Advertisment

ரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்?

சீரியல் நடிகை ரச்சிதா தனது தீவிர ரசிகரான கார்த்திக் என்ற மாற்றுத்திறனாளியின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று அவரை சந்தித்துள்ள சம்பவம் பார்ப்பவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
ரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்?

சீரியல் நடிகை ரச்சிதா தனது தீவிர ரசிகரான கார்த்திக் என்ற மாற்றுத்திறனாளியின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று அவரை சந்தித்துள்ள சம்பவம் பார்ப்பவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

கடந்த 2011-ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாக பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. அதன்பிறகு பல சீரியல்களில் நடித்தள்ள அவர் விஜய் டிவியில் பெரும் வரவேற்பை பெற்ற சரணவன் மீனாட்சி சீசன் 2 மற்றும் சீசன் 3மூலம் புகழ் பெற்றார். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார். மேலும் பாரிஜாதா என்ற கன்னட படத்திலும், உப்புகருவாடு என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ரச்சிதா தனது தீவிர ரசிகரான கார்த்திக் என்ற மாற்றுத்திறனாளியின் நேரடியாக அவரது வீட்டுக்கு சென்று  சந்தித்துள்ளார். திடீரென ரஞ்சிதாக தனது வீட்டிற்கு வந்ததால் இன்ப அதிர்ச்சியடைந்த கார்த்திக், அவரை புன்னகையுடன் வரவேற்றார். தொடர்ந்து ரஞ்சிதா தனது ரசிகர் கார்த்திக்கு இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்யை வெளிப்படுத்தினார். இந்த சந்திப்பு குறித்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Actress Rachitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment