Advertisment

'இந்த லைஃப்ல பண்ணுன தப்பை இனி பிரியங்கா செய்யக் கூடாது' அம்மா போட்ட அன்பு கட்டளை

அவளை நினைத்து நான் மிக மிக பெருமைப்படுகிறேன். 15 வருடம் கடந்திருக்கிறாள். அவளின் ஒவ்வொரு அசைவுகளும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

author-image
WebDesk
New Update
Priyanka Her Mother

பிரியங்கா தேஷ்பாண்டே

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமான விஜே.பிரியங்கா தனது வாழ்க்கையில் ஒரு தவறு செய்துவிட்டார். ஆனால் அந்த தவறை மீண்டும் அவர் செய்ய கூடாது என்று அவரது அம்மா ஒரு நிகழ்ச்சியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisment

ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற விஜய் டிவியின் தற்போது இருக்கும் பெண் விஜே பிரியங்கா. கலகலப்பான சிரிப்புடன் நிகழ்ச்சியை தொகுத்து வழக்கும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அதேபோல் விஜய் டிவியில் தற்போது இருக்கும் ஒரே பெண் தொகுப்பாளினி இவர்தான் என்பது கூடுதல் சிறப்பு.

ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று 2-வது இடத்தை பிடித்திருந்தார். தற்போது விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே, சின்னத்திரையில் தனது 15-வருடங்களை நிறைவு செய்துள்ளார். இதுகுறித்து எஸ்.எஸ்.மியூசிக் சேனலில் நேர்காணல் ஒன்றில் அவரது அம்மாவுடன் பங்கேற்றார்.

அப்போது பேசிய பிரியங்காவின் அம்மா, என் பிள்ளைகள் சிறுவயதாக இருக்கும்போதே என் கணவர் இறந்துவிட்டார். அதன்பிறகு எங்களது சொந்தபந்தங்கள் யாரும் எங்களை கண்டுகொள்ளவில்லை. நான் வேலைக்கு சென்றாலும் குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வார்கள் என்ற தயக்கமும் இருந்தது. அதனால் இவர்களை எப்படி வளர்த்து முன்னேற்ற போகிறோம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

எனது அம்மாதான் எனக்கு உறுதுணையாக இருந்தார். அவர் இல்லை என்றால் இப்போது நான் இல்லை. இப்போது என் குழந்தைகள் நல்ல நிலைமைக்கு வந்துவிட்டாலும், பிரியங்காவை நினைத்து எனக்கு இன்னும் கொஞ்சம் வேதனை இருக்கிறது. அவளை நினைத்து நான் மிக மிக பெருமைப்படுகிறேன். 15 வருடம் கடந்திருக்கிறாள். அவளின் ஒவ்வொரு அசைவுகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். 2 வருடங்கள் ஒரு இடத்தில் வேலை செய்தால் அங்கிருந்து வேறு இடத்தற்கு சென்றுவிடுவார்கள்.

பிரியங்கா அப்படி இல்லை. 15 வருடங்களாக ஒரே இடத்தில் வேலை பார்க்கிறாள். இன்னைக்கு வந்து சோர்வாக படுத்தாலும் நாளை ஷூட் இருக்கு என்று அவசமாக எழுந்து கிளம்பி விடுவாள். எல்லோருக்கும் இந்த மாதிரி ஒரு குழந்தை கிடைத்தால் அவர்களும் லக்கி தான். நான் மற்ற பெண்களை குறை சொல்லவில்லை. அதே போல் இப்போது அவள் வாழ்க்கையில் செய்த ஒரு தவறை மீண்டும் செய்ய கூடாது என்று சத்தியம் செய்ய வேண்டும்.

வாழ்க்கையில் சரியான நபரை தேர்வு செய்ய வேண்டும். எதுவாக இருந்தாலும், சிறப்பான சரியானதை தேர்வு செய்ய வேண்டும். அவளது கண் கலங்கினால் எனக்கு வலிக்கிறது என்று சொல்ல, எதிரில் அமர்ந்திருந்த பிரியங்கா கண் கலங்க அவரது அம்மாவும் கண் கலங்கினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment