸ் பண்ணிக்கிறாங்க என ராதிகாவிடம் பொய்யாக சொல்கிறான்.
மயூவும் இனியாவும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது செல்வி என் புருசனும் உங்க அப்பா மாதிரி குடிகாரர் தான் என சொல்கிறாள். மயூ அலமாரியில் உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருக்கிறாள். அப்போது கோபி இருக்கும் போட்டோவை மயூ எடுக்கும் போது இனியா அவளை விளையாட கூட்டிச் செல்கிறார்கள். இதனால் கோபியின் போட்டோவை அவள் பார்க்கவில்லை.
அம்ரிதா வீட்டில் அம்ரிதாவிடம் கோபமாக பேசுகிறார்கள் அவளது பெற்றோர். மேலும் அம்ரிதாவை சந்தேகப்பட்டு அவள் மீது வெறுப்பைக் கொட்டுகிறார்கள். இதனால் அம்ரிதா கோபமாக வெளியேறுகிறாள். வழியில் எழிலும் அம்ரிதாவும் சந்தித்து கொள்கிறார்கள். அப்போது அங்கு வரும் அம்ரிதா அப்பா அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து விடுகிறார்.
காலேஜில் ஒன்ன படிக்கிறிங்களா என அம்ரிதா அப்பா கேட்க இல்லை என்கிறான் எழில். பின்னர் எழிலிடம் அவனது போன் நம்பரை வாங்கி கொள்கிறார் அம்ரிதா அப்பா.
ஸ்கூலில் இனியாவை பிரின்சிபல் கூப்பிட்டு பேசுகிறார். அப்போது உங்க அம்மாவை நாளைக்கு வந்து என்ன பார்க்க சொல்லு என சொல்கிறார் பிரின்சிபல். இதனால் அதிர்ச்சியாகும் இனியா காரணம் தெரியாமல் குழப்பமாகிறாள்.
பின்னர் வீட்டுக்கு வரும் அம்ரிதாவிடம் அம்ரிதாவின் பெற்றோர் சந்தேகப்பட்டு கோபமாக பேசுகிறார்கள். அம்ரிதா நான் நல்லா தானே பாத்துக்குறேன் என சொல்ல இருவரும் வீட்டை விட்டு கிளம்புவதாக சொல்கிறார்கள். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.