Advertisment

சென்னை வெள்ளத்தில் சிக்கிய சீரியல் செட் வீடுகள்... ஷூட்டிங் நடக்குமா?

சீரியல்கள் பெரும்பாலும் குடும்பத்தின் உறவுகளை மையப்படுத்தி இருப்பதால் பெரும்பாலான காட்சிகள் வீட்டிற்குள் நடப்பது போலத்தான் படமாக்கப்படும். இதற்காக தனியாக வீடு செட் அமைத்து படமாக்கப்படுவது வழக்கம்.

author-image
WebDesk
New Update
Serial Set Home1

சீரியல் செட் வீடு

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் தற்போது முக்கிய அம்சமாக மாறிவிட்டது. இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும், சீரியல் தற்போது சனி மற்றும் ஞாயிறு என வார இறுதி நாட்களிலும் ஆக்கிரமித்து வருகிறது. இதற்கு ரசிகர்களும் தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர்.

Advertisment

அதேபோல் அவ்வப்போது சில சீரியல்கள் முடிவுக்கு வருவதும் அதற்கு பதிலாக புதிய சீரியல்கள் தொடங்குவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது. சீரியல்கள் பெரும்பாலும் குடும்பத்தின் உறவுகளை மையப்படுத்தி இருப்பதால் பெரும்பாலான காட்சிகள் வீட்டிற்குள் நடப்பது போலத்தான் படமாக்கப்படும். இதற்காக தனியாக வீடு செட் அமைத்து படமாக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் சென்னை ஏ.ஆர்.எஸ் கார்டனில், விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் சன்டிவியின் இலக்கியா உள்ளிட்ட சீரியல்களில் ஷூட்டிங் வீடு போன்ற செட் அமைத்து நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே சமீபத்தில் தாக்கிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை வெள்ளத்தில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது மக்கள் அதில் இருந்து மெல்ல மீண்டு வருகின்றனர்.

Serial Set Home1

இந்நிலையில், சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏ.ஆர்.எஸ் கார்டனில் சீரியலுக்காக அமைக்கப்பட்ட செட் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் சீரியல் ஷூட்டிங் தடைபட்டுள்ள நிலையில், நிலைமை சரியாக 10நாட்களுக்கு மேல் ஆகும் என்றும் கூறப்படுகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment