விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான காற்றுக்கென்ன வேலி சீரியல் விரைவில் சிறப்பு க்ளைமேக்ஸ் காட்சியுடன் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் இருக்கும் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் காற்றுக்கென்ன வேலி. பெண் கல்வியை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த சீரியல், தற்போது காதல் ட்ராக்கில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இதனிடையே இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் தற்போதுவரை 760 எபிசோடுகளை கடந்துள்ள நிலையில், சமீப காலமாக டிஆர்பி ரேட்டிங்கில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதில் கடந்த சில மாதங்களாக பிரியங்கா குமார், சுவாமிநாதன் அனந்தராம மற்றும் மாளவிகா அவினாஷ் உள்ளிட்ட கேரக்டர்களை மையப்படுத்தியே கதை நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில் பிரியங்கா குமார், தர்ஷன் கே. முக்கிய கேரக்டர்களாக உள்ளனர்.
இந்தி தொடரான மோஹரின் சீரியலின் ரீமேக்கான காற்றுக்கென்ன வேலி தொடரில், ஐஏஎஸ் அதிகாரியாக ஆசைப்படும் இளங்கலை மாணவி வெண்ணிலாவைச் சுற்றியே கதை நகர்கிறது. பள்ளி முடிந்ததும் அவளை திருமணம் செய்து கொள்ளும்படி அவளது தந்தை வற்புறுத்தியதால், தனது தாயின் உதவியுடன் திருமணத்திலிருந்து தப்பி ஓடுகிறாள். தனது முன்னாள் ஆசிரியை சாரதாவின் உதவியுடன், சாரதாவின் மாமரியாருக்கு சொந்தமான மீனாட்சி சிவானந்தம் கல்லூரியில் சேர்கிறாள்.
சாரதாவின் மாமியார் மற்றும் அவரது சொந்த குடும்ப உறுப்பினர்கள் இருவரிடமிருந்தும் தொடர்ச்சியான எதிர்ப்பை எதிர்கொள்வதால், அவளது கல்வியைத் தொடர, கல்லூரியில் படிக்கும் வெண்ணிலாவின் உரிமைக்கான போராட்டத்தை வைத்து இந்த சீரியலின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இதனிடையே தன் கல்லூரி நண்பர்கள், அவளது பொருளாதார பேராசிரியை மற்றும் சாரதாவின் பிரிந்த மகனின் உதவியுடன், வெண்ணிலா தனது தடைகளையும் கடந்து செல்கிறாள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.