Sun TV Serial News : சன் டிவியின் மகராசி யாருன்னு பார்த்தால் மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் என்பதை விட, இதை இல்லத்தரசிகள் குடும்பமா உட்கார்ந்து மதியம் சாப்பிடும் நேரமா யூஸ் செய்த்துக்கறாங்க...
புவியும் பாரதியும் ஒருத்தரை ஒருத்தர் இன்னும் பார்த்துக்கவே இல்லையாமே. நடுவில் ஒரு நாள் பார்க்கலைங்க... முடிக்கும்போது கிட்ட பார்த்துக்க வரது மாதிரியே முடித்தார்கள். சரி, புவியும் பாரதியும் பார்த்துக்கொள்வார்கள்... இனி டென்சன் இல்லாமல் பார்க்கலாம் என்று உட்கார்ந்தால்.. மறுபடியும் ஆரம்பிச்ச இடத்துக்கே!
டிக்கியில் இருந்த புவி எழுந்து வெளியில் வரும்போது வில்லன்கிட்டே மாட்டிக்கறான். வில்லன் துரத்த புவி ஓட.. கடைசியில் தனது சொந்த வீட்டுக்குள்ளே தஞ்சம் புகுந்துக்கறான். இதுதான் தனது வீடு என்று தெரிந்தும், யார் கையிலும் சிக்காமல் எதுக்கு ஸ்டோர் ரூமில் ஒளிந்துக்கொள்கிறான் என்று கேள்வி நமக்குள் வராமல் இருந்தால் ஆச்சரியம். ஆனால், அவங்க நாளைக்குத்தான் பதில் சொல்வாங்க!
Advertisment
Advertisements
மகராசி தொடர் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஹரித்துவார், ரிஷிகேஷ், ஹைதராபாத் என்று பயணித்து வந்த சீரியல், கடைசியாக சித்தமபுரம் என்று காண்பிக்கப்பட்டு இப்போது சென்னையை சுற்றி உள்ள பகுதிகளிலும் ஷூட்டிங் நடந்து வருகிறது. பிரியமானவன் சீரியல் மூலம் அம்மா கேரக்டரில் பிரபலம் ஆன பிரவீணா லலிதா பாய் இந்த சீரியலிலும் பிரியமான அம்மாவாக நடிக்கிறார்.
அத்தைகுப் பிறந்தவளே.. ஆளாகி நின்றவளே.. பருவம் சுமந்து வரும் பாவாடை தாவணியே பாடலுக்கு செம லுக்கில் இருந்த சின்னப்ப பெண் அஷ்வினி மகராசியில் நல்ல வெயிட்டான வில்லி கேரக்டரை எல்லாரும் தீட்டித் தீர்க்கும்படி அருமையாகச் பிளே செய்து வருகிறார். ஆனாலும் இவருக்கு இன்னும் அந்த ஒல்லித் தேகம்தாங்க.. ஒல்லி பெல்லியா மெயின்டெயின் செய்து கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார்.
நாயகி திவ்யா பெங்களூர் பெண்.. கேளடி கண்மணி நாயகியாக இருந்தாலும்... இந்த சீரியலில் புதுசாகத் தெரிகிறார். இவருடன் அழகான கூட்டணியில் பல நடிகைகள் இணைந்து நடிக்கும் மகராசி சீரியல் நன்றாக இருக்கிறது. இழுவையை குறைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்போதாவது பூர்த்தி செய்யலாம்... எத்தனை நாளைக்கு?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"