ரூ. 300 கோடி நட்டத்துல ஓடிய சேனல்... தூக்கி நிப்பாட்டிய இந்த ஒரு 'ஷோ': நிர்மலா பெரியசாமி ஓபன் டாக்
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி இவருக்கு ஒரு சிறப்பான அடையாளத்தை கொடுத்தது. இந்த நிகழ்ச்சியில் 900-க்கு மேற்பட்ட எபிசோடுகளை நிர்மலா பெரியசாமி தொகுத்து வழங்கியுள்ளார்.
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி இவருக்கு ஒரு சிறப்பான அடையாளத்தை கொடுத்தது. இந்த நிகழ்ச்சியில் 900-க்கு மேற்பட்ட எபிசோடுகளை நிர்மலா பெரியசாமி தொகுத்து வழங்கியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் அறியப்பட்டவர் நிர்மலா பெரியசாமி. செய்தி வாசிக்கும்போது இவர் சொல்லும் வணக்கம் என்ற வார்த்தைகே ரசிகர்கள் அதிகமாக இருந்தார்கள். அதேபோல் இவரது ஸ்டைலில் வணக்கம் சொல்வது ஒரு சில திரைப்படங்களில் கூட காமெடியாக முயற்சித்திருப்பார்கள். அந்த அளவிற்கு பிரபலமான இவர், பொதிகை, சன்டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களில் பணியாற்றியுள்ளார் .
Advertisment
மேலும், ராஜ் டிவி மற்றும் மக்கள் தொலைக்காட்சியிலும் பணியாற்றியுள்ள நிர்மலா பெரியசாமி, ஜீ தமிழில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, சின்னத்திரையில், பலரின் கவனத்தை ஈர்த்திருந்திருந்தார். அதற்கு முன்பு செய்தி வாசிப்பாளராக இவர் பிரபலமான நபராக வலம் வந்தாலும், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி இவருக்கு ஒரு சிறப்பான அடையாளத்தை கொடுத்தது. இந்த நிகழ்ச்சியில் 900-க்கு மேற்பட்ட எபிசோடுகளை நிர்மலா பெரியசாமி தொகுத்து வழங்கியுள்ளார்.
‘சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தான் வந்தது குறித்து சமீபத்தில் குமுதம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ள நிர்மலா பெரியசாமி, இந்த நிகழ்ச்சியை முதலில் வேறு பெயர்களில் நடத்தியிருந்தார்கள். அதன்பிறகு புதிதாக தொடங்க வேண்டும் என்று நினைத்தபோது, எனது சகோதரி ஒருவர், என்னை அழைத்து சென்றார். அப்படித்தான் இந்த நிகழ்ச்சியில் நான் கமிட் ஆனேன். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஒளிபரப்பான முதல் வாரத்திலேயே டி.ஆர்.பியில் 8 புள்ளிகளை கடந்தது
8 புள்ளிகள் என்பது அப்போது ஜீ தமிழுக்கு பெரிய விஷயம். இந்த டி.ஆர்.பி 65 புள்ளிகளை எட்டும்வரை நான் அந்த நிகழ்ச்சியில் இருந்தேன். 300-கோடிக்கு மேல் செலவு செய்து, வீணாகபோய் சேனலையே மூடிவிட்டு சென்றுவிட்டார்களாம். ஆனால் இந்த நிகழ்ச்சியை வைத்துதான் ஜீ தமிழ் மீண்டு வந்தது. அதற்கு முக்கிய காரணம் நிர்மலா பெரியசாமியின் ஃபர்பாமன்ஸ் தான். அதை நான் பெருமையாக சொல்லிக்கொள்வேன். ஆனால் அங்கு நடந்த தவறுகளுக்கு உடன்படாதது தான் எனது தவறு.
Advertisment
Advertisements
நான் நிகழ்ச்சியில் இருந்தபோது ஒரு பெண் 7 கொலை செய்த உண்மை வெளியில் வந்தது, அது நியூயார்க் டைம்ஸ் வரை சென்றது. என்னை வந்து இன்டர்யூ எல்லாம் எடுத்தார்கள். அந்த நிகழ்ச்சியில் அந்த பெண் கொலை செய்தேன் என்று சொன்னதை சேனல் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்களுக்கு ஒரு ஷோ என்ற நிலையில் தான் இருந்தார்கள். ஆனால் இப்போது சமீபத்தில் பார்த்தேன். அந்த பெண் கொலை சம்பவத்தை அவர்கள் தான் வெளியில் கொண்டுவந்ததாக இடைச்சறுகள் சொல்கிறார்கள்.
இதை கேட்டு எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அடேங்கப்பா இப்படியெல்லாம் கூட மேனிப்ளேட் செய்வார்களா என்று யோசித்தேன். ஆனாலும் பரவாயில்லை. அவர்களின் பங்கும் இருக்கிறது. அந்த நிகழ்ச்சியை தனி ஆளாக என்னால் நடத்த முடியாது. அந்த டீம் பங்களுக்கு ரொம்ப இருக்கிறது என்று நிர்மலா பெரியசாமி கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news