/indian-express-tamil/media/media_files/2025/05/26/RiIaTyuCEznbIY8R9chi.jpg)
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஜூனியர் சீசன் 10 இறுதிக்கட்டத்திற்கு வந்ததை தொடர்ந்து நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே சென்னை, நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தக் லைப் நாயகன் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.
தமிழில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற, விஜய் டிவியில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனை மேலும் அதிகரிக்கும் வகையில், சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர் என்று அடுத்தடுத்து சீசன்கள் தொடங்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கிய நிலையில், இந்த நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.
கமல்ஹாசன் நடித்த தக் லைப் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் பிரமோஷனுக்காக சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் டைம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் மற்றும் ஏ ஆர் ரகுமான் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியில் தனது குரலின் மூலம் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ள காயத்ரி டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
தொடக்கத்தில் இருந்தே இவர் தான் டைட்டில் வின்னராக வருவார் என்று பலரும் கணித்திருந்த நிலையில், தற்போது அவரே வெற்றியும் பெற்றுள்ளார். அவருக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை பிடித்த நஸ்ரின் வெற்றி பெற முடியாமல் போனதால் மேடையில் கண்கலங்கியது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவருக்கு, 2-வது பரிசாக, 10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. அதேபோல மூன்றாவது இடத்தை சாரா சுருதி மற்றும் ஆத்யா இரண்டு பேருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.