Advertisment

கணவன் மனைவியை பிரிக்க மாஸ்டர் ப்ளான் ரெடி: சூழ்ச்சியின் உச்சத்தில் ஜீ தமிழ் சீரியல்கள்

ஜீ தமிழின் அண்ணா மற்றும் சீதாராமன் சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Anna Seetharaman

அண்ணா - சீதாராமன்

பளாரென அறைந்த பரணி.. சௌந்தரபாண்டி போடும் அடுத்த பிளான்

Advertisment

ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி வரும் பிரபலமான  அண்ணா. சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி சண்முகத்தை அறைய ஒரே அடியில் வைகுண்டம் அங்கிருந்து ஓடி வந்த நிலையில் இன்றைய எபிசோட்டில், அடிவாங்கிய பின்னரும் இன்னைக்கு வரலானாலும் ஒருநாள் நீ என்கூட வருவ, என்னைக்கா இருந்தாலும் நீ என்னுடைய பொண்டாட்டி என சொல்லி விட்டு அதே சந்தோசம் மற்றும் மேளதாளத்துடன் வீட்டிற்கு வருகிறான்.

வைகுண்டம் பரணி அறைந்த விஷத்தை சொல்லி கொண்டிருக்க மேளதாள சத்தம் கேட்டு கனி ஆரத்தியுடன் வெளியே வருகிறாள். சண்முகம் மட்டும் தனியாக வர கனி அண்ணி வரலையா என்று கேட்க இன்னைக்கு நாள் நல்லா இல்லையாம், இன்னொரு நாள் கண்டிப்பா வருவா என்று சொல்லி உள்ளே செல்ல தங்கைகள் அடி வாங்கிட்டு வந்து பேச்சை பாரு என யோசிக்க வைகுண்டத்திடம் சென்று அடி கொடுக்கிறவன் மட்டும் அம்பல கிடையாது, நின்னு அடி வாங்கிறவனும் ஆம்பள தான் என்று சொல்கிறான்.

இங்கே சனியன் இன்னைக்கு பரணி அந்த சண்முகத்தை அடித்து அனுப்பிட்டா, ஆனால் அந்த சண்முகம் அவ மனசை மாற்ற வாய்ப்பிருக்கு என்று சொல்ல முத்துப்பாண்டி என் தங்கச்சியை பத்தி என்ன சொல்ற என அடிக்க பாய சௌந்தரபாண்டி அவன் சொல்றதும் ஒரு விதத்துல சரி தான், அவங்கள நிரந்தரமா பிரிக்க ஏதாவது செய்யணும் என பிளான் ஒன்றை சொல்கிறார்.

கொஞ்ச நேரத்தில் அங்கு வரும் பரணி முத்துபாண்டியிடம் எனக்கு கம்பளைண்ட் ஒன்னு கொடுக்கணும் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மகாவுக்கு ராம் கொடுத்த அதிர்ச்சி.. சீதாவுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீதாராமன் சீரியலின் நேற்றைய எபிசோடில் ராம் மகாவிடம் வீட்டுக்கு வர முடியாது என அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்றைய எபிசோட்டில், மகா எவ்வளவு முயற்சி செய்தும் ராம் அவனது முடிவில் உறுதியாக இருக்கிறான். மேலும் ராம் நா மட்டும் வந்தா போதுமா சீதாவும் வரணுமா எனக் கேட்க அர்ச்சனா நீ மட்டும் வந்தால் போதும் என சொல்ல மகா நீங்க ரெண்டு பேரும் வாங்க என சொல்கிறாள். ஆனாலும் ராம் முடியாது என மறுத்து விடுகிறான்.

மகா உங்க அப்பாவுக்கு ஏதாவது ஆனா யார் பொறுப்பு என சொல்ல சீதா அவர் ஜெயிலிலையே பார்த்தவர் அவருக்கு ஒன்னும் ஆகாது என பதிலடி கொடுக்கிறாள். வேறு வழியில்லாமல் மகா அங்கிருந்து கிளம்ப வெளியே வந்ததும் சீதாவிடம் இங்கிருந்து ராமை மட்டும் எப்படி கூட்டிட்டு போறேன்னு மட்டும் பாரு என்ன சவால் விட சீதா மனதுக்குள் நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்க என நினைத்துக் கொள்கிறாள்.

வீட்டுக்கு வந்த மகா சீதா மீது பழி போட்டு ராம் வரவில்லை என்று சொல்ல சேது வீட்டுக்குள் வர மறுக்க என் மேல நம்பிக்கை இருந்தா வாங்க என சொல்லி வீட்டுக்குள் கூட்டி செல்கிறாள். இங்கே துணி தைக்க வந்த பெண் ராமை பார்த்து சைட் அடித்துக் கொண்டே இருக்க சீதா கோபப்பட்டு அவளை திட்டி விடுகிறாள்.

இதுக்கெல்லாம் என்கிட்ட ஒரு வழி இருக்கு என ராம் சொல்லிக் கொண்டே இருக்க சீதா என்ன என்று தெரியாமல் குழம்புகிறாள். பிறகு இரவு ஆனதும் இரண்டு பாயும் சேர்த்து ஒன்றாக போடுகிறான். இங்கே மகா ராமையும் சீதாவை பிரிக்க திட்டம் போடுகிறாள். இரண்டு பாயையும் ஒன்றாக போட்டிருப்பதை பார்த்த சீதா என்ன பாஸ் என்று கேட்க ராம் ரொமான்டிக்காக பேசுகிறான். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment