New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/28/archana-home-tour-2025-06-28-10-12-21.jpg)
தன்னை போலவே தனது மகளையும் தொகுப்பாளினியாக மாற்றியுள்ள அர்ச்சனா, அவருடன் இணைந்து ஜீ தமிழின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
தமிழ் சின்னத்திரையின் முக்கிய தொகுப்பாளினியாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளருமான அர்ச்சனா, ஹோம் டூர் வீடியோ வைரலாகி வருகிறது. தனது குடும்பம் பெரியது என்பதால் 16 பேர் ஒன்றாக இணைந்து அமரும் வகையில் ஒரு ஹால் வைத்துள்ளதாக அர்ச்சனா கூறியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில், அர்ச்சனா பிரபல தொகுப்பாளினியாக வலம் வருகிறார். பல தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ள இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்த அர்ச்சனா, காமெடி டைம் (சன் டிவி) நிகழ்ச்சியுடன் தனது சின்னத்திரை வாழ்க்கையை தொடங்கினார். இந்த நகைச்சுவை நிகழ்ச்சி மிகப் பெரிய வெற்றி பெற்றது. 'என் வழி தனி வழி' படத்தில் நடித்த அர்ச்சனா, டாக்டர், நான் சிரித்தால் நடித்துள்ளார்.
கடந்த 2004-ம் ஆண்டு. வினீத் முத்துக்கிருஷ்ணன் என்பவரை மணந்தார். இந்த தம்பதிக்கு, ஜாரா வினீத் என்ற பெண் குழந்தையும் உள்ளது. தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பதோடு, தனது வாழ்க்கையைப் பற்றி ரசிகர்களுக்கு அப்டேட் செய்து வருகிறார். மேலும் தன்னை போலவே தனது மகளையும் தொகுப்பாளினியாக மாற்றியுள்ள அர்ச்சனா, அவருடன் இணைந்து ஜீ தமிழின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், தற்போது அர்ச்சனா வீட்டு ஹோம் டூர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீட்டின் முகப்பில், தான் முதன் முதலில் ஜீ தமிழில் என்ட்ரி ஆன அதிஷ்டலட்சுமி நிகழ்ச்சியின், இயக்குனர் தனக்கு கொடுத்த சிலை போன்ற பரிசை வைத்துள்ளார். அதன்பிறகு அந்த சிலையின் பின்புறம் எகிப்து மம்மிஸ் போன்று டைல்ஸ் ஒட்டியுள்ளார். இந்த டைல்ஸ் தனக்கு பிடித்த ஒன்று என்றும் கூறியுள்ள அர்ச்சனா, வீட்டுக்குள் சென்று பார்ப்போம் என்று கூறி அழைத்து செல்கிறார்.
வீட்டுக்கு உள்ளே என்ட்ரி ஆனவுடன் ஒரு சிறிய குளம் போன்ற வடிவமைப்புடன் தண்ணீர் இருக்கிறது. அதற்கு மேலே ஊஞ்சல் இருக்கிறது. தனக்கு சிறு வயதில் இருந்தே வீட்டில் ஊஞசல் வைக்க வேண்டும் என்று ஆசை. அது தண்ணீருக்கு மேலே இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து இதை கட்டியதாகவும் அதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வைத்திருக்கிறேன். நல்ல மனசு உள்ள இடத்தில் அதிக மழை பெய்யும் என நம்புவோம் என்று கூறியுள்ளார். அவரது கணவர் இந்திய கப்பல்படையில் இருப்பதால், சின்னதாக ஒரு கப்பல் போன்ற ஷோபாவை அங்கு வைத்திருப்பதாக கூறியுள்ளார்.
வீட்டுக்கு உள்ளே சென்றவுடன், அர்ச்சனா தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்கள், அதன்பிறகு ஹாலுக்கு சென்றவுடன் அர்ச்னாவின் பெரிய போட்டோ அதில் குட்டி குட்டியாக மகளின் உருவங்கள் என பெரிய புகைப்படம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் ஜீ தமிழில் கொடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார். அதன்பிறகு நடிகர் ரஜினிகாந்தை நேர்காணல் செய்தபோது அவர் கையெழுத்து போட்ட போட்டோ ஒன்றை கொடுத்தாகவும் அதை தனது வீட்டில் மாட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார், இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.