New Update
/indian-express-tamil/media/media_files/IuHhup3gQntojCJqxGwD.jpg)
பாடகர் மனோ மகன்கள் மீது சிறுவர்களை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை தாக்கும் புதிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
பிரபல பாடகர் மனோவின் மகன்கள் சிறுவர்களை தாக்கியதாக அவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மனோவின் மகன்களை சிலர் தாக்குவது போன்ற சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல பாடல்கள பாடியுள்ள பிரபல பாடகர் மனோ, தற்போது விஜய் டிவியின் மயூசிக் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வருகிறார். இதனிடையே இவருடைய மகன்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றபோது மதுபோதையில் சிறுவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து, இது குறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் மனோவின் மகன் மற்றும் அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. இந்த வழக்கு தொடர்பான மனோவின் மகன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இதனிடையே பாடகர் மனோவின் மகன்கள் சிறுவர்களை தாக்கியதாக சிசிடிவி காட்சிகள் வெளியானதை தொடர்ந்து தற்போது, பாடகர் மனோவின் மகன்களை சிலர் தாக்குவது போன்ற வீடியோ பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ பதிவில், 10 பேர் கொண்ட கும்பல் இரு சக்கர வாகனத்தில் வந்து, மனோவின் மகன்களை தாக்குவது போன்ற காட்சிகள் உள்ளது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.