Advertisment

ராதிகாவை நடுவழியில் கையைப் பிடித்து இழுத்து... பக்கா லோக்கலாக மாறிய கோபி!

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ராதிகா வில்லியாக மாறும் தருணம் வந்துவிட்டது என்று பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

author-image
WebDesk
Aug 28, 2022 17:45 IST
New Update
ராதிகாவை நடுவழியில் கையைப் பிடித்து இழுத்து... பக்கா லோக்கலாக மாறிய கோபி!

பாக்யாவை விவாகரத்து செய்த கோபி வீட்டை விட்டு வெளியேறியுள்ள ராதிகா வீட்டில் தஞ்சமடைய நினைத்தார். ஆனால் அவரும் இடம் தராத நிலையில், தற்போது நடு ரோட்டில் ராதிகாவின் கையை பிடித்துக்கொண்டு கோபி பேசும் காட்சிகள் தொடர்பான ப்ரமோ வெளியாகியுள்ளது.

Advertisment

திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தால என்னென்ன நடக்கும் என்பதையும் ஒரு குடும்ப தலைவி தன் வாழக்கையில் சந்திக்கும் பிரச்சினைகளையும் மையப்படுத்தி ஒளிபரப்பாகி வரும சீரியல் பாக்கியலட்சுமி.

கோபி பாக்யா தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் கோபி பாக்யாவின் நெருங்கிய தோழியும் தனது முன்னாள் காதலியுமான ராதிகாவுடன் திருமணத்திற்கு தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்த விஷயங்களை தெரிந்துகொண்ட பாக்யா, கோபியை விவாகரத்து செய்துவிட்ட நிலையில்,வீட்டை விட்டும் வெளியேற்றி விட்டார்.

ஆனால் வீட்டை கட்டிய 40 லட்சம் பணத்தை கேட்ட கோபிக்கு அதையும் தானே தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார் பாக்யா. கோபி வீட்டை விட்டு வெளியேறினாலும், ஈஸ்வரி, செழியன், இனியா என மூவரும் கோபிக்கு ஆதரவாகவும், எழில் தாத்தா ஜெனி ஆகிய மூவரும் பாக்யாவுக்கு ஆதரவாகவும் உள்ளனர்.

அதேபோல் கோபி வீட்டை விட்டு போவதற்கு முன்னாள் எப்படி இருந்ததோ அதில் துளியும் மாற்றம் இல்லாமல் உள்ளது. கோபி நல்லவர் போலவும் பாக்யாதான் தப்பு செய்தது போலவும் கதை நகர்ந்துகொண்டிருக்கிறது. இதனிடையே அடுத்த வாரத்திற்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பாக்யாவின் கணவன் என்பதால் கோபியை வெறுக்கும் ராதிகா, அவரை வீட்டிற்குள் சேர்க்காத நிலையில், ராதிகாவுடன் சேர தனது விடா முயற்சியை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறார் கோபி இந்த முயற்சியின் பலனாக தற்போது கோபி நடுரோட்டில் ராதிகாவின் கையை பிடித்துக்கொண்டு. ப்ளீஸ் ராதிகா நாம கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொல்கிறார்.

அதற்கு ராதிகா விடுங்க கோபி என்று சொல்ல, உனக்கும் என்னோட சேர்ந்து வாழ ஆசைதானே ராதிகா என்று கேட்க, அதுபற்றி முடிவெடுக்க இன்னும் கொஞ்சம் டைம் வேணும் என்று ராதிகா சொல்கிறார். அதற்கு கோபி நான் செத்தாதான் நடக்கும் என்று சொல்ல அவரசரப்படாதீங்க கோபி நம்பிக்கையோட இருங்க நல்லதே நடக்கும் என்று சொல்லிவிட்டு செல்கிறாள்.

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சீரியலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிலும் ராதிகா வில்லியாக மாறும் தருணம் வந்துவிட்டது என்று பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment