பிரபல யூடியூபர்ஸ் கோபி சுதாகர் இருவருக்கும் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் சார்பில் இன்ஸ்பிரேஷனல் யூத் ஐகான் விருது வழங்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி அதிகாரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலரும் ஆன்லைனில் புதிய முயற்சிகளில் இறங்கி சாதித்து வருகின்றனர். இந்த வகையில் யூடியூப் சேனலில் பரிதாபங்கள் என்ற சேனல் மூலம் வெளியுலகிற்கு அறிமுகமானவர்கள் கோபி சுதாகர்.
பொறியியல் பட்டதாரிகளான இவர்கள் தற்போது யூடியூப்பில் பிரபலமான நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். இருவரும் இணைந்து சில படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது பரிதாபங்கள் நிறுவனம் சார்பாக ஒரு படத்தை தயாரித்து நடிக்க உள்ளனர்.
சமீபத்தில் இந்த படத்திற்கான பூஜை தொடங்கப்பட்ட நிலையில், அப்போது படத்தின் டைட்டில் இல்லாமல் வெளியிடப்பட்ட டீசர் பெரிய வரவேற்பை பெற்றது. படங்களில் பிஸியாக இருந்தாலும் பரிதாபங்கள் சேனலை தொடர்ந்து நடத்தி வரும் கோபி – சுதாகர் இருவருக்கும் தற்போது விருது வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் சார்பில் கோபி –சுதாகர் இருவருக்கும் இன்ஸ்பிரேஷ்னல் யூத் ஐகான் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விழா சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய கோபி சின்ன வயதில் இவர மாதிரி ஆகனும் அவர மாதிரி ஆகனும் சொல்லுவாங்க இப்போ அந்த வரிசையில் நாங்களும் இருக்கோம் ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பேசிய சுதாகர் கம்பி கட்ற கதையெல்லம் சொல்றான் பாருங்க என்று பேச்சை தொடங்கினார். இதே கல்லூரியில் கவுன்சிலிங்கிற்காக வந்திருக்கிறோம். அட்ரசே இல்லாமல் சென்னை வந்து இப்போது அட்ரசை உருவாக்கி இருக்கிறோம். ரொம்ப சந்தோஷமா இருக்கிறது என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/