/indian-express-tamil/media/media_files/C08KrKh20GOFpcoMbQa2.jpg)
பாக்கியலட்சுமி சீரியல்
தமிழ் சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. கணவன் இல்லாத நிலையில், ஒரு பெண் தனது குழந்தைகள் மற்றும் மாமனார் மாமியாரை எப்படி பார்த்துக்கொள்கிறார் என்பதையும், முன்னாள் கணவரால் அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலின் தினசரி எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் கடந்த வாரம் இனியாவின் காலேஜ் ட்ரிப்புக்காக கூட்டிக்கொண்டு போன் பாக்யா திரும்பி வரும்போது ஒரு விபத்தை சந்திக்கிறார். அப்போது அங்கு வரும் போலீஸ் லைசன்ஸ் கேட்க, அந்த நேரத்தில் பழனிச்சாமி போன் செய்கிறார். ஆனால் ஹோட்டலில் பாக்யாவின் பர்ஸ் தொலைந்துவிட்டதால் அதில் லைசன்சும் தொலைந்துவிடுகிறது.
இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில், இன்றைய எபிசோட்டில், பாக்யா தனது மாமனாருக்கு போன் செய்து லைசன்ஸ் எடுத்து வரும்படி கூறுகிறார். இதை கேட்டு அமிர்தாவும், ராமமூர்த்தியும் வீட்டுக்கு புறப்படுகின்றனர். அதற்குள் இந்த விஷயத்தை பற்றி கேள்விப்பட்டு பாக்யா வீட்டுக்கு செல்லும்போகி தான் வைத்திருக்கும் ஒரு சாவியை வைத்து வீட்டை திறந்து பாக்யாவின் லைசன்சை எடுத்து எடுத்துச்சென்றுவிடுகிறார்.
தொடர்ந்து தனது காரை அனுப்பி இனியா மற்றும் ஈஸ்வரியை அழைத்துக்கொண்டு வரும்படி சொல்லிவிடுகிறார். அதேபோல் பாக்யா இனியா மற்றும் ஈஸ்வரியை கோபியின் காரில் அனுப்பி வைத்துவிடுகிறார். பாக்யாவின் லைசன்ஸை தேடி வீட்டுக்கு வரும் ராமமூர்த்தி அமிர்தா இருவரும் தேடி போக அங்கு லைசன்ஸ் இல்லை. இதை பாக்யாவிடம் அமிர்தா சொல்ல அடுத்து என்ன செய்வது என்று பாக்யா யோசிக்கிறார்.
இதனிடையே பாக்யாவின் லைசன்ஸை எடுத்துக்கொண்ட கோபி, இது குறித்து தனது நண்பனிடம் சொல்லி, பாக்யாவை ஜெயிலில் தள்ள போறாங்க என்று பேசிக்கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பாக்யா இருக்கும் இடத்திற்கு பழனிச்சாமி வந்துவிடுகிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.