/indian-express-tamil/media/media_files/YUg0sfqKqeL7ud2pwyEt.jpg)
சூப்பர் சிங்கர் ஹர்ஷினி நேத்ரா
தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்திய ஹர்ஷினி நேத்ரா தேர்ச்சி பெற்றிருக்கும் நிலையில், அவர் பெற்ற மதிப்பெண்கள் தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகள் படிப்பு மட்டுமல்லாமல் விளையாட்டு உள்ளிட்ட தங்களது தனித்திறமைகளியும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல் அவர்கள் திறமைகளை நிரூபிக்கும் வகையில் பல ஷோக்கள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல பெண்கள் குநழ்தைகள் என பலரும் பாடல் பாடி அசத்தி வருகின்றனர்.
அந்த வகையில், விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடல் பாடி ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்த ஹர்ஷினி நேத்ரா இந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். பாடல்கள் மூலம் பலரையும் கவர்ந்த இவர். தற்போது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பாடல் மட்டுமல்ல படிப்பும் தனக்கு நன்றாக வரும் என்று நிரூபித்துள்ளார். இன்று வெளியான 10-ம் வகுப்பு தேர்வு முடிவில் ஹர்ஷினி 384 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்ததால், படிப்பில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. ஆனாலும் பாடல் பாடுவது மற்றும் படிப்பது என இரண்டிற்கும் சம முக்கியத்துவம் கொடுத்ததால், இந்த மதிப்பெண் என்னால் எடுக்க முடிந்தது. 384 மதிப்பெண் என்பது குறைவானது என்று நான் நினைக்கவில்லை. சென்னையில் நான் அரசு பள்ளியில் தான் படித்துக்கொண்டிருக்கிறேன்.
450 மதிப்பெண்கள் எடுப்பேன் என்று வீட்டில் அனைவரும் எதிர்பார்த்தார்கள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்தால் சரியாக மதிப்பெண் எடுக்க முடியாமல் போய்விட்டது. 11-ம் வகுப்பில் எக்னாமிக்ஸ் பிரிவில் படிக்கலாம் என்று நினைக்கிறேன் என முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.