Advertisment

Tamil TV Serial: ராதிகா மகளுக்கு பயந்து பெங்களூருக்கு தப்பியோடும் கோபி

Vijay tv serial bakiyalakshmi today episode, will gopi get caught: பாக்கியலட்சுமி வீட்டில் மயூ இருப்பதால், அவளிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்க பெங்க்ளூரு போவதாக கூறி ராதிகா வீட்டுக்கு வரும் கோபி இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Tamil TV Serial: ராதிகா மகளுக்கு பயந்து பெங்களூருக்கு தப்பியோடும் கோபி

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று என்ன நடந்து என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

பாக்கியலட்சுமி வீட்டில் இருக்கும் மயூ, அம்மா எப்படி இருப்பாங்களோ, அப்பா குடிச்சிட்டு வந்து அவங்கள என்ன பண்ணிருப்பாரோ என கவலையாக கூறுகிறாள். மேலும் அப்பாவால் அம்மா ராதிகா அனுபவிக்கும் கொடுமைகளை பற்றி மயூ கூற எல்லோரும் பரிதாப்படுகிறார்கள். பாக்கியலட்சுமியும் மயூவின் அப்பாவால் அவர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் பற்றி சொல்கிறாள். பின் எல்லோரும் மயூவுக்கு ஆறுதல் சொல்கிறார்கள்.

அப்போது கோபிக்கிட்ட சொல்லி ராதிகா வீட்டுக்காரர்க்கிட்ட பேச சொல்லனும் என்கிறாள் கோபியின் அம்மா. கோபி யாரு என மயூ கேட்க, இனியாவின் அப்பா என பாக்கியலட்சுமி சொல்கிறாள். அப்போது மயூ, எங்க வீட்டுக்கு ஒரு அங்கிள் வருவாரு அவரு பேரும் கோபிதான், அவரு ரொம்ப நல்லவர் என்கிறாள். பின்னர் ஜெனி மயூவை இனியாவோடு விளையாட கூட்டிச் செல்கிறாள்.

அடுத்து ஆபிஸில் எழிலும், அம்ரிதாவும் ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது எழில் நீங்க படிச்சிக்கிட்டே வேலையும் செஞ்சு கஷ்டபடுறீங்க. வீட்டிலேயும் நீங்க தான் வேலை பார்க்கனுமா என கேட்கிறான். எங்க வீட்டு நிலைமை அப்படி என பதிலளிக்கிறாள் அம்ரிதா.

அடுத்ததாக ராதிகா வீட்டுக்கு வருகிறார் கோபி. மயூ இல்லாம வீட்டில் நீ தனியாக இருப்பது கஷ்டமா இல்லையா என கேட்கிறார் கோபி. டீச்சர் கூட்டிட்டு போகும்போது கஷ்டமா இருந்துச்சு ஆனாலும் அவளாவது நிம்மதியா இருக்கட்டுமே விட்டுடேன் என்கிறாள் ராதிகா. என்ன இருந்தாலும் நீ மயூவா அங்க அனுப்பியது தப்பு என்கிறார் கோபி. புது வீட்டில் அவள எப்படி பார்த்துப்பாங்களோ என கேட்கிறான். டீச்சர் நல்ல பார்த்துப்பாங்க என சொல்கிறாள் ராதிகா. அதனால நான் மயூ வீட்டுக்கு திரும்பி வருகிற வரை நான் உன்கூட இருக்கப் போகிறேன் என சொல்கிறார் கோபி.

அடுத்து எழிலும் அம்ரிதாவும் குறும்படத்தின் காதல் காட்சி பற்றி போனில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அதைக் கேட்கும் அம்ரிதாவின் பெற்றோர், போனில் யார்கிட்ட பேசிக்கிட்டு இருந்த என கேட்கிறார்கள். ஃபிரண்ட்கிட்ட எனச் சொல்லும் ராதிகாவிடம் போனைக் கொடு நாங்க அந்த ஃபிரண்ட்கிட்ட பேசுறோம் என்கிறார்கள் அவர்கள். அதற்கு வீடு போலீஸ் ஸ்டேசன் மாதிரி இருக்கு நிம்மதியா இல்ல என கூறும் அம்ரிதாவிடம், உன்னை எந்த நிலைமையில் கூட்டி வந்தோம் நீ கூத்தடிச்சிக்கிட்டு இருக்கியா என கேட்கிறார்கள்.

மேலும், புடவையெல்லாம் கட்டிக்கிட்டு நீ காலேஜ் போகாம எங்க போற எனவும் கேட்கிறார்கள். அதைக் கேட்டு அதிர்ச்சியாகும் அம்ரிதா காலேஜ் வரைக்கும் வந்து கண்காணிக்கிருங்களா என கவலையாகிறாள். நீ இப்படி பொண்ணா அடக்க ஒடுக்கம் இல்லாம நடந்துக்கிட்ட நாங்க இரண்டு பேரும் ஏதாவது செஞ்சுக்குவோம் என கோபமாக சொல்லிட்டு போகிறார்கள். அதைக் கேட்டு அழுகிறாள் அம்ரிதா.

இங்கு பாக்கியலட்சுமி வீட்டில் மயூ அம்மாவை நினைத்து கவலையாக இருக்கிறாள். அம்மாவை உடனே பார்க்கனும் எனவும் கூறுகிறாள். பின்னர் பாக்கியலட்சுமி ராதிகாவுக்கு போன் செய்கிறாள். ராதிகா மயூவிடம் பேசி அவளை இயல்பாக்கினாள். கோபியோ மயூவை இங்கு கூட்டிவந்து விடலாம் என ராதிகாவிடம் சொல்கிறான். அதற்கு ராதிகா டீச்சர் அவள நல்லா பாத்துப்பாங்க, நீங்க டீச்சர சந்தேகப்படாதீங்க என்கிறாள். இங்கு ஜெனி மயூவுக்கு கதை சொல்லி தூங்கவைக்கிறாள்.

அப்போது பாக்கியலட்சுமி, காலையில் வீட்டைவிட்டு போன கோபி எப்படி இருக்காரோ என அவருக்கு போன் செய்கிறாள். கோபி போனை எடுத்து டீச்சர் ஏன் எனக்கு போன் பண்றாங்க என கேட்கிறான். அதைக் கேட்டு ராதிகா அதிர்ச்சியாகிறாள். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Bakiyalakshmi Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment