முடிவுக்கு வரும் கயல் சீரியல்? நாயகி சைத்ரா கொடுத்த நச் பதில்; ட்விஸ்ட்க்கு தயாரா?

சன் டி.வியின் கயல் சீரியலில், எழில் - கயல் திருமணம் முடிந்துவிட்டதால், இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

சன் டி.வியின் கயல் சீரியலில், எழில் - கயல் திருமணம் முடிந்துவிட்டதால், இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Kayal Serial Chaithra

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சன்டிவியின் கயல் சீரியலில் சஞ்சீவ் – சைத்ரா ரெட்டி ஜோடியாக நடித்து வருகின்றனர். இந்த சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து சைத்ரா ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அவர்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாகவும் மாறிவிட்டது. இதனை பயன்படுத்திக்கொண்ட சன் டிவி வாரம் முழுவதும், காலை 10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை சீரியல் மட்டுமே ஒளிபரப்பி வருகிறது.  சன் டிவி சீரயில்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் மற்ற சேனல்களின் சீரயில்களை பின்னுக்கு தள்ளி முன்னணியில் இருந்து வருகிறது.

இதன் காரணமாக மற்ற சேனல்களில் நடித்த நட்சத்திரங்கள் கூட தற்போது சன்டிவி சீரியல்களில் களமிறங்கி வருகின்றன.  அந்த வகையில், இனியா சீரியலில், ஆலியா மானசா, கயல் சீரயிலில் சைத்ரா ரெட்டி, மருமகள், சீரியலில், கேப்ரியல்லா, மிஸ்டர் மனைவி சீரியலில் ஷபானா, மூன்று முடிச்சு சீரியலில், சுவாதி கொண்டே ஆகியோர் மற்ற சேனல் சீரியலில் நடித்து தற்போது சன்டிவி சீரியலில் என்ட்ரி ஆகியுள்ளனர்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் நெகடீவ் ரோலில் நடித்த கவனம் ஈர்த்த நடிகை சைத்ரா ரெட்டி கயல் சீரியல் மூலம் சன் டிவியில் நாயகியாக அறிமுகமானார். விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் நாயகனாக நடித்த சஞ்சீவ் ஜோடியாக நடித்த இந்த சீரியல், தொடக்கம் முதலே டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது. கயல் – எழில் திருமணத்திற்கு பல்வேறு தடைகள் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது இவர்களின் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

Advertisment
Advertisements

கயல் – எழில் திருமணம் முடிந்துவிட்டதால், இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு பதில் அளித்துள்ள சைத்ரா ரெட்டி, சீரியல் இப்போதைக்கு முடிவு இல்லை. இதன் பிறகு தான் பல ட்விஸ்ட்கள் வர உள்ளது. நான் எங்கு சென்றாலும் சீரியல் முடிய போகிறதா என்று கேட்கிறார்கள். ஆனால் இதுதான் அதற்கு உண்மையான பதில் என்று கூறியுள்ளார். இதன் மூலம், சீரியலில் அடுத்து என்ன ட்விஸ்ட் வரப்போகிறது என்பது குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Kayal

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: