Advertisment

மீண்டும் ரத்னாவை கடத்தும் முத்துப்பாண்டி... போலீசே இப்படி செய்யலாமா? அண்ணா சீரியலுக்கு செக்

ஜீ தமிழின் அண்ணா சீரியலில் இன்று மற்றும் நாளைய எபிசோடுகளில் நடப்பது என்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்

author-image
WebDesk
New Update
anna Serial

ஜீ தமிழின் அண்ணா சீரியல்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி ரத்னா என நினைத்து வேறொரு பெண்ணை கடத்திய விஷயம் தெரிய வந்து சௌந்தரபாண்டி ஓடிவருவதுடன் எபிசோடு முடிக்கப்பட்டது.

Advertisment

தொடர்ந்து இன்றைய எபிசோட்டில், முத்துப்பாண்டி ரத்னா என நினைத்து தாலி கட்ட போகும் சமயத்தில் அங்கு வரும் சௌந்தரபாண்டி அது ரத்னாவே கிடையாது என்று உண்மையை உடைக்க கடைசியில் அந்த பெண் வாய் பேச முடியாத ஊமை என தெரிய வருகிறது. அதைத்தொடர்ந்து சௌந்தரபாண்டி நீ எல்லாம் ஆம்பளையா என முத்துப்பாண்டியை திட்டுகிறார்.

மறுபக்கம் மனோஜ் எப்படியாவது சண்முகத்தை கொன்று தீர வேண்டும் என தன்னுடைய தாத்தாவுடன் சேர்ந்து திட்டம் போடுகிறான். சண்முகம் தங்கைகளுடன் உட்கார்ந்து எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க தாத்தா கனியின் கையை பிடித்து இழுத்து செல்ல சண்முகம் காப்பாற்ற ஓட எதிரில் மனோஜ் கத்தியுடன் வர முத்துப்பாண்டியின் ஆட்கள் என நினைத்து மனோஜை அடித்து துவம்சம் செய்கிறார் சண்முகம்.

அதைத்தொடர்ந்து தங்கைகள் கல்க்கோட்டையில் தூங்க சண்முகம் அவர்களுக்கு காவலாக இருக்கிறார். முத்துப்பாண்டி மீண்டும் ரத்னாவை கடத்த அங்கு வர சண்முகம் சத்தமே வராமல் அவர்களுக்கு அடி கொடுத்து விரட்டி விடுகிறான். சௌந்தரபாண்டியை பார்க்க வந்த ரவுடிகள் சண்முகம் கொலவெறியில் இருக்கான், எங்களால எதுவும் செய்ய முடியாது என சொல்லி விடுகின்றனர்.

அதன் பிறகு சௌந்தரபாண்டி ரத்னாவிடம் நீயா வந்துட்டேனா என் வீட்டுக்கு மருமகளா வரலாம் இல்லனா வேலைக்காரியா தான் வரணும் என் மிரட்ட அங்கு வரும் சண்முகம் சௌந்தரபாண்டியின் சட்டை பிடித்து உனக்கு அவ்வளவு தான் மரியாதை, திரும்பவும் என் தங்கச்சி விஷயத்தில் தலையிட்டா யாரா இருந்தாலும் கொன்னுட்டு தான் மறு வார்த்தை பேசுவேன் என மிரட்டல் விடுகிறான்.

சண்முகத்திடம் அவமானப்பட்ட சவுந்தரபாண்டி முத்துப்பாண்டியிடம் என் மானம் மரியாதை எல்லாமே போச்சு இப்ப என்ன பண்ண போற என ஆவேசப்படுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த சீரியலில் ரத்னாவை கடத்தி திருமணம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் முத்துப்பாண்டி கேரக்டர் ஒரு போலீஸ். ஆனால் போலீசாக இருக்கும் ஒருவரே ரவுடிகளை வைத்து பெண்னை கடத்துவதும், விருப்பம் இல்லாத பெண்ணிற்கு கட்டாய தாலி கட்ட முயற்சிப்பதும் சாரியா என்று கடும் விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment