Advertisment

கணவருக்கு கத்தி குத்து... மருமகளை வெளியில் அனுப்பிய மாமியார் : அடுத்து காதல் பயணம் தொடக்கமோ!

author-image
WebDesk
New Update
zee tamil serial 124

வீட்டை விட்டு துரத்தப்பட்ட ஐஸ்வர்யா.. கார்த்திக் மீது காதல் கொள்ளும் ரம்யா

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா கர்ப்பம் இல்லை என்று விஷயம் அபிராமிக்கு தெரிய வந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, அபிராமி ஐஸ்வர்யாவை கன்னத்தில் அறைந்து ஹாலிலிற்கு அழைத்து வந்து மீண்டும் அறைய அருண் எதுக்கு மா புள்ளத்தாச்சி பொண்ணை அடிக்கறீங்க என்று கோபப்பட அபிராமி அவ கர்ப்பமே இல்ல, இவ்வளவு நாளா நம்ம எல்லாரையும் ஏமாத்திட்டு இருந்து இருக்கா என்ற உண்மையை உடைக்க அருணும் அவளை அறைகிறான். இனிமே இந்த வீட்ல உனக்கு உனக்கு இடமில்லை என்று துரத்துகிறான்.

ஐஸ்வர்யா ரூமுக்குள் துணி மணிகளை எடுத்து வைத்து கொண்டிருக்க தீபா அங்கு வந்து அக்கா நான் வீட்ல இருக்கவங்க கிட்ட பேசுறேன், அத்தைக்கு இந்த விஷயம் எப்படி தெரிந்தது என்று எனக்கு தெரியல என்று சொல்கிறாள். ஐஸ்வர்யா நீ பண்ண வரைக்கும் போது நான் திரும்பி இந்த வீட்டிற்குள் வரும் போது நீ இந்த வீட்ல இருக்க மாட்ட என்று சவால் விட்டு கிளம்புகிறாள்.

ரியா இதை பார்த்து இனிமே மூத்த மருமகளா நம்ம ராஜ்யம் என்று சந்தோசப்படுகிறாள், அடுத்து ஐஸ்வர்யா ஒரு பார்க்கிற்கு ரியாவை வர வைத்து அந்த தீபாவை சும்மா விட கூடாது, அங்க நடக்கிற எல்லா விஷயத்தையும் எனக்கு தெரியப்படுத்த என்று சொல்ல ரியா மைண்ட் வாய்ஸில் உன்னை வெளியே துரத்த ஸ்கெட்ச் போட்டதே நான் தான் என்று நினைத்து கொள்கிறாள்.

அடுத்து கம்பெனியில் கார்த்திக் வேலை செய்து கொண்டிருக்கும் போது எவனோ ஒருவன் ரவுண்ட்ஸ் வந்த ரம்யாவை கத்தியால் குத்த வர கார்த்திக் இடையில் புகுந்து ரம்யாவை காப்பாற்றுகிறான். இந்த மோதலில் கார்த்திக்கு லேசான காயம் ஏற்படுகிறது. உடனே ரம்யா அவனுக்கு தனது கர்சீப்பால் கட்டு போட்டு விடுகிறாள். 

இதை தொடர்ந்து கையில் கட்டுடன் கார்த்திக் வீட்டிற்கு வர தீபா அதை பார்த்து பதற இவன் நடந்த விஷயங்களை சொன்னதும் தீபா பொஸசிவ்வில் அந்த கர்சீப்பை துவைத்து நாளைக்கு அவங்க கிட்ட கொடுத்துடுங்க என்று சொல்கிறாள். மறுபக்கம் ரம்யா கார்த்திக் தனக்காக செய்த உதவியை நினைத்து பார்து கொண்டிருக்க அவன் மீது ஒரு ஈர்ப்பு உருவாகிறது.

மறுநாள் தீபாவும் அபிராமியும் கோவிலுக்கு நடந்து செல்லும் போது அந்த வழியாக சென்ற கார் அபிராமி மீது சேற்றை வாரி இறைக்க தீபா கல்லை எடுத்து கண்ணாடியை உடைக்க போகும் போது ரம்யா கீழே இறங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பரணி கனவால் பதறும் குடும்பம்.. ஷண்முகத்தை அழிக்க நடக்கும் யாகம் - அண்ணா சீரியல் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி சண்முகத்தை நான்கு ரவுடிகள் குதி கொல்வது போல் கனவு கண்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, பரணி தூக்கத்தில் இருந்து அலறி எழுந்து கொள்ள ஷண்முகம் என்னாச்சு என்று கேட்க பரணி உனக்கு ஒன்னும் இல்லையே என்று பதறுகிறாள், கொஞ்ச நேரத்தில் எல்லாரும் அங்கு வந்து விட பரணி சண்முகத்தை கொல்வது போல் கனவு கண்டதாக சொல்ல எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஷண்முகம் கனவு தானே நிஜம் இல்லையே என்று ஆறுதல் சொல்கிறான்.

வைகுண்டம் இந்த மாதிரி யாராவது இறந்துட்ட மாதிரி கனவு கண்டா அவங்களுக்கு பெருசா ஏதோ நல்லது நடக்கும்னு சூடாமணி சொல்லுவா என்று சொல்லி சமாதானம் செய்து பரணியை தூங்க வைக்கிறார். அடுத்து சண்முகத்தை தனியாக அழைத்து சென்று பரணியை ஆறுதல் படுத்த தான் அப்படி சொன்னேன், எனக்கே பயமா இருக்கு என்று பதற ஷண்முகம் அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது என்று அப்பாவுக்கு ஆறுதல் சொல்கின்றான். 

அடுத்து ஷண்முகம் உடன்குடியுடன் செட்டு ரூமுக்கு வர இங்கு முத்துப்பாண்டி நான்கு ரவுடிகளை கூப்பிட்டு சண்முகத்தை கொல்ல சொல்லி பேசி கொண்டிருக்க முத்துப்பாண்டி பேசுவதை பார்த்து கிட்ட வர ஷண்முகத்திற்கு போன் வர ரிங் சத்தம் கேட்டதும் முத்துப்பாண்டி யாரோ இருக்காங்க என்று பேச்சை நிறுத்தி விடுகிறான்.

மறுபக்கம் பரணி கோவிலில் ஷண்முகம் பெயரில் அர்ச்சனை செய்ய காத்திருக்க சௌந்தரபாண்டி நான்கு புது அய்யர்களை வரவைத்து சண்முகத்தை அழிக்க சத்ரு சம்ஹார யாகம் நடத்த வேண்டும் என்று பேசி கொண்டிருக்க பரணி இவர்கள் பேசுவதை பார்த்து நெருங்கி வர சௌந்தரபாண்டி பேச்சை நிறுத்தி விடுகிறார்.

அடுத்து ஷண்முகம் கோவிலுக்கு வர அய்யர் மீது மோதி விடுகிறான், புதியதாக இருப்பதால் யார் என்ன என்று விசாரிக்க வெளியூர் அய்யர் எனவும் சத்ரு சம்ஹார யாகம் நடத்த வந்திருப்பதாகவும் சொல்ல அப்படினா என்ன என்று கேட்க ஒருத்தரை அழிப்பதற்காக செய்யும் யாகம் என்று விளக்கம் கொடுக்க சௌந்தரபாண்டி தூரத்தில் இருந்து இதை எல்லாம் பார்த்து விடுகிறார்.

அடுத்து வீட்டிற்கு வந்த சௌந்தரபாண்டி ஷண்முகத்திற்கு எதிராக யாகம் நடத்த போவதை சொல்ல முத்துப்பாண்டி சண்முகத்தை கொல்ல ஏற்பாடு பணியாச்சு என்று சொல்கிறான், சண்முகத்தை ஊருக்கு ஒதுக்கு புறமா கூட்டி வரணும் என்று சொல்ல சௌந்தரபாண்டி அதுக்கு ஒரு ஐடியா சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment