/indian-express-tamil/media/media_files/yQ1rUhLeG5hrS1KDJQvH.jpg)
அன்பே வா சீரியல்
சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சன்டிவி சீரியல்களுக்கு, அதிக ரசிகர்கள் கூட்டம் உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிவரை பல சீரியல்கள் ஒளிபரப்பி வரும் நிலையில், இதில் பல சீரியல்கள் விறுவிறுப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் சன் டிவியின் அன்பே வா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. விராட் டெல்னா டேவிஸ் நாயகன் நாயகியாக நடித்து வரும் இந்த சீரியலில் பூஜா, ஸ்வாதி, தாரா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் அதிகரித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் நாயகி பூமிகாவுக்கும் ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இவ்வளவு பாசிட்டீவ் இருந்தாலும் சமீபத்தில் இந்த சீரியலில் நாயகி பூமிகா இறப்பது போல் காட்சிகள் வந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளர். நாயகி இறந்துவிட்டால் அடுத்த சில எபிசோடுகளில் சீரியல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிரடி திருப்பம் தரும் வகையில், தொடர்ந்து சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் தற்போது ஸ்ரீகோபிகா நாயகியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் அன்பே வா சீரியல் பிப்ரவரி மாதம் முடிவுக்கு வர உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது, இந்த சீரியல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சரிகம நிறுவனம் தயாரிக்கும் 2 புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளதால், அன்பே வா சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவை தெரிந்த ரசிகர்கள் ஒரு பக்கம் ஹேப்பியாக இருந்தாலும், சீரியலின் தீவிர ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.