/tamil-ie/media/media_files/uploads/2021/08/Eeramana-Rojave.jpg)
Vijay TV Eeramana Rojave Serial Update : தமிழ சின்னத்திரை வரலாற்றில் அதிக சீரியல்களை ஒளிபரப்புவதில் விஜய்டிவிக்கு முக்கிய இடம் உண்டு. இந்த டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களும் ஏதாவது ஒரு வகையில் ரசிகர்கள் மத்தியில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் சீரியல்களில் வெற்றியால் விஜய்டிவிக்கு ரசிகர்களும் அதிகரித்து வருவதால், ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக விஜய் டிவி அவ்வப்போது புதிய சீரியலை களமிறங்கி வருகிறது. இதனால் ஒருசில ஹிட் சீரியல்கள் திடீரென முடிவுக்கு வரும் நிகழ்வும் அரங்கேறி வருகிறது.
அந்த வகையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில், பவித்ரா ஜனணி, திரவியம் ராஜகுமாரன், ஷாம், சாய் காயத்ரி புவனேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர் மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் குமரன் (கதிர்) இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதுவரை 803 எபிசோடுகளை கடந்துள்ள இந்த சீரியல் முடிவுக்கு வந்துள்ளதாக இந்த சீரியலில் நடித்து வரும் சாய் காயத்ரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ வெளியிட்டுள்ள அவர், அனைத்தும் முடிந்தது! இன்று கடைசி நாள் ஈரமான ரோஜாவே படப்பிடிப்பு. ரொம்பவே எல்லோரையும் மிஸ் பண்ணுகிறோம் என்றும் கூறியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் திடீரென முடிவுக்கு கொண்டு வர காரணம் என்ன என்பது குறித்து ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆனாலும் ரசிகர்கள் பலரும், இந்த சீரியல் முடிவுக்கு வருவதை எண்ணி வருத்தத்தில் இருக்கும் நிலையில், மிஸ் யூ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.