அர்ச்சனாவுக்கு சாதகமாக சிவகாமி... ஏமாற்றத்துடன் சரவணன்...!

Tamil Serial Update : சிவகாமியின் இந்த பேச்சை கேட்டு அவரது ஆசை மருமகள் அர்ச்சனாவுக்கு உள்ளுக்குள் சந்தோஷம் பூத்து குலுங்குகிறது.

Tamil Serial Update : சிவகாமியின் இந்த பேச்சை கேட்டு அவரது ஆசை மருமகள் அர்ச்சனாவுக்கு உள்ளுக்குள் சந்தோஷம் பூத்து குலுங்குகிறது.

author-image
WebDesk
New Update
அர்ச்சனாவுக்கு சாதகமாக சிவகாமி... ஏமாற்றத்துடன் சரவணன்...!

Tamil Serial Rating Raja Rani 2 Update : நீங்களே இப்படி அதிரடியாக முடிவுனு சொல்லிட்டீங்களே அப்படி என்னதான் முடிவு செய்ய போகிறார் சரவணன் என்று யோசிக்க வைத்த சீரியல் தான் ராஜா ராணி 2.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய சிரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. வழக்கமான சீரியல் பார்மெட்டில் ஒளிபரப்பாகும் மற்றொரு சீரியல். என்னதான் நாயகி 24 கேரட் சொக்க தங்கம் என்றாலும் அவரை யாரும் நம்பமாட்டார்கள. நடக்கும் எல்லா தப்பையும் அவள் மீதுதான் பழி போடுவார்கள். ஆனால் சைலண்டாக இருந்து எல்லா தப்பையும் செய்வது வில்லிதான் என்று தெரிந்தாலும் அவருக்கான மதிப்பு வீட்டில் குறைவதில்லை.

இந்த சம்பவத்திற்கு பெஸ்ட் உதாரணம்தான் ராஜா ராணி 2. சந்தியா என்னதான் மாமியார் குடும்பத்திற்கு நல்லதே நினைத்து வேலை செய்தாலும், அர்ச்சனா செய்யும் பெரிய தப்புக்கள் எல்லாம் சந்தியா மீது தான் வந்து விழுகிறது. இதில் யார் பக்கம் உண்மை என்று கூட பார்க்காமல், ஜட்ஜ் அம்மா சிவகாமி எல்லா தப்புக்கும் சந்தியாதான் காரணம் என்று ஒரே வார்த்தையில் உண்மை அத்தனையும் பொய்யாக்கிவிடுவார்.

இதில் அர்ச்சனா செய்த தப்புக்கள் அனைத்தும் அவர்கள் வீட்டில் அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் அவளை ஏன் வீட்டில் வைத்திருக்கிறார்கள் என்றால் அவள் இப்போது கர்ப்பம். அது ஒரு காரணம். ஆனால் அவள் வீட்டை விட்டு வௌயேற்றிவிட்டால் அந்த வீட்டில் வில்லத்தனம் செய் ஆள் இல்லை.அதனால் இயக்குநர் அர்ச்சானவுக்கு பெவராகத்தான் நடந்துகொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

Advertisment
Advertisements

ஏற்கனவே மாமியாரை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் இழுத்துச் சென்ற அர்ச்சனா இந்த தப்பை ஏன் செய்திருக்க கூடாது என்று சிவகாமி அம்மா யோசிக்க தொடங்கினால் சீரியல் விறுவிறுப்பாக செல்லும் ஆனால் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல தொடக்கத்தில் சந்தியாவை சந்தேகப்பட்ட சிவகாமி தனது சந்தேகத்தை இப்போதுவரை மாற்றாமல் அப்படியே வைத்திருக்கிறார் அர்ச்சான செய்த தவறுகள் தெரிந்தும் கூட

இந்நிலையில், தற்போது சந்தியாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில, அவளை ஒரு போலீஸ் ஆபீசராக ஆக்க வேண்டும் என்று நினைக்கும் சரவணன் தனது ஆசையை அம்மாவிடம் சொல்கிறான். ஆனால் போலீஸ் என்றாலே என்று பிடிக்காது அதிலும் என் மருமகளை (இப்போ மட்டும் தான் சிவகாமிக்கு சந்தியா மருமகள், அர்ச்சனா தப்பு செய்யும் போது சந்தியா குற்றவாளி) போலீஸ் ஆக்க போறனு என்கிட்ட சொல்ற இதை அப்போதே மறந்துவிடு என்று சொல்லிவிடுகிறார்.

சிவகாமியின் இந்த பேச்சை கேட்டு அவரது ஆசை மருமகள் (தப்பே செய்தாலும் அவளின் நடிப்பை பார்த்து மயங்குவதால் ஆசை மருமகள்) அர்ச்சனாவுக்கு உள்ளுக்குள் சந்தோஷம் பூத்து குலுங்குகிறது. இதனால் சரணவன் அடுத்து என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் என்ன நடக்க போகுது அம்மாவுக்கு தெரியாமல் சந்தியாவை படிக்க வைப்பார் இந்த உண்மை ஒருநாள் சிவகாமிக்கு தெரியவரும் இந்த எபிசோடு வருவதற்கு இன்று ஒன்றிரண்டு வருடங்கள் ஆகலாம் பொறுத்திருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: