Advertisment

8 வயதில் அறுவை சிகிச்சை... தந்தை இல்லாத வாழ்க்கை : அர்ச்சனா மகளின் உருக்கமான பதிவு

சின்னத்திரையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்த அர்ச்சனா 2004-ம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

author-image
WebDesk
New Update
Archana Sarah

வி.ஜே.அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் அர்ச்சனா. தனியார் டிவி சேனல்கள் அறிமுகமான 90-களில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான இவர், இளமை புதுமை உட்பட பல காமெடி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவரின் பேச்சுக்காகவே இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருந்தது.

Advertisment

சின்னத்திரையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்த அர்ச்சனா 2004-ம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு சாரா என்ற மகள் உள்ள நிலையில், திருமணத்திற்கு பின் சின்னத்திரையில் இருந்து விலகி இருந்த அர்ச்சனா, சமீபத்தில் ஜீ தமிழின் சரிகமப என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மீண்டும் ரீ-என்டரி ஆனார்.

அதனைத் தொடர்ந்து டாக்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த அர்ச்சனா விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். சின்னத்திரையில் முன்னணியில் இருந்த அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். ஆனாலும் விமர்சனங்களை கண்டுகொள்ளாத அர்ச்சனா தனது பணியில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தற்போது தனது மகள் சாராவுடன் இணைந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதனிடையே சாரா சின்னத்திரைக்கு வந்தததில் இருந்து அவருக்கான விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், என்னுடைய மெச்சுரிட்டி சோசியல் மீடியாவில் ஏன் இன்னும் விவாத பொருளாமா மாறியுள்ளது? சில வருடங்களுக்கு முன் நான் கொடுத்த பேட்டியின் தலைப்பில் சாரா இவ்வளவு மெச்சுரிட்யா என்று தலைப்பு போடப்பட்டது.

இதை பார்த்து ஒரு தரப்பினர் மெச்சுரிட்டி இல்லை என்றும், ஒரு தரப்பினர் அதிகமாக மெச்சுரிட்டி என்றும் கூறி தவறான வார்த்தைகளால் ட்ரோல் செய்து வருகின்றனர். நான் 8 வயதில் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். 11 வருடங்கள் தந்தையை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். என் அம்மா மீது எந்த தவறும் இல்லை என்றாலும், என் அப்பா அன்பு வெறுப்பு ஆகியவை குறித்து அவருடன் சண்டையிடுவதை பார்த்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் அவர் அறுவை சிகிச்சை செய்து மீண்டு வந்துள்ளார்.

என்னை பற்றி பல கருத்துக்கள் பல வளைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. அதற்காக நன்றி. நான் ஒரு பகுதி பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறேன் மக்களின் கருத்துக்களுக்கு நான் உட்பட்டவள் என்பதை புரிந்துகொள்கிறேன். ஆனால் என்னுடைய மெச்சுரிட்டி மற்றுமு் மெச்சுரிட்டி இல்லாத தன்மை குறித்து சமாளிக்கும் அளவில் இருக்கிறது. தவறான கருத்தை சாதாரணமாக பதிவிட்டு செல்வது ஈஸியான ஒன்று. நான் எனது பயணத்தை தொடங்கும் முன்பே விமர்சிக்கிறீர்கள்.

என்னுடைய குணத்தை தாக்கி பேசுகிறீர்கள். ஒரு நிமிடம் கொஞ்சமாவது என்னை பற்றி யோசித்து பாருங்கள். என்னுடைய குடும்பத்தினரின் மனநிலை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது புரியும் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment