Advertisment

முடியப் போற நேரத்துல டி.ஆர்.பி-யில் உயரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்: டாப் சீரியல்கள் எவை?

சின்னத்திரையில் விரைவில் முடிவுக்கு வர உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது டி.ஆர்.பி ரேட்டிங்கில் புள்ளிகள் அதிகம் பெற்று வருகிறது.

author-image
WebDesk
New Update
Serial TRB

தமிழ் சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்

சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இன்றைய காலக்கட்டத்தில் அவ்வப்போது புதிய சீரியல்கள் களமிறங்குவதும் பழைய சீரியல்கள் முடிவுக்கு வருவதும் தொடர்ந்து வருகிறது. ஒரு சில சீரியல்கள் தொடங்கிய சில வாரங்களிலேயே முடிவுக்கு வரும் சூழலும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் டி.ஆர்.பி ரேட்டிங்.

Advertisment

மக்கள் ஆதரவளிக்கும் நிலையை பொறுத்து ஒவ்வொரு சீரியலின் டி.ஆர்பி ரேட்டிங் மாறி வருகிறது. இதில் குறிப்பாக கிராமபுறங்களில் சன்டிவி சீரியலுக்கும், நகர்புறங்களில் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி சீரியல்களே அதிகம் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், விஜய் டிவி சீரியல்கள் சரிவை சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடப்பு ஆண்டின் 40-வது வாரத்திற்கான டி.ஆர்.பி ரேட்டிங் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது இதில் வழக்கம்போல், முதல் 5 இடங்களில் சன்டிவி சீரியல்களே ஆக்கிரமித்துள்ளனர். கடந்த வாரம் 2-வது இடத்தில் இருந்த சன்டிவியின் எதிர்நீச்சல் இந்த வாரம் முதலிடத்திலும், கயல் 2-வது இடத்திலும், சுந்தரி 3-வது இடத்திலும், வானத்தைபோல 4-வது இடத்திலும், இனியா 5-வது இடத்திலும் உள்ளனர்.

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம், அந்த சீரியலுக்கு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது. ஆனாலும் அவரது பழைய காட்சிகளை வைத்து வாய்ஸ் இல்லாமல் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த வாரம் எழுத்தளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி ஆதி குணசேகரனாக களமிறங்கினார்.

ஆனால் அவர் வந்த முதல் காட்சியே போலீஸை அடிப்பது போல் வைத்து அந்த கேஸில் அவர் கைதாவது போல் காட்சிபடுத்தி அவரை சிறைக்கு அனுப்பிவிட்டார்கள். இதனால் அடுத்து குணசேகரன் வருவரா அல்லது அவர் சிறைக்கு சென்றதை வைத்து அவர் இல்லாமல் சீரியல் தொடருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதில் ரசிகர்கள் மாரிமுத்துவின் ஏய் இந்தாமா என்ற வசனத்தை மிஸ் செய்தாலும், எதிர்நீச்சல் வழக்கம்போல் வரவேற்பை பெற்று வருகிறது.

தொடர்ந்து டி.ஆர்.பி ரெட்டிங்கின் 6-வது இடத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளனது. 7-வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியல் உள்ளது. இந்த சீரியலில் அமிர்தாவின் இறந்த கணவர் உயிருடன் வருவது போல் காட்சி வருவதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், ரசிகர்கள் அமிர்தா கணேஷ் காட்சிகளுக்கு ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை.

அதேபோல் 8-வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளது. பிரசாந்த் பற்றிய உண்மை வெளி வருவமா என்ற எதிர்பார்ப்பு இருந்ததால், கடந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் நல்ல புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது. அதே சமயம் பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவுக்கு வந்த பின் இந்த சீரியலின் 2-வது சீசன் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே விஜய் டிவி சீரியலிகளில், சிறகடிக்க ஆசை முதலிடத்திலும், பாக்கியலட்சுமி 2-வது இடத்திலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 3-வது இடத்திலும் உளளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவுக்கு வர உள்ளதால் இதன் க்ளைமேக்ஸ் காட்சி எப்படி இருக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijaytv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment