Advertisment

எதிரியிடம் சிக்கி சாட்சி: மண்டபத்தை விட்டு வெளியேறிய மாப்பிள்ளை; கல்யாணத்தில் எழுந்த சிக்கல்!

ஜீ தமிழின் அண்ணா மற்றும் கார்த்திகை தீபம் சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

author-image
WebDesk
New Update
Karthigans anna

அபிராமிக்கு வந்த ஆபத்து.. தாலியை கைப்பற்ற போராடும் கார்த்திக் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அம்பிகாவுக்கு உண்மை தெரிய வர ரியா மற்றும் ரம்யா என இருவரும் சேர்ந்து ரூமுக்குள் அடைத்து வைத்த நிலையில் இன்று, தீபா ரௌடிகளின் பிடியில் இருந்து தப்பித்து ஆட்டோவில் வந்து கொண்டிருக்க இங்கே கார்த்திக்கு ஒரு போன் கால் வருகிறது.

அபிராமிக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கும் டாக்டர் ப்ரியா போன் செய்து சில தினங்களுக்கு முன்னர் அபிராமி தன்னை பார்க்க வந்ததாக சொல்கிறார். அவருக்கு உடம்பு சரியில்லை, கல்யாணம் முடிந்ததும் அவங்களை ஹாஸ்பிடல் அழைத்து வர சொல்லி போனை வைக்கிறார்.  ரியா மீண்டும் தீபா மாஸ்க் அணிந்து ரெடியாக அவளை மணமேடைக்கு அழைத்து வந்து உட்கார வைக்கின்றனர்.

தீபா வந்து கொண்டிருந்த ஆட்டோ ரிப்பேர் ஆகி பாதியில் நிற்கிறது. கார்த்திக் டாக்டரை நேரில் சந்தித்து பேசி விடலாம் என்று கிளம்பி ப்ரியா வீட்டிற்கு வருகிறான்.  ப்ரியா அபிராமி அம்பிகாவுடன் தன்னை சந்திக்க வந்திருந்ததாக சொல்கிறார், அவங்களை ஹாஸ்பிடலில் அட்மிட் ஆக சொல்லி இருந்தேன். ஆனால் அவங்க உன் கல்யாணத்தை பார்க்கணும்னு ஆசைபட்டாங்க. கல்யாணம் முடிந்ததும் கூட்டிட்டு வந்துடுங்க, ட்ரீட்மெண்ட் ஆரம்பித்து விடலாம் என சொல்ல கார்த்திக் மீண்டும் மண்டபத்திற்கு கிளம்பி வருகிறான்.

தீபா வந்த ஆட்டோவும் சரியாகி விட மீண்டும் மண்டபத்திற்கு கிளம்பி வருகிறாள். கார்த்திக் காரில் வந்து கொண்டிருக்கும் போது ஒருவன் ஒரு பெண்ணின் தாலியை எடுத்து கொண்டு ஓட கார்த்திக் அவனை துரத்தி செல்கிறான். மண்டபத்தில் கடைசி நிமிடத்தில் கார்த்தி எங்கே போனான் என்று டென்ஷனாகின்றனர்.  அருண், ஆனந்த் போன் செய்ய கார்த்திக் போன் காரில் இருப்பதால் போனை எடுக்காமல் இருக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சனியனை போட்டுத் தள்ள துணிந்த சௌந்தரபாண்டி.. சண்முகம் செய்யப் போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் சனியனை தேடிக் கிளம்பிய நிலையில் இன்று, சண்முகம் ஒரு வழியாக சனியன் தேடி கண்டுபிடித்து ஒரு ரூமுக்குள் அடைத்து வைக்கிறான். சனியன் தப்பித்துப் போகாமல் இருக்க உடன்குடி ரூமுக்கு வெளியே காவல் காக்கிறான்.  இதைத்தொடர்ந்து மறுபக்கம் ரத்னாவுக்கு மலைக்கோவில் வைத்து கல்யாணம் செய்யலாம் என்று முடிவெடுத்து ஜோசியரிடம் சோழி போட்டு பார்க்கின்றனர்.

இதற்கிடையில் சனியன் உடன்குடியை தாக்கிவிட்டு ரூமில் இருந்து தப்பிக்கிறான். தப்பித்து வெளியே வந்த சனியன் சௌந்தரபாண்டியிடம் சிக்கிக் கொள்ள சௌந்தரபாண்டி அவனை அங்கிருந்து அழைத்து வருகிறான். தனக்கு எதிராக சாட்சி சொல்ல இருக்கும் ஒரே ஆள் சனியன் தான் என்பதால் அவனை போட்டு தள்ள முடிவெடுக்கிறான். சனியனை துப்பாக்கியை வைத்து சுட்டு தள்ள முயற்சி செய்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன? சண்முகம் சனியனை காப்பாற்றி சௌந்தரபாண்டிக்கு தண்டனை வாங்கி கொடுப்பானா என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment