தம்பி மகளுடன் வீட்டை விட்டு சென்ற அப்பா: காணாமல் போன மகள்? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழின் சந்தியா ராகம் மற்றும் இதயம் சீரியலின் இன்று மற்றும் நாளைய எபிசோடுகளில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

ஜீ தமிழின் சந்தியா ராகம் மற்றும் இதயம் சீரியலின் இன்று மற்றும் நாளைய எபிசோடுகளில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
S R and idhayam

சந்தியா ராகம் - இதயம்

வீட்டை விட்டு வெளியேறும் மாயா.. எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்த ரகுராம்

சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரகுராம் மாயா பேச்சை கேட்டு தனத்திற்கு சீர் அவளுடைய சுயமரியாதை தான் என்று சொல்லிய நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

Advertisment

அதாவது, ரகுராம் செய்தது தப்பு என்று எல்லாரும் சொல்கின்றனர், அதன் பிறகு மாயா இந்த வீட்டில் இருக்க கூடாது என்று சொல்கின்றனர். மாயா இந்த வீட்டை வெளியே போகணுமா என்று கேட்க, நிரந்தரமா போகுறகும் போகாததும் உன்னுடைய விருப்பம் என்று சொல்கிறார்கள். ஆனால் கல்யாணம் வரை இந்த வீட்டில் இருக்க கூடாது என்று சொல்ல மாயா வீட்டை விட்டு வெளியே கிளம்ப தயாராகிறாள்.

மணிவண்ணன் என்னடா அமைதியா நிக்குற என்று கேட்க, சீனு எதுவும் செய்ய முடியாமல் நிற்கிறான். பிறகு மாயா வீட்டை விட்டு வெளியே கிளம்பி வருகிறாள். இந்த விஷயம் அறிந்து லிங்கம் மற்றும் புவனேஸ்வரி என இரண்டு குடும்பமும் சந்தோசப்படுகின்றனர். ஜானகி ரமணியிடம் என்ன தான் இருந்தாலும் நீங்க உங்க பையனை விட்டு கொடுத்து இருக்க கூடாது என்று சொல்ல ரமணி ரகுராமை கூப்பிட சொல்கிறாள்.

மறுபக்கம் பஸ் ஸ்டான்ட் வந்த மாயா இந்த நிலைமையில் அப்பா கிட்டயும் போக முடியாது என்பதால் பஸ் எங்கே போகுது என்று கேட்டு இறுதியான சென்று சேரும் பல்லடத்திற்கு டிக்கெட் வாங்குகிறாள். ஜானகி ரகுராமை தேட அவர் அங்கு இல்லாத நிலையில் பஸ்ஸில் மாயா பக்கத்தில் ரகுராம் வந்து உட்கார அதை பார்த்து மாயா ஷாக் ஆகிறாள்.

Advertisment
Advertisements

நீங்க எதுக்கு வந்தீங்க என்று கேட்க, நீ பண்ணது தப்புனா நான் பண்ணதும் தப்பு தானே.. அப்போ நான் இல்லாமலேயே இந்த கல்யாணம் நடக்கட்டும் என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காணாமல் போன தமிழ்.. காரணம் யார்? உச்சகட்ட பதற்றத்தில் பாரதி

இதயம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஸ்வேதா எல்லாருக்கும் சம்பளத்துடன் 10 நாள் லீவ் கொடுத்து பாரதிக்கு சிக்கலை உருவாக்கிய நிலையில் இன்று, பாரதி வேலைக்கு ஆள் எடுக்க போவதாக தகவல் வர ஆபிஸ் வந்த ஸ்வேதா எல்லா ஏரியாவையும் பிளாக் செய்து வச்சிருக்கேன், யாரும் வேலைக்கு வர மாட்டாங்க என்று திமிராக பேச பாரதி கொஞ்சம் உள்ள வந்து பாரு என்று ஸ்வேதாவை அழைத்து வர எல்லாரும் வேலைக்கு வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.

ஸ்வேதா எதுக்குடா வந்தீங்க என்று கேட்க எங்களுக்கு குடும்பம் இருக்கு என்று சொல்கின்றனர், இதனால் ஸ்வேதா மூக்குடைந்து அங்கிருந்து கிளம்பி செல்கிறாள். அடுத்து ஆதி பாரதி செய்த அதிரடியான செயலை பாராட்டி பேசுகிறான். மேலும் உங்ககிட்ட அறிவும் இருக்கு அழகும் இருக்கு என்று காதலோடு பேசுகிறான், இதையெல்லாம் பார்த்த மலர் கண் கலங்க பாரதி உள்ளே போனதும் ஆதி என்னாச்சு மலர் என்று கேட்கிறான்.

இதற்கு நீங்க சொத்து எல்லாத்தையும் அவளுக்கு கொடுத்த பிறகும் அவளை பாராட்டி பேசுறீங்க, நீங்க பேசுறத கேட்க கேட்க தான் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்குது என்று சொல்கிறாள். ஆதி அப்படியே மலர் என்னை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை அப்படியே பாரதி கிட்ட சொல்ல முடியுமா என்று கேட்க, அவளும் சொல்றேன் என்று சொல்கிறாள். அடுத்து பாரதி வீட்டிற்கு வர தமிழ் பாப்பா டல்லாக இருக்கிறாள்.

இதை பார்த்த பாரதி, என்னாச்சு என்று கேட்க துரை சித்தப்பா ரொம்ப ஓவரா பேசுனாரு ஆனால் அப்பா ஒண்ணுமே சொல்லல என்று சொல்லி பீல் பண்ணுகிறாள். இதை தொடர்ந்து ஆதி வீட்டிற்கு வர ரெண்டு பேரும் ஆதியிடம் முகத்தை கொடுத்து பேசாமல் இருக்க துரை மூக்கில் அடிபட்டு வீட்டிற்கு வர ஆதி அவனை அடித்தது தெரிய வந்து சந்தோசப்படுகின்றனர். மறுபக்கம் ஸ்வேதா ஆபிசில் நடந்த விஷயத்தை சொல்லி கடுப்பாகிறாள்.

அப்போது துரை அங்கு வர எப்பவும் அடிவாங்கிட்டு தான் இருப்பியா என்று திட்டுகின்றனர். நான் திருப்பி அடிக்கும் போது நான் யார்னு உங்களுக்கு தெரியும் என்று சொல்கிறான். அடுத்த நாள் காலையில் பாரதி எழுந்து தமிழை ஸ்கூலுக்கு ரெடி பண்ண அவளது ரூமுக்கு போக தமிழை காணாததால் வீடு முழுக்க தேடி ஆதியை எழுப்பி பதறுகிறாள்.  வீட்டிற்கு வெளியே வந்து தேடும் போது தமிழ் வைத்து விளையாடும் பொம்மை கீழே கிடக்க இதை பார்த்து பாரதி இன்னும் அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Tamil Serial News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: