Raja Rani 2 Serial : சந்தியாவுக்காக ரிஸ்க் எடுக்கும் சரவணன் : சிவகாமிக்கு தெரியுமா?

Raja Rani Serial Today Episode Update : ராஜா ராணி சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் காணலாம்

Raja Rani Serial Today Episode Update : ராஜா ராணி சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் காணலாம்

author-image
WebDesk
New Update
Raja Rani 2 Serial : சந்தியாவுக்காக ரிஸ்க் எடுக்கும் சரவணன் : சிவகாமிக்கு தெரியுமா?

சந்தியா வீட்டில் நகை காணாமல்போன விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதை பெரிய பிரச்சனையாக ஆக்கும் சிவகாமி, சந்தியா மீது பழி சுமத்தி இது பற்றி பேச சந்தியாவின் அண்ணனை வர சொல்கிறாள். ஆனால் நமது குடும்ப விஷயம் வெளியில் இருப்பவருக்கு தெரிய வேண்டாம் என்று சந்தியா சொல்லும்போது, தான் ஏற்கனவே ஆதியை அனுப்பி அவர்களை வரவைத்துவிட்டதாக சிவகாமி கூறுகிறார்.

Advertisment

அதன்பிறகு வீட்டிற்கு வரும் அண்ணன் மற்றும் அண்ணியை வாசலிலேயே நிற்க வைத்து பேசியும் சந்தியா, இது எங்கள் குடும்ப பிரச்சனை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என அவர் கூறி அனுப்பி விடுகிறாள். ஆனால் அண்ணன் உள்ளே வந்தால் மாட்டிக்கொள்வோம் என இப்படி செய்தாயா என சிவகாமி கேட்கிறார். சந்தியா இதற்கெல்லாம் என்ன பதில் சொல்வது என தெரியாமல் சந்தியா விழிக்கிறார்.

அந்த நேரத்தில் சந்தியாவின் தோழி அனிதா போன் செய்யும்போது அதை எடுக்கும் வேலைக்காரி மயிலு பேசிவிட்டு கட் பண்ணாமல் அப்படியோ கீழே வைத்து விடுகிறாள். அதனால் சிவகாமி சந்தியாவை திட்டுவதை எல்லாம் கேட்டுவிடுகிறார். இதை கேட்டு அனிதா சந்தியாவுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என யோசிக்கிறார்.

இதன்பிறகு சந்தியா தனது  கணவர் சரவணனிடம், இதற்கு முன் செய்த தவறுகளை சொன்னால் ஏற்றுக்கொள்வேன், ஆனால் இந்த திருட்டு பழியை மட்டும் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன், என்னுடைய அப்பா அம்மா என்னை அப்படி வளர்க்கவில்லை எனசொல்லி வருத்தப்படுகிறார். அதன் பின் சற்று நேரம் கழித்து தான் அண்ணனை சந்திக்க போகிறேன் என அவர் மாமியாரும் கூறிவிட்டு போகிறார்.

Advertisment
Advertisements

அதன் பிறகு சரவணன் தனது ஸ்வீட் கடைக்கு வந்து பணம் எடுத்துக்கொண்டு அவசரமாக செல்வதை சிவகாமி ஜன்னல் வழியாக சிவகாமி பார்த்துவிடுகிறார். சந்தியா சென்ற உடன் இவனும் எங்கே வேகமாக செல்கிறான் என யோசிக்கிறார் அப்போது சரவணன் நகை கடைக்கு சென்று தொலைந்த நெக்லஸ் போன்ற ஒன்றை மீண்டும் செய்யும்படி ஆர்டர் கொடுத்துவிட்டு வருகிறார்.

சந்தியா தான் நகையை திருடினார் என பழி வந்த நிலையில் தான் அவர் இதை செய்கிறார். இதன் மூலமாக சந்தியாவுக்கு வந்த பிரச்னையை தீர்க்க முடியும் என அவர் யோசிக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Raja Rani

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: