Advertisment
Presenting Partner
Desktop GIF

திருட்டு பழி, கொலை முயற்சி, பொய்யான கர்ப்பம்... க்ரைம் ரேட் எகிறும் ஜீ தமிழ் சீரியல்கள்

ஜீ தமிழின முக்கிய சீரியல்களான கார்த்திகை தீபம், மீனாட்சி பொண்ணுங்க, மற்றும் மாரி சீரியல்களின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
maari karthikai deepam meenakshi ponnunga

கார்த்திகை தீபம் - மீனாட்சி பொண்ணுங்க - மாரி

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்கள் ஒளிபரப்பி வரும் ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை களத்துடன் கூடிய சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், அதிக டிஆர்பி  புள்ளிகளை பெற்றுவரும் கார்த்திகை தீபம், மீனாட்சி பொண்ணுங்க, மற்றும் மாரி சீரியல்களின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்.

கார்த்திகை தீபம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மீனாட்சி எதுவாக இருந்தாலும் பார்த்துக்கலாம் என்று சொல்லி தீபாவை சமாதானம் செய்த நிலையில் இன்று, பாட்டு போட்டி தொடங்க மலர் நான் தான் முதலில் பாடுவேன் என்று ஸ்டேஜ் ஏறி பாடாமல் தயக்கத்திலேயே இருக்கிறாள்.  இதற்கான காரணம் என்ன என்பது தெரிய வரும் வகையில் பிளாஷ்கட் ஓபன் ஆகிறது.

தீபாவும் மீனாட்சியும் பேசி முடித்ததை தொடர்ந்து தீபா பாட்டு பாடி பயிற்சி செய்ய இதை கேட்ட மலர் மிரண்டு போகிறாள். தீபாவுடன் போட்டியிட்டால் நிச்சயம் தோல்வி தான் என உணர்ந்து கொண்டதால் பாடாமல் அப்படியே மயக்கம் போட்டு விழுந்தது போல் நடித்து போட்டியில் இருந்து தப்பிக்கிறாள். இதனால் இந்த போட்டி தடைபட ஐஸ்வர்யா தீபாவுக்கு எதிராக என்ன செய்வது என யோசித்து அம்மாவுக்கு போன் செய்கிறாள்.

அவளது அம்மா நகையை திருடி தீபா மீது பழி போடலாம் என்று சொல்ல மலர் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து நகையை திருடி தீபா பேக்கில் வைத்து விடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மீனாட்சி பொண்ணுங்க

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சம்மந்தி முறை செய்ய கோவிலுக்கு கிளம்பிய நிலையில் இன்றைய எபிசோட்டில, சக்தி மீனாட்சிக்கு போன் செய்ய, மீனாட்சியின் போனை சங்கிலி எடுத்து மீனாட்சிக்கு ஆபத்து என்பது போல் கிண்டலாக பேச சக்தி உடனே அம்மாவை சென்று பார்க்க வேண்டும் என்று வெற்றியிடம் சொல்லி புறப்படுமகிறாள். இந்த நேரத்தில் ரங்கநாயகி வந்து காப்பு கட்டி இருக்கு என தடுத்து நிறுத்துகிறாள்.

மேலும் எப்போது மீனாட்சி வருவார்கள் என்று கேட்கிறாள், வந்துவிடுவார்கள் என்று சக்தி சமாளிக்கிறாள்.  இங்கே மீனாட்சியும் யமுனாவும் கலசத்தை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடி வருகிறார்கள். அதற்குள் விழா ஆரம்பித்து விட புஷ்பாவும் சங்கிலியும் கலச சொம்புடன் ரங்கநாயகியின் வீட்டிற்கு வருகிறார்கள். நானும் உங்களுக்கு சம்மந்தி முறைதான். எனவே நான் சம்மந்தி மரியாதை செய்கிறேன் என்று புஷ்பா சொல்கிறாள்.

