Advertisment

கலக்கப்போவது யாரு புகழ் வெங்கடேஷ் கடத்தி தாக்குதல்... கூலிப்படை ஏவிய காதல் மனைவி: விசாரணையில் பகீர் தகவல்

காதல் திருமணம் செய்துகொண்டாலும் கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக மனைவியிடம் பேசாமல் இருந்துள்ளார் வெங்கடேஷ்

author-image
WebDesk
New Update
Venkatesh Kalakkapovathu yaru

கலக்கப்போவது யாரு வெங்கடேஷ்

சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஸ்டண்டப் காமெடியனாகவும் ஒரு சில படங்களிலும் நடித்துள்ள நடிகர் வெங்கடேஷ் காலை அவரது மனைவி உடைத்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சின்னத்திரையில் சன்டிவியில் அசத்தப்போவது யாரு, விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஸ்டாண்டப் காமெடியனாக அசத்தியவர் நடிகர் வெங்கடேஷ். இவர் தனது சகாக்கள் கிறிஸ்டோபர் சசி பாலா ஆகியோருடன் இணைந்து செய்யும் காமெடி சேட்டைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம். சின்னத்திரையில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் இருந்தது.

இந்நிலையில் மதுரையில் தபால் தந்தி நகரில் வசித்து வரும் வெங்கடேஷ் நேற்று முன்தினம் இரவு தனது காரில் டிரைவருடன் நாராயணபுரம் கண்மாய் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, காரை வழிமறித்த சில மர்மநபர்கள் டிரைவரை விரட்டிவிட்டு, வெங்கடேஷை சராமாரியாக தாக்கிய காலை உடைத்துள்ளனர். இதனால் வலி தாங்க முடியாமல் வெங்கடேஷ் கத்தியதால், சத்தம் கேட்: அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.

இதனால் சுதாரித்துக்கொண்ட மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட நிலையில், சம்பவ இடத்தில் பாஜக துண்டை விட்டு சென்றுள்ளனர். இதனிடையெ படுகாயத்துடன் இருந்த வெங்கடேஷை மீட்ட பொதுமக்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து மர்மநபர்களால் விரட்டப்பட்ட கார் டிரைவர் மோகன் காவல்துறையின் உதவியுடன் வெங்கடேஷை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதனிடையே சம்பவ இடத்தில் பாஜக துண்டு கிடந்த நிலையில், வெங்கடேஷை தாக்கியவர் பாஜக நிர்வாகியா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் கார் டிரைவர் மோகனுக்கு வெங்கடேஷை தாக்கிய மர்மநபர்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் வெங்கடேஷின் மனைவிக்கும் மர்மநபர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

நடிகர் வெங்கடேஷின் காதல் மனைவி காவல்துறையில் உள்ள தனது அக்கா மகனுடன் இணைந்து இந்த அடிதடி சம்பவத்தை அரங்கேற்றியதாகவும், இதற்கு டிரைவர் மோகன் மற்றும் அவரது கூலிப்படையினர் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. காதல் திருமணம் செய்துகொண்டாலும் கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக மனைவியிடம் பேசாமல் இருந்துள்ளார் வெங்கடேஷ் இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இவர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுக்கு வெங்கடேஷின் கார் டிரைவருக்கும் அவரு மனைவிக்கும் இடையேயான நட்புதான் என்று தெரியவந்துள்ளது. மேலும் வெங்கடேஷை காலை முறித்து வீட்டிலேயே முடங்கிவிட எண்ணிய அவரது மனைவி பானுமதி டிரைவர் மோகனுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெங்கடேஷ் தனது சமூகவலைதளங்களில் பாஜக குறித்து வெளியிட்ட பதிவுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதை தனக்கு சாதகமாக பயன்படுததிக்கொண்ட கார் டிரைவர் மோகன் மற்றும் வெங்கடேஷின் மனைவி இருவரும் இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியுள்ளனர்.

சம்பத்தை பாஜக பக்கம் திருப்புவதற்காக சம்பவம் நடந்த இடத்தில் அக்கட்சியின் கொடியை வீசி சென்றுள்ளனர். மக்களை மகிழ்வித்தி கலைஞனின் காலை உடைக்க அவரது மனைவியே கூலிப்படை ஏவிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெங்கடேஷை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகிகள் 3 பேரை மதுரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment