Tamil Reality Show Super Singer Junior Season 8 Update : தமிழ் சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவதில் விஜய் டிவிக்கு நிகர் இல்லை என்று சொல்லாம். அந்த அளவிற்கு சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை சம அளவில் கொடுத்து ரசிகர்கள மத்தியில் இடம் பிடித்து வருகிறது. இந்த ஷோக்கள் மூலம் ஏராமான திறமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Advertisment
காமெடி, பாட்டு என பல கோணங்களில் நிகழ்ச்சிகளை கொடுத்து வரும் விஜய் டிவியில், சூப்பர் சிங்கள் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இதுவரை 7 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில பங்கேற்ற பல பாடகர்கள் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமாக உள்ளர்.
அதேபோல் தற்போது ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல்வேறு தரப்பினரும் கவனித்து வருகின்றனர். இதில் பங்கேற்றுள்ள சிறுவர்கள் பலரும் நடுவராக உள்ள அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்துவம் வகையில் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதில் குறிப்பாக கிரிஷாங்க என்ற சிறுவன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார். அதற்கு முக்கிய காரணம் அவர் பாடிய பாடலும், நடுவராக வந்த எஸ்பிபி சரண் இந்த பாடலுக்கு அந்த இளம் பாடகருக்கு கொடுத்த அங்கிகாரமும்தான். சமீபத்தில் வலைதளங்களில் பரபரப்பாப பேசப்பட்ட படம் ஜெய்பீம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றது.
Advertisment
Advertisements
மேலும் ஆஸ்கார் பட்டியலிலும் இணைந்த இந்த படத்தில் தலைகோதும் இளங்காத்து என்ற பாடல் பட்டி தொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பியது. இந்த பாடலை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், பங்கேற்ற கிரிஷாங் சிறப்பாக பாடி அசத்தினார். பாடலை பாடி முடித்தவுடன், நடுவர்களாக பங்கேற்ற பாடகி சித்ரா, பாடகர் ஷங்கர் மகாதேவன்,கல்பனா உள்ளிட்டோர் வெகுவாக பாராட்டினர்.
இந்த பாடலை கிரஷாங் பாடும்போதே எமோஷனல் ஆகி கண்கலங்கிய எஸ்பிபி சரண் வெறும் பாராட்டோடு நிறுத்திவிடாமல், நீ இப்படியே சென்றால், சுமார் 70 அல்லது 80 வருடங்கள் பாடலாம் என்று கூறி நீ தான் குட்டி எஸ்பிபி என்றும் நீ கடவுளின் குழந்தை என்றும் பாராட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “