Advertisment

மச்சானை வெளுத்து வாங்கிய மாமா... உண்மையை நிரூபித்த தம்பி : ஜீ தமிழ் சீரியல்களின் சனி, ஞாயிறு எபிசோடுகள்

ஜீ தமிழின் அண்ணா மற்றும் கார்த்திகை தீபம் சீரியல்களின் சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகள்

author-image
WebDesk
New Update
Anna Kd S S Episode

அண்ணா - கார்த்திகை தீபம்

மாயாவை சிக்க வைத்த கார்த்திக்.. அருணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Advertisment

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவுக்கு தாலி பிரித்து போடும் பங்ஷன் தொடர்ந்து இன்றும் நாளையும் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது தர்மலிங்கம் ஒருவரை சந்தித்து தீபாவுக்கு சீர் செய்ய பணம் வேண்டும் அதனால் வீட்டு பத்திரத்தை வைத்துக் கொண்டு பணத்தை தருமாறு கேட்கிறார். என் மூத்த பையன் துபாய்ல இருக்கான் அவன் அனுப்புற பணத்தை வைத்து குடும்பத்தை சமாளித்துக் கொள்வோம் என்று சொல்கிறார். மேலும் இந்த விஷயம் தன்னுடைய குடும்பத்திற்கு தெரிய வேண்டாம் எனக்கு சொல்கிறார்.

இதனைத் தொடர்ந்து தீபா கார்த்திக்கிடம் கோவிலுக்கு அழைத்துச் செல்ல சொல்லி கேட்க அவன் கோவிலுக்கு அழைத்துச் செல்கிறான். பிறகு ரங்கராட்டினத்தில் சுத்த ஆசைப்பட கார்த்தி தீபாவை ராட்டினத்தில் சுத்த வைக்கிறான். அடுத்ததாக வீட்டுக்கு வந்ததும் கார்த்திக் ஆனந்தை கூப்பிட்டு என்னடா இப்பல்லாம் பெங்களூரிலிருந்து வீட்டுக்கு வர மாட்ற என்று கேட்க வேலை அதிகமா இருக்கு என்று சொல்லி சமாளிக்கிறான்.

அடிக்கடி நீ ஒரு பொண்ணு கூட சுத்துறதா என் பிரண்டு ஒருத்தன் சொன்னான் என்ன விஷயம் என்று கேட்க அப்படியெல்லாம் இல்லையே யார் சொன்னது சொல்லு நானே அவங்கிட்ட கேட்கிறேன் என்று சொல்கிறான். உடனே கார்த்திக் அது நான்தான் நீ ஒரு பொண்ணு கூட சுத்துறதை நானே பலமுறை பார்த்திருக்கேன் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்க ஆனந்த் அது என்னுடைய காலேஜ் ஃப்ரெண்ட் என்று கூறுகிறான்.

ரெஸ்டாரன்ட் உள்ள பொண்ணா வச்சு பார்த்ததும் உனக்கு போன் பண்ண போது நீ பெங்களூர்ல இருக்கேன்னு பொய் சொல்லிட்ட மீனாட்சி அண்ணி உன்னையே நம்பி இந்த வீட்டுக்கு வந்து இருக்காங்க, அவர்களுக்கு துரோகம் பண்ணாத அட்வைஸ் சொல்ல இந்த நேரம் பார்த்து மீனாட்சி உள்ளே வந்து விடுகிறாள். முழுசா எதையும் கேட்காத மீனாட்சி நல்லா சொல்லு கார்த்திக் எப்ப பார்த்தாலும் வேலையே கதினு இருக்காரு என்று சொல்ல கார்த்திக் அதுதான் சொல்லிக்கிட்டு இருந்தேன் அண்ணி என்று சமாளிக்கிறான்.

மீனாட்சி போனதும் ஆனந்த் நான் அந்த பொண்ணு காலேஜ் படிக்கும்போது லவ் பண்ணும் அம்மாவுக்கு பயந்து நான் என்னுடைய காதல சொல்லல மீனாட்சி கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அவளும் வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டா. ஆனா அவருடைய கணவன் சரியில்லை டிவோர்ஸ் பண்ணிட்டா என்று சொல்கிறான். சரி அவங்களுக்கு வாழ்க்கைல பிரச்சனை ஒரு வேலை வாங்கி கொடு இந்த பணத்தை கொடுத்து உதவி பண்ணு நீ அவங்களோட இருக்கணும்னு அவசியம் இல்லையே என்று கார்த்தி அட்வைஸ் செய்கிறான்.

ஆனந்த் சரிடா இனிமே சரியா இருக்கேன் என கூறுகிறார். இதனையடுத்து கார்த்திக் தீபாவை ரெக்கார்டிங் தியேட்டரில் விட்டுவிட்டு எனக்கு ஒரு வேலை இருக்கு என போலீஸ் ஸ்டேஷன் கிளம்பி வருகிறான். அருண் ரெசாட்டை அடித்து உடைத்த ரவுடி குறித்து தனது நண்பனிடம் விசாரிக்க அவன் உன் பேரை மட்டும் தான் சொல்லிட்டு இருக்கான் சொல்ல பிறகு கார்த்திக் சொன்ன ஐடியாவை வைத்து முயற்சி செய்ய ரவுடி சிக்கிக்கொள்ள யார் இப்படி பண்ண சொன்னது என்று கேட்கும் போது மாயா தான் என்று உண்மையை சொல்கிறான்.

உடனே கார்த்திக் மாயா வீட்டிற்கு வந்து அவளை எச்சரிக்க மாயா ஆமா நான் தான் பண்ணேன் அதுக்கு உன்கிட்ட என்ன ஆதாரம் இருக்கு? உன்னால ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்ல பின்னாடியே அருண் என்ட்ரி கொடுக்கிறான். அருணுக்கு கார்த்திக் செய்யவில்லை என்ற உண்மை தெரிய வருகிறது. அதன் பிறகு தீபா கார்த்திக் வேலையாக வெளியே வந்து விட்டதால் அவளை மியூசிக் டைரக்டர் வீட்டில் ட்ராப் செய்ய ராஜேஸ்வரி தீபாவும் மியூசிக் டைரக்டரும் ஒன்றாக வந்ததை போட்டோ எடுத்துக் கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சண்முகம் குடும்பத்தை பிரிக்க நடக்கும் சதி.. சௌந்தரபாண்டி சூழ்ச்சியால் நடக்கப்போவது என்ன?

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி தாலி பிரித்து போட ஏற்பாடு செய்திருக்க பாக்கியத்தின் திட்டம் சௌந்தரபாண்டிக்கு தெரிய வந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்கப் போவது என்ன என்பது பிடித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது சண்முகம் குடும்பத்துடன் கோவிலுக்கு வர இசக்கி பார்த்த கனி ஓடிப்போய் கட்டிப்பிடித்துக் கொள்ள மற்ற தங்கைகளும் பரணியும் இசக்கியை ஓடி சென்று நலம் விசாரிக்க பிரிந்த தங்கைகள் பாசத்தை கொட்டிக் கொள்கின்றனர். பிறகு சண்முகம் கோவிலை சுத்தி வரும் நேரத்தில் இசக்கிக்கு தாலி பிரித்து போடும் நிகழ்ச்சி நடந்து முடிகிறது. உடனே இசக்கி ஓடிப்போய் சண்முகம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க அவன் ஆசீர்வாதம் செய்யாமல் அங்கிருந்து நகர்ந்து சென்று விடுகிறான்.

பிறகு பரணி அதுக்கு ஒரு காரணம் இருக்கு என்று கவிதாவின் அக்காவும் அக்கா புருஷனும் வந்து சண்முகத்தை சந்தித்து பேசிய விஷயத்தை சொல்கிறார். இதையடுத்து சௌந்தரபாண்டி வீட்டுக்கு வந்ததும் சண்முகம் குடும்பத்தையும் இசக்கியையும் உங்க அம்மாவே சேர்த்து வைத்து விடுவா போல இத நடக்க விடக்கூடாது என முடிவெடுக்கின்றனர்.  உடனே சௌந்தரபாண்டி சண்முகம் உன்னை அடிக்கிற மாதிரி ஏதாச்சு பண்ணு என்று சொல்கிறார். அதன் பிறகு முத்துப்பாண்டி சண்முகத்தை சந்தித்து தப்பு தப்பாக பேச பொறுமையாக இருக்கும் அவள் முத்துப்பாண்டி தன்னுடைய அம்மாவை பற்றி தப்பாக பேசியதும் கொதித்து எழுகிறான்.

சண்முகம் முத்துபாண்டியை தூக்கி போட்டு அடி வெளுத்து கடப்பாறையால் குத்த போக இசக்கி தடுத்து நிறுத்து என்னை கொன்னுட்டு என் புருஷனை கொல்லு என அதிர்ச்சி கொடுக்கிறாள். இதனால் மனமடைந்து வீட்டுக்கு வந்த சண்முகம் இசக்கி இப்படி சொன்னதை வைத்து வருத்தப்படுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment