Advertisment

சண்முகத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி... தாத்தா போட்ட கண்டிஷன்... ஜீ தமிழ் சீரியல் அப்டேட்

ஜீ தமிழின் அண்ணா மற்றும் கார்த்திகை தீபம் சீரியல்களின் இன்றைய எபிசோடு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anna and Karthikai Deepam

அண்ணா - கார்த்திகை தீபம் சீரியல்

அண்ணா

Advertisment

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி வேகமாக கார் ஒட்டி பிரேக் அடிக்க அவளிடம் இருந்த தாலி கீழே விழ ஷண்முகம் அதிர்ச்சி அடைந்தான். இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் எல்லாரும் மண்டபத்துக்கு வந்து இறங்க பெண் வீட்டார் சார்பாக பரணியும் சண்முகமும் டான்ஸ் ஆடி மாப்பிளையை வரவேற்க மாப்பிளை வீட்டு தரப்பில் நான்கு தங்கைகளும் நடனமாடி வர இதனை பார்த்த சண்முகமும் தங்கைகளும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பிறகு ஷண்முகம் பரணியுடன் தான் போகிறேன் என சொல்லாமல் வந்ததற்காக மன்னிப்பு கேட்டு தோப்புக்கரணம் போட்டு நீங்க எதுக்கு சொல்லாமல் வந்தீங்க என்று கேட்க தங்கைகள் தோப்புக்கரணம் போடுகின்றனர். பிறகு பரணியுடன் போறேன்னு சொல்லிட்டு வந்திருக்கலாமே என்று தங்கைகள் கேட்க பரணி எதையோ சொல்லி சமாளிக்கிறாள்.

பிறகு சௌந்தரபாண்டி போன் செய்ய ஷண்முகம் தனியாக போய் பேச அவர் எதாவது பிரச்சனையா என்று கேட்க ஷண்முகம் அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா என்று சொல்லி கொண்டிருக்கும் போதே கார்த்திக் வந்து இறங்க ஷண்முகம் ஐயோ என அதிர்ச்சியாக சௌந்தரபாண்டி என்னாச்சு என்று கேட்க ஒருவழியாக ஒன்றும் இல்லை என்று சொல்லி ஷண்முகம் அவரை சமாளிக்கிறான்.

அடுத்து ஷண்முகம் இவன் எதுக்கு வந்தான் என்று கேட்க பரணி என் ப்ரண்ட் கல்யாணம் அவன் வர கூடாதா என்று சொல்லி மழுப்ப பிறகு மெஹந்தி பங்க்ஷன் தொடங்குகிறது, மாப்பிளையை கல்யாண பொண்ணுக்கு மருதாணி வைத்து விட சொல்கின்றனர்.

அதே போல் பரணி கார்த்தியிடம் நீ எனக்கு மருதாணி வச்சு விடு, என் மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கனு பார்க்கலாம் என்று சொல்ல சண்முகமும் அங்கே இருக்க பரணி அவனையும் ஒரு கையில் வைக்க சொல்கிறாள், ரெண்டு பேரில் யார் அதிக பாசம் வச்சிருக்கீங்களோ அவங்களை தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொல்கிறாள். பிறகு ஷண்முகம் தயக்கத்துடன் மருதாணி வைத்து விடுகிறான்.

இன்னொரு பக்கம் மாறுவேடத்தில் வரும் வெங்கடேஷ் ரத்னாவுக்கு மருதாணி வைத்து விடுகிறான். அதனை தொடர்ந்து கொஞ்ச நேரம் கழித்து பரணி கார்த்திக் மருதாணி வைத்த கையை கழுவ மருதானி நன்றாக செவந்து இருக்கிறது, இதனை தொடர்ந்து ஷண்முகம் வைத்த கையை கழுவும் போது கார்த்திக் வைத்ததை விட இன்னும் ஆழமாக செவந்திருக்கிறது.

இதை பார்த்து கார்த்தி பொஸசிவ் ஆகி உன் முறை பையனையே கல்யாணம் பண்ணிக்க என பரணியை கலாய்க்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

கார்த்திகை தீபம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் நடந்த போட்டியில் தீபா வெற்றி பெற்ற நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்

அபிராமி உன்னை நான் சரியா புரிஞ்சிக்கல, இதுவரை நீ எல்லாம் எனக்காக செய்திருக்க என்று வருத்தப்பட கார்த்தி தாத்தா இது தீபாவுக்காக வைத்த போட்டி, இந்த போட்டியில் கேட்கப்பட்டது வெறும் 5 கேள்வி தான், இதை விட என்னை பற்றி உங்களுக்கு 1000 விஷயம் தெரிந்திருக்கும் அதெல்லாம் தீபாவுக்கு கூட தெரியாது என ஆறுதல் சொல்கிறான்.

மறுபக்கம் தீபா அபிராமி தோற்று போனதை நினைத்து வருத்தமாக உட்கார்ந்திருக்க அப்போது தர்மலிங்கம் போன் செய்து உங்களை மறுவீட்டுக்கு அழைக்க போவதாக சொல்ல தீபா அமைதியாகவே இருக்கிறாள், இதனால் ஜானகி போன் வாங்கி பேச தீபா இப்போ இருக்கும் சூழ்நிலையில் இதெல்லாம் தேவையா என்று கேள்வி கேட்க அவர்கள் முறைனு ஒன்னு இருக்கு, நாங்க உங்க வீட்டுக்கு வந்து பேசறோம், அனுப்புவதும் அனுப்பாததும் அங்க விருப்பம் என்று சொல்லி போனை வைக்கின்றனர். இவர்கள் பேசியதை அந்த வழியாக கடந்து சென்று தாத்தா கேட்டு விடுகிறார்.

மறுநாள் காலையில்  தர்மலிங்கமும் ஜானகியும் வீட்டுக்கு வர அப்போது முருகன் சிலை வெளியே இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர், தீபா இவர்களை வரவேற்க ஜானகி அந்த முருகன் தான் உன்னை இந்த வீட்டுக்குள்ள அழைத்து போகணும் என்று சொல்ல தர்மலிங்கம் அந்த முருகனே வெளியே தான் இருக்காரு என்று வருத்தப்படுகிறார்.

இதனையடுத்து இவர்கள் வீட்டிற்குள் நுழைய ஐஸ்வர்யா இவர்களை தடுத்து நிறுத்தி எங்க வந்தீங்க? எதுக்கு வந்தீங்க என சத்தம் போட தாத்தா வீட்டிற்கு வந்தவங்க கிட்ட இப்படியா பேசுவ என சத்தம் போடுகிறார், தர்மலிங்கம் இவரை பற்றி விசாரிக்க தீபா கார்த்தியின் தாத்தா, பெரிய ஜமீன் என்ற விஷயங்களை சொல்கிறாள்.

அதன் பிறகு தாத்தா நீங்க தர்மலிங்கம், ஜானகி தீபாவோட அப்பா அம்மா சரி தானே? உள்ள வாங்க என அழைத்து செல்ல அபிராமி ஒன்னும் சொல்லாமல் அமைதியாக நிற்கிறாள், பிறகு மறுவீடு குறித்து பேச அபிராமி பதில் சொல்லாமல் இருக்க தாத்தா மறுவீட்டுக்கு நான் அனுப்பி வைக்கிறேன் என வாக்கு கொடுக்கிறார். ஆனால் ஒரு கண்டிஷன் என ஷாக் கொடுக்கிறார்.

அதாவது தர்மலிங்கத்தை நாதஸ்வரம் வாசித்து காட்ட சொல்ல அவர் முதலில் தயங்க பிறகு சம்மதம் தெரிவிக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

New Serial Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment