/indian-express-tamil/media/media_files/OljfQ2LRWTGSkqvy8Kvt.jpg)
பிரியமான தோழி சீரியல்
சன்டிவியில் பகல் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் ஒன்று விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த சீரியல் இதுவரை 500 எபிசோடுகளை கடந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் ஒளிபரப்பி, நகரத்தில் இருந்து கிராமம் வரை ரசிகர்கள் பட்டாளத்தை அதிகம் வைத்துள்ள சேனல் சன் டிவி. காலை 10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பெரும்பாலான சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அதே சமயம் பகல் நேரத்தில் வெளியாகும் சீரியல்கள் அவ்வளவாக கவனத்தை ஈர்ப்பதில்லை. இதனால் ஒரு சில சீரியல்கள் தொடங்கி சில மாதங்களிலேயே முடிவுக்கு வந்துவிடும். அந்த வகையில் தற்போது சன்டிவி சீரியல் ஒன்று இந்த பட்டியலில் இணைந்துள்ளது. சன் டிவியில் பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் பிரியமான தோழி. விக்கி ரோஷன், சான்ரா பாபு, வி.ஜே.கௌசிக் கேப்ரியல் தீப்தி ராஜேந்தர் ஆகியோர் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் தற்போதுவரை 500 எபிசோடுகளை கடந்துள்ள நிலையில், விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வப்போது புதிய சீரியல்களை களமிறக்கும் வகையில் பழைய சீரியல்களை முடிவுக்கு கொண்டு வருவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்ட நிலையில், தற்போது பிரியமான தோழி சீரியலும் இந்த வரிசையில் வந்துள்ளது.
விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என்பதால், அடுத்து பகல் 1 மணிக்கு எந்த சீரியல் ஒளிபரப்பாகும் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே போல் ஷபானா நடித்து வரும் மிஸ்டர் மனைவி சீரியலும் விரைவில் முடிவுக்கு வருவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.