அதற்குள் மீனாட்சியும் யமுனாவும் வேகமாக வந்து சேர்ந்து, வழியில் சில இடஞ்சல்கள் ஏற்பட்டு விட்டதாக கூறி மீனாட்சி சம்பந்தி மரியாதை செய்து கலச சொம்பை ரங்கநாயகிக்கு கொடுக்கிறாள்.  பிறகு கலச சொம்பு எடுத்துக்கொண்டு வரும்போது சங்கிலி இடைமறித்து பிரச்சனை செய்ததாக ரங்கநாயகியிடம் கூற ரங்கநாயகி புஷ்பாவையும் சங்கிலியையும் திட்டுகிறாள். ஆனால் புஷ்பா மீனாட்சி பொய் சொல்வதாக சொல்லிவிட்டு ரங்கநாயகி வீட்டிலிருந்து வெளியேறுகிறாள்.

உடனே புஷ்பா பூஜா கோகிலா மூவரும்  திட்டம் போடுகிறார்கள்.  என் மகனுக்கு டைவர்ஸ் அப்ளை செய்தும் மீனாட்சி பயப்படவில்லை, மெஸ்ஸை புஷ்பாவின் பெயரிலும் அவள் எழுதிக் கொடுக்க சம்மதிக்கவில்லை என்று கோகிலா கூற, மீனாட்சியை என்னதான் செய்வது என்று அனைவரும் யோசிக்க, இதுதான் சரியான நேரம்.

ரங்கநாயகிக்கு கல்யாண விழா காப்பு கட்டி இருப்பதால் சக்தியும் எங்கும் வரமாட்டாள்.  ஆதனால் மீனாட்சி இப்போது தனியாக மாட்டிக் கொண்டிருக்கிறாள். அவளை  கொலை செய்து விடுவோம் என்று புஷ்பா திட்டம் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மாரி:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஸ்ரீஜா மயக்கம் போட்டு கீழே விழுந்த நிலையில் இன்று, ஸ்ரீஜாவை தூக்கி எல்லாரும் பதற்றமாகி டாக்டரை கூப்பிட்டு பரிசோதிக்க அவர் ஸ்ரீஜா கர்ப்பமாக இருப்பதாக சொல்ல எல்லாரும் சந்தோசப்படுகின்றனர், தாரா தனக்கு ஒரு வாரிசு வர போகுது என நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறாள்.

அதனை தொடர்ந்து ஸ்ரீஜா டாக்டர் கிளம்பியதும் பின்னாடியே வர டாக்டர் இது நிஜ கர்ப்பம் இல்லனு சீக்கிரம் எல்லாரிடமும் சொல்லிடு, அதான் உனக்கு நல்லது என்று சொல்ல ஸ்ரீஜா மாரிக்கு போட்டியாக கர்ப்பமாக இருப்பது போல் நடிப்பது தெரிய வருகிறது.  இதன் தொடர்ச்சியாக மாரியும் சூரியாவும் ஹாஸ்பிடலுக்கு வந்து ஸ்கேன் செய்து பார்க்க சூர்யா குழந்தை தெரியுது என சந்தோசப்பட நர்ஸ் அதுக்குள்ள குழந்தையெல்லாம் தெரியாது என சூர்யாவை கலாய்க்கிறார்  

பிறகு தாராவும் ஸ்ரீஜாவும் இதே ஹாஸ்பிடலுக்கு வர மாரிக்கு ஸ்ரீஜா கர்ப்பம் என்ற விஷயம் தெரிய வர அவளும் சந்தோஷமடைகிறாள். அடுத்து சூரியாவும் மாரியும் வழக்கமாக சந்திக்கும் சித்தரை வந்து பார்க்க அங்கு வந்திருக்கும் மூன்று சித்தர்கள் மாரி தெய்வ சக்தி உடைய குழந்தையை பெற்றெடுக்க போகிறார். நாங்களும் இந்த குழந்தைக்காக தான் காத்துட்டு இருந்தோம் என்று சொல்லி அவள் காலில் விழுந்து மரியாதை செய்கின்றனர்.

இங்கே ஹாஸ்பிடலில் ஸ்ரீஜா டாக்டருக்கு பணத்தை கொடுத்து தன் பக்கம் இழுத்து கர்ப்பமாக இருப்பது போலவே பொய்யான ரிப்போர்ட்டை ஏற்பாடு செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment