Advertisment

20 நாட்கள் வராத விக்கி... எவ்ளோ மிஸ் பண்ணோம் தெரியுமா! நயன்தாரா ஃபீலிங் போட்டோஸ் வைரல்

தனது அடுத்த படமாக எல்.ஐ.சி படத்தை இயக்கி வரும் விக்னேஷ் சிவன், படப்பிடிப்புக்காக 20 நாட்கள் வெளியூர் சென்றுள்ளார்.

author-image
WebDesk
New Update
Nayanthara Vignesh Shivan

நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தான் இயக்கி வரும் படத்திற்காக விக்னேஷ் சிவன் 20 நாட்கள் வீட்டுக்கு வராத நிலையில், அவரை பிரிந்து நானும் குழந்தைகளும் தவிக்கிறோம் அவரை ரொம்ப மிஸ் செய்கிறோம் என்று நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக இருக்கும் நயன்தாரா –விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு வாடகை தாய் மூலம் உயிர் உலக் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இதனிடையே சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு புதிய கணக்கு தொடங்கிய நயன்தாரா அதில், தனது கணவர் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அதேபோல் தனது அடுத்த படமாக எல்.ஐ.சி படத்தை இயக்கி வரும் விக்னேஷ் சிவன், படப்பிடிப்புக்காக 20 நாட்கள் வெளியூர் சென்றுள்ளார். இதனால் வீடு வராத விக்னேஷ் சிவனை பிரிந்து நானும் குழந்தைகளும் தவித்தோம் என்று நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விக்னேஷ் சிவன் வீட்டுக்கு வந்ததும், உயிர் உலக இருவரும் அப்பாவை எப்படி கட்டிப்பிடித்து கொஞ்சுகிறார்கள் பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் 20 நாட்கள் விக்னேஷ் சிவனை பிரிந்து நீங்கள் தவிக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஷூட்டிங் போகவில்லையா என்று கேட்டு வருகின்றனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு விக்கி – நயன் ஜோடி தனது குடும்பத்துடன் சவுதி சென்றிருந்தனர். துணிவு படத்தை முடித்த நடிகர் அஜித் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருந்தார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருந்தது.

கடைசி நேரத்தில் அஜித் படம் கைவிடப்பட்ட நிலையில், தற்போது மகிழ் திருமேனி அஜித் நடிப்பில் விடா முயற்சி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதனையடுத்து லவ் டுடே படத்தின் இயக்குனர் மற்றும் நடிகராக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்.ஐ.சி என்ற புதிய படத்தை தொடங்கியுள்ளார். கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். விடா முயற்சி படத்திற்கு முன்னதாக இந்த படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nayanthara Vignesh Shivan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment