Tamil TV News: விஜய் டிவியில் டிடி நடத்தி வந்த காஃபி வித் டிடி ஷோ, பலராலும் விரும்பிப் பார்க்கப்பட்டது. டிடி நடிகை ஜோதிகாவை நேர்காணல் செய்தது, லாக்டவுன் நேரத்தில் மறு ஒளிபரப்பாகியது. அப்போது சூர்யா பற்றி பேசிய ஜோதிகா, அவங்களை பற்றி நிறைய சொல்லலாம். அதுக்கு தனியா ஒரு ஷோ பேசணும்ன்னு நினைக்கறேன். இன்னைக்கு வரைக்கும் நான் ஒரு காபி கூட போட்டு கொடுத்ததில்லை, அவரும் கேட்டதில்லை. வீட்டில் என்னை யாரும் எதுவும் சொல்லாமல் சேஃபாக பார்த்துக்குவார். நான் ரொம்ப லக்கி. ரொம்ப கம்மியான ஆண்கள் தான் இப்படி இருப்பாங்க. என் பையனுக்கு சூர்யாவோட பாதி குவாலிட்டீஸ் வந்துருச்சுன்னா நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன் என்றார்.
❤️???? அழகிய காதல் ❤️???? #AnbudanDD முழுப்பகுதி - https://t.co/U3NOdJwQAt pic.twitter.com/ylQA1hIiax
— Vijay Television (@vijaytelevision) June 22, 2020
லவ்... உங்க பார்வையில் என்ன, என்று டிடி கேட்டபோது, லவ்வில் தனக்குன்னு எதுவும் இருக்க கூடாது. நமக்கு என்ன புடிச்சு இருக்குன்னு பார்க்கறதை விட, நம் பார்ட்னருக்கு என்ன பிடிக்கும்னு பார்த்து பார்த்து செய்யணும். அவங்க இந்த விஷயத்துல ஹேப்பியா இருப்பாங்கன்னு நினைச்சு செய்யணும். பார்ட்னருக்கு நிறைய இடம் கொடுக்கணும். ஒரு 5 சதவிகிதம் கூட அவருக்கு என்கிட்டே செல்ஃபிஷ்னெஸ் கிடையாது. சந்தோஷமா வச்சு இருப்பார்.
சொன்ன மாதிரி ஒரு கப் காபி கூட போட்டு குடுத்தது கிடையாது. அவங்க என்கிட்டே கேட்டதில்லை. காலையில் இருந்து இரவு வரைக்கும் சின்ன சின்ன ஹேப்பியான விஷயங்கள் நடக்கும். என் அப்பா அம்மா, என் குடும்பமே சூர்யாவுக்குள்ளே இருக்காங்க என்று கூறினார் ஜோதிகா.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.