/tamil-ie/media/media_files/uploads/2021/06/Raja-rani.jpg)
தனது வீட்டின் அருகில் காதலரை பார்ப்பதற்காக பார்வதி காத்துக்கொண்டிருக்கும்போது, பாலமுருகன் அங்கு வருகிறான. அர்ச்சனாவின் தங்கையை பெண் பார்த்துவிட்டு அவளை பிடிக்கவில்லை என் சொன்னவன் அவன் பார்வதியிடம், உங்கள் வீட்டை அவங்க வீடு என சொல்லி காட்டியது எனக்கு தெரியும். எனக்கு உன்னை தான் பிடித்து இருக்கிறது என என சொல்ல பார்வதி கோபமகீறாள்
அப்போது அங்கு வரும் சிவகாமி, பார்வதி யாருடனோ ரோட்டில் நின்று பேசிக்கொண்டு இருப்பதை பார்த்துவிடுகிறார். அந்த நேரத்தில் பாலமுருகன் கொடுத்த ரோஜா பூக்களை பார்வதி வாங்க, அப்போது பார்வதியின் காதலன் அதை பார்த்துவிடுகிறான் அப்போது அங்கு வரும் அர்ச்சனா - செந்தில் இருவரும் பாலமுருகன் அங்கு இருப்பதை பார்த்து ஷாக் ஆகின்றனர். இதை பார்த்த அர்ச்சனா என் தங்கைக்கு பார்த்த மாப்பிள்ளை இப்படி செய்கிறானே என கோபமாகிறாள்
இந்நிலையில், சிவகாமி, பார்வதி யாரிடமோ நின்று பேசிக்கொண்டிருக்கிறாள், ரோஸ் வாங்குகிறாள் என அனைவர் முன்பு திட்டுகிறாள். இதனால என்ன சொல்வது என தெரியாமல் பார்வதி விழிக்கும்போது 'அவன் அட்ரெஸ் கேட்டது போல தான் இருந்தது. அவன் கையில்;பேப்பர் தானே இருந்தது, பூ இல்லையே' என அர்ச்சனா பொய் சொல்லி சமாளிக்கிறாள். செந்திலும் அப்படியே கூற சிவகாமி குழப்பம் அடைகிறார்.
இதன்பிறகு காதலருக்கு போன் செய்யும் பார்வதி அர்ச்சனாவின் தங்கைக்கு பார்த்த மாப்பிளை தான் பாலமுருகன் என்பது தொடங்கி அவன் தற்போது கொடுத்துவரும் தொல்லை வரை அனைத்தையும் சொல்கிறார் பார்வதி. அதனை நம்பும் அவர், எதாவது தொல்லை என்றால் தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.