நகரத்து கதைக்கு முடிவு: புதிய கதைகளத்தில் கார்த்திகை தீபம்; ஆகஷன் அண்ணா வருவாரா?

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Anna Serial news

அவமானப்பட்ட வைகுண்டம்.. அலங்கோலமான ரத்னா வாழ்க்கை, கோபமான சண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் எடுத்து கொடுத்த புடவையை பரணி கட்டி கொள்ள அதை பார்த்து எல்லாரும் நல்லா இல்லை என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, சூடாமணி மறைவால் தீபாவளியை கொண்டாட முடியாமல் போனதை தொடர்ந்து தங்கைகளுக்கு பலகாரம் கொடுக்க முடிவெடுக்கின்றனர். எல்லாவறையும் ரெடி செய்து கொண்டு சண்முகம், பரணி என இருவரும் ரத்னா வீட்டிற்கு கிளம்ப வைகுண்டம் மற்றும் கனி என இருவரும் இசக்கிக்கு பலகாரம் எடுத்து கொண்டு சௌந்தரபாண்டி வீட்டிற்கு வருகின்றனர்.

வெங்கடேஷ் வீட்டில் ரத்னா ஒரு வேலைக்காரி போல் வேத்து விறுவிறுத்து வேலை செய்து கொண்டிருக்க ஷண்முகம் பரணி வீட்டிற்கு வர வெங்கடேஷ் குடும்பத்தினர் ரத்னா லேட்டாக எழுந்ததாகவும் நைட்டியில் இருந்தா மாத்திட்டு வருவா என்றும் சமாளிக்க சண்முகத்திற்கு சந்தேகம் வருகிறது.
அடுத்து வெங்கடேஷ் ரத்னாவிடம் உன் அண்ணன் வந்து இருக்கான் என்று சொல்ல அவள் ஆசையோடு ஓட தடுத்து நிறுத்தி டீசெண்டாக ரெடியாகி வா என்று சொல்கிறான். பிறகு ரத்னா கெட்டப்பை மாற்றி கொண்டு வெளியே வந்து பார்த்து பார்த்து பேசுகிறாள்.

Advertisment
Advertisements

பிறகு தீபாவளி சீரை கொடுக்க வெங்கடேஷ் குடும்பத்தினர் பணம் இல்லையா என்று கேட்க சண்முகம் கோபமாகிறான், மறுபக்கம் வைகுண்டமும் கனியும் இசக்கிக்கு சீர் கொண்டு வர சௌந்தரபாண்டி என்ன பெருசா சீர் கொண்டு வந்துடீங்க என்று பாத்திரங்களை உதைத்து தள்ளி அவமானப்படுத்துகிறான்.  இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தீபாவின் மறைவால் தவிக்கும் குடும்பம்.. கைதான கீதா, கார்த்திக் கொடுத்த வாக்கு - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மடியில் தீபா உயிரை விட்ட நிலையில் இன்று, தீபாவின் இறப்பை தாங்க முடியாமல் மொத்த குடும்பமும் கண்ணீரில் தத்தளிக்கின்றனர். அதன் பிறகு தீபாவை அடக்கம் செய்யும் வேலைகள் நடக்கின்றன. வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் தீபாவையும் பற்றியும் தீபா மருமகளாக வந்தது பற்றியும் கண்ணீருடன் பேசி கொள்கின்றனர்.

தீபாவின் பிரிவை தாங்க முடியாமல் அனைவரும் தவிக்கின்றனர். இதையடுத்து போலீஸ் கார்த்திக் வீட்டிற்கு வந்து கீதாவை கைது செய்ய வந்ததாக சொல்கிறார்கள். கார்த்திக் கீதாவிடம் நீங்க பயப்படாமல் இவங்க கூட போங்க.. உங்களுக்கு வாக்கு கொடுத்த மாதிரி நான் உங்களை காப்பாற்றுகிறேன். உங்களை கண்டிப்பா வெளியே கொண்டு வருவேன் என்று சொல்ல கீதா போலீசாரால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்படுகிறாள்.

இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது. வரும் திங்கள் முதல் புத்தம் புதிய கிராமத்து கதையில் புதிய கதாபாத்திரங்களுடன் இந்த கார்த்திகை தீபம் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Zee Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: