Advertisment

திருடனாக மாறிய போலீஸ் : சொந்த வீட்டை காலி செய்த குடும்பம் : ஜீ தமிழ் சீரியல் அப்டேட்!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய் சீரியல்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
zee tamil Serial

அண்ணா - கார்த்திகை தீபம் - நினைத்தேன் வந்தாய்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ரவுடிகள் பிடியில் சிக்கிய அஞ்சலி.. மகளை காப்பாற்ற பேயாக என்ட்ரி கொடுத்த இந்து

Advertisment

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் பாஸ்போர்ட் ஆபிஸ் கிளம்ப குழந்தைகள் இந்து சமாதிக்கு வந்திருந்த நிலையில் இன்று, குழந்தைகள் இந்துவின் நினைவிடத்தை சுத்தம் செய்து அம்மாவிடம் பேசி கொண்டிருக்கின்றனர், மறுபக்கம் சுடர் தன்னுடைய அப்பாவை சந்தித்து பாஸ்போர்ட் ஆபிஸ் செல்லும் விஷயத்தை சொல்ல அவர் இனிமே எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும் போயிட்டு வா மா என்று அனுப்பி வைக்கிறார்.

அடுத்து அம்மாவிடம் பேசி முடித்த குழந்தைகள் அம்மா மடியில் தலை வைத்து படுக்கணும்னு ஆசையாக இருப்பதாக சொல்லி சமாதி மீது தலையை வைத்து படுத்து சாந்து கொள்கின்றனர். இந்த நேரத்தில் அங்கு வரும் ரவுடிகள் பணத்தை கொடுங்க, இல்லனா உங்களை தூக்கிட்டு போய் எதாவது பண்ணிடுவோம் என்று மிரட்டுகின்றனர்.

அடுத்து சுடருக்கு பாஸ்போர்ட் ஆபிஸ் இருந்து ஒரு போன் கால் வருகிறது. தமிழ் கேஸ் பத்தி ஏன் சொல்லல? அந்த கேஸ்க்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லனு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிட்ட இருந்து ஒரு லெட்டர் வாங்கிட்டு வாங்க அப்போது தான் பாஸ்போர்ட் கிடைக்கும் என்று சொல்ல சுடர் லெட்டர் வாங்க வருவதற்காக ஸ்டேஷன் வருகிறாள். வேலுவின் நண்பர் தான் இன்ஸ்பெக்டர் என்பதால் சுடரை டீ வாங்கிட்டு வா என்று அலைக்கழிக்கிறார்.

அதே போல் மறுபக்கம் ரவுடிகள் குழந்தைகளை துரத்த அஞ்சலி அவர்களிடம் சிக்கி கொள்ள அஞ்சலியை தூக்கி வீச இந்துவின் ஆத்மா தோன்றி அஞ்சலியை காப்பாற்றுகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சௌந்தரபாண்டியை சுற்றி வளைத்த பரணி, ஷண்முகம்.. பாண்டியம்மாவால் வந்த ஷாக்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி நகைகளை வேறு பெட்டிக்கு மாற்றி தப்பிக்க தயாரான நிலையில் இன்று, சௌந்தரபாண்டி, சனியன், பாண்டியம்மா ஆகியோர் தப்பித்து செல்லும் போது ஊர்க்காரர்கள் உதவியுடன் சண்முகம் பரணி வண்டியை தடுத்து நிறுத்து உங்க காரை சோதனை செய்யணும் என்று சொல்கின்றனர். ஒரு திருடன் உங்க காருக்குள்ள இருக்கிறதா தகவல் வந்துச்சு என்று சொல்லி வண்டியில் இருக்கும் பெட்டியை வெளியே எடுக்கின்றனர்.

சௌந்தரபாண்டி அதுல ஒன்னும் இல்ல என்று சொல்லி கொண்டிருக்க சண்முகம் பெட்டியை திறக்க பெட்டி காலியாக இருப்பதை பார்த்து பரணி குழப்பமும் அதிர்ச்சியும் அடைகிறாள். மறுபக்கம் நகைகளை ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து மறைத்து வைக்கிறான் முத்துப்பாண்டி. பரணியும் சண்முகமும் ஏமாற்றத்துடன் கிளம்பியதும் சௌந்தரபாண்டி இந்த ஐடியாவை கொடுத்த பாண்டியம்மாவுக்கு நன்றி சொல்கிறார்.

அடுத்து வீட்டில் நகை எங்க போய் இருக்கும் என்று எல்லாரும் குழப்பத்தில் இருக்க பரணி இப்போதைக்கு அப்பா நம்புற ஒரே ஒரு ஆள் முத்துபாண்டி மட்டும் தான், நகைகளை அவன்கிட்ட கொடுத்து தான் ஸ்டேஷனில் ஒலிக்க வைச்சிருக்கணும். ஸ்டேஷனுக்கு போய் தேடி பார்க்கலாம் என்று சொல்ல சண்முகம், வைகுண்டம் அதை எப்படி ஸ்டேஷனில் வைக்க முடியும்? அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று சொல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வீடு மாறிய அபிராமி குடும்பம்.. கார்த்திக்கால் உச்சகட்ட சந்தோஷத்தில் ரம்யா

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யாவின் புடவை மிஷினில் மாட்டி கொள்ள கார்த்திக் அவளை காப்பாற்றி தனது சட்டையை கழட்டி கொடுத்த நிலையில் இன்று, வீட்டிற்கு வந்த ரம்யா கார்த்திக் சட்டையை முகர்ந்து பார்த்து ஆட்டம் பாட்டம் என ரொம்ப சந்தோசமாக உணர்கிறாள். மறுபக்கம் அபிராமி குடும்பத்தினர் எல்லாரும் ஜோசியர் சொன்னபடி வீடு மாறுகின்றனர்.  பழைய வீட்டை சுத்தம் செய்து டெக்கரேட் செய்து அடுத்த நாச்சியாராக பார்க்க படும் தீபாவை வைத்து பாலை காய்ச்ச வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர்.

அதற்கேற்றார் போல தீபாவும் பாலை காய்ச்ச அதை பார்த்து சந்தோசப்படுகின்றனர். இதனை தொடர்ந்து கார்த்திக் தீபா திருமண நாள் கொண்டாட்டத்தை நாளைக்கே வச்சிக்கலாம் என்று முடிவெடுக்கின்றனர், அபிராமி தீபாவிடம் கார்த்திக்கு என்ன, கிப்ட் கொடுக்க போற என்று கேட்க தீபா இன்னும் முடிவு பண்ணல அத்தை என்று சொல்கிறாள். அடுத்து கார்த்தியிடம் நீ என்ன பா கிப்ட் கொடுக்க போற என்று கேட்கின்றனர். அவனும் என்ன குடுக்கிறதுனு இன்னும் முடிவு பண்ணல என்று சொல்கிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment