Advertisment

மகள் உடலை பார்க்க சென்னை வராத இளையராஜா : காரணம் என்ன? கடைசி நேரத்தில் வெளியான தகவல்

விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்ட பவதாரணியின் உடல் சென்னை டி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவரின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட் உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ilayaraja Bhavatharini

இளையராஜா - பவதாரணி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், மகளின் உடலை பார்க்க இளையராஜா வரவில்லை என்றும், அதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது்

Advertisment

தனது இனிமையான குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தந்தையை போலவே இசையமைப்பிலும் அசத்தியுள்ள பவதாரணி 47 வயதில் மரணமடைந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறது. குழந்தை நட்த்திரம் பாடகியாக அறிமுகமான பவதாரணி தனது தனித்தவமாக குரலின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருந்தார்.

1976-ம் ஆண்டு பிறந்த பவதாரணி, 1995-ம் ஆண்டு பிரபுதேவா, ரோஜா நடிப்பில் வெளியான ராசையா படத்தில் இடம் பெற்ற மஸ்தானா மஸ்தானா என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார். அதற்கு முன்பே குழந்தை நட்சத்திரமாக மலையாளம் மற்றும் தமிழில் சில பாடல்களை பாடியுள்ளார். இவரது பாடல் மனதை மயக்கும் வகையில் அமைந்திருக்கும்.  30க்கு மேற்பட்ட தமிழ் படங்களில் பாடியுள்ள பவதாரணி, தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பாடல்களை பாடியுள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு வெளியான மித்ர் மை ப்ரண்ட் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமான பவதாரணி, அமிர்தம், இலக்கணம், வெள்ளச்சி உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு வெளியாக மாயநதி என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார். புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்த பவதாரணியின் உடல் தற்போது சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது.

விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்ட பவதாரணியின் உடலை, அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்ட நிலையில், சென்னை டி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவரின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட் உள்ளது. திரைத்துறை பிரபலங்கள், அவருடன் பணியாற்றியவர்கள் என பலரும் பவதாரணி உடலுக்கு அஞ்சலி செலுத்த இளையராஜாவின் இல்லத்தில் காத்திருக்கின்றனர். அஞ்சலி செலுத்தி முடித்தபின், பவதாரணியின் உடல் தேனிக்கு கொண்டுசெல்லப்பட்ட அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இலங்கையில் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த இளையராஜா, தனது மகள் இறந்த செய்தியை கேட்டு உடனடியாக மருத்துவமனை சென்று பார்த்த நிலையில், இன்றைய தினம் அவர், சென்னை வர முடியாது என்பதால், பவதாரணியின் உடலுக்கு சென்னையில் அவரால் அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் நாளை அவரது உடல் தேனியில் அடக்கம் செய்யப்ப உள்ளதால், இளையராஜா இலங்கையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்து தனது மகளின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துகொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ilaiyaraja Bhavatharini
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment