Advertisment

மனைவிக்கு கத்தி குத்து : விசாரணையில் இறங்கிய கணவன் ; உண்மை வெளி வருமா?

ஜீ தமிழில் அதிக டி.ஆா.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா மற்றும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
zee tamil serial News 12

அண்ணா மற்றும் கார்த்திகை தீபம்

சௌந்தரபாண்டிக்கு ஷாக் கொடுத்த ஊர் மக்கள்.. பொய் சொல்லி சிக்கிய சண்முகம்

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி பானிபூரி கேட்க வெட்டுகிளினியின் ஐடியாவை கேட்டு சண்முகம் சோலா பூரியையும் பாணியையும் தனித்தனியாக வாங்கி வந்த நிலையில் இன்று, சண்முகம் அந்த பூரியையும் ரசத்தையும் ஒரு தட்டில் வைத்து மூடி எடுத்து வந்த உனக்காக ஸ்பெஷலாக வாங்கிட்டு வந்தேன் என்று சொல்லி கொடுக்க அதை திறந்து பார்த்த பரணி இது தான் உங்கள் ஊர்ல பானிபூரியா என்று முகத்தில் தூக்கி வீசுகிறாள்.

சண்முகம் திட்டு வாங்கியதும் ஐடியா கொடுத்த வெட்டுக்கிளி அங்கிருந்து எஸ்கேப் ஆகிறான். இதனையடுத்து ஊர் பெரியவர்கள் சௌந்தரபாண்டியை சந்தித்து இந்த முறை தர்மகத்தா தேர்தலில் நீங்க அன்னபோஸ்ட்டாக ஜெயிக்க முடியாது, உங்களை எதிர்த்து சண்முகம் நிற்க போறாரு, அதனால் தேர்தல் நடக்கும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று சொல்லி விட்டு செல்கிறார்கள். இதனால் சௌந்தரபாண்டி பயங்கர அதிர்ச்சி அடைகிறார்.

அடுத்து சண்முகம் பரணிக்காக தேடி பிடித்து ஒரு பானிபூரி காரனை வண்டியோடு வீட்டிற்கு அழைத்து வந்து எல்லாரையும் வெளியே கூப்பிட தங்கைகளும் வைகுண்டமும் மட்டும் வருகிறார்கள். உங்களுக்காக தான் பானிபூரி வண்டியை கூப்பிட்டு வந்தேன் என்று சொல்ல இவர்கள் எல்லாரும் பனிபூரியை ரசித்து ரசித்து சாப்பிட சண்முகம் என்னப்பா நீ மட்டும் சாப்பிட்டுட்டு இருக்க என்று கேட்க வைகுண்டம் அதுக்கு தான டா கூட்டிட்டு வந்த என்று திருப்பி கேட்கிறான்.

பரணியையும் கூப்பிடு என்று சொல்ல வைகுண்டம் ஆமாம் மருமகளை மறந்திட்டோமே நீயே கூப்பிடு என்று சொல்ல சண்முகம் பரணியை கூப்பிட அவளும் வெளியே வருகிறாள். வெளியே வந்த பரணியிடம் தங்கைகள் அண்ணன் எங்களுக்காக தான் பானிபூரி வண்டியை கூட்டிட்டு வந்திருக்கு வாங்க நீங்களும் சாப்பிடுங்க என்று சொல்ல பரணி எனக்கு வேண்டாம், எனக்கு பானிபூரி பிடிக்காது என்று சொல்ல சண்முகம் என்ன நீ பிடிக்காதுன்னு சொல்ற, காலையில் நீ தானே கேட்ட என்று உண்மையை உளற தங்கைகள் அப்போ எங்களுக்குனு சொன்னது பொய்யா என்று கோபப்படுகின்றனர்.

பிறகு எல்லாரும் ஒன்று சேர்ந்து பானிபூரியை  சாப்பிட மறுபக்கம் சௌந்தரபாண்டி ஒற்றை காலில் பூஜை செய்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தீபாவை குத்த வந்தது யார்? இன்வெஸ்டிகேஷனில் இறங்கிய கார்த்திக்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா தன்னை ஒருவன் கத்தியால் குத்த விஷயத்தை சொல்லிய நிலையில் இன்று, கார்த்திக் தீபா சொன்னதை கேட்டு இதெல்லாம் ஐஸ்வர்யா வேலையாக தான் இருக்கும் என்ற முடிவுக்கு வருகிறான், உடனே ஆபிஸ்க்கு கிளம்பி வந்து ஆனந்திடம் ஐஸ்வர்யா அண்ணி இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்காங்க என்று சொல்ல அவனும் ஐஸ்வர்யாவுக்கு போனை போட்டு நீங்க ஏதாவது பண்ணீங்களா என்று கேட்க இல்லை என்று சொல்கிறாள்.

அடுத்து தீபா கை உடைந்து சாப்பிட முடியாமல் ரூமுக்குள் இருக்க அங்கு வந்த அபிராமி தீபாவை நலம் விசாரித்து அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட இருக்கும் இடையேயான மாமியார் மருமகள் பிணைப்பு அதிகமாகிறது. அடுத்து ரம்யா ஆபிஸ் காட்டப்படுகிறது. இந்த ஆபிஸ் சுவரில் யாரோ கார்த்திக் லவ் ஸ்டோரி என்று எழுதி இருக்க இதை பார்த்து எல்லாரும் ஷாக் ஆகின்றனர், ஆபிஸ் வந்த ரம்யா இதை பார்த்து பயங்கர கோபமாகி யார் எழுதியது என்று எல்லாரையும் அதட்டி கேள்வி கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment