கார்த்திகை தீபம்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், நேற்றைய எபிசோடில் மலர் மற்றும் ஐஸ்வர்யா என இருவரும் சேர்ந்து திட்டம் போட்டு நெக்லஸை திருடி தீபாவின் பேக்கில் வைத்து நெக்லஸை காணவில்லை என கிளப்பி விட்ட நிலையில் இன்று தீபாவின் பேக்கில் நெக்லஸ் இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
இருந்தாலும் கார்த்திக் தீபாவை விட்டுக் கொடுக்காமல் இதை தீபா எடுத்து இருக்க மாட்டாங்க யார் எடுத்தாங்க என்பதை நான் வெளிப்படையாக சொல்றதுனால இந்த குடும்பத்துக்கு தான் அவமானம். அதனால நான் அதை சொல்ல விரும்பல என்று சொல்கிறான். பரமேஸ்வரி பாட்டியும் அந்த நெக்லஸ தீபாவுக்கு கொடுக்கணும்னு தான் இருந்தேன். அதுவே தீபா கிட்ட போய் சேர்ந்துடுச்சு ஒன்னும் பிரச்சனை இல்ல என்று சொல்லிவிடுகிறார்.
பிறகு தீபா இது நெக்லஸ் அபிராமி அம்மா கையால எனக்கு கொடுக்கணும் என்று ஆசையை சொல்ல அபிராமி வேறு வழி இல்லாமல் அதை தீபாவுக்கு போட்டு விடுகிறாள். அடுத்து பெட் ரூமுக்கு வந்த கார்த்திக் மற்றும் தீபா என இருவரும் நெக்லஸ் குறித்து பேச அபிராமி அந்த வழியாக வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அண்ணா
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டியும் அரக்கன் வேடத்தில் இருக்கும் நான்கு ரவுடிகளும் ரத்னாவை ரவுண்டு கட்டிய நிலையில், இன்றைய எபிசோட்டில், ரத்னா இவர்களிடம் இருந்து தப்பி ஓடி வர முத்து பாண்டி ரவுடிகளிடம் இன்னிக்கி அவள விடக்கூடாது தாலி கட்டியே ஆகணும் என என சொல்கிறான்.
அதன்பிறது ரத்னாவை துரத்தி வர கனி இதைக் கேட்டு விட்டு அண்ணனிடம் சொல்ல ஓட முதலில் அவளை புடிங்கடா என கனியையும் துரத்த அவள் வைகுண்டத்திடம் ஓடி வந்து விஷயத்தை சொல்கிறார். இதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைய ரத்னா அங்கிருந்து தப்பி ஓட திரும்பவும் அவளை துரத்துகின்றனர். ரத்னாவை ஒரு கைப்பிடித்து இழுக்க இன்னொரு பக்கம் அம்மன் வேடத்தில் இருக்கும் ஒரு பெண்ணை முத்துப்பாண்டியின் ஆட்கள் கடத்திச் செல்கின்றனர்.
இங்கே ரத்னாவை பிடித்து இழுத்து காப்பாற்றியது வெங்கடேஷ் தான் என தெரிய வருகிறது. ஒரு பக்கம் வெங்கடேஷ் ரத்னா கழுத்தில் தாலி கட்ட முடிவு எடுக்க இன்னொரு பக்கம் சண்முகம் முத்துப்பாண்டி மீது கோபமாக இருக்க வைகுண்டம் அவனை சமாதானம் செய்கிறார். பிறகு சௌந்தரபாண்டி ரத்னா இப்போ எங்க பிடியில சிக்கிட்டா, முத்துப்பாண்டி அவளுக்கு தாலி கட்டி தான் கூட்டி வருவான் என்று சொல்கிறான்.
அப்போ இது யாரு என ரத்னாவை காண்பிக்க சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைகிறார். இங்க முத்துப்பாண்டி அம்மன் கெட்டப்பில் இருக்கும் பெண்ணுக்கு தாலி கட்ட போக சௌந்தரபாண்டி அதை தடுக்க ஓடி வருகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”