Advertisment

அம்மாவை கேள்வி கேட்ட மகள்: தங்கையை அடிக்க பாய்ந்த அண்ணன்; கல்யாணம் நடக்குமா?

ஜீ தமிழின் அண்ணா மற்றும் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
anna and NK

ரத்னா கேட்ட கேள்வி.. அடிக்க பாய்ந்த ஷண்முகம், நடந்தது என்ன?

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சூடாமணி இசக்கியை பார்க்க ஆசைப்பட வைகுண்டம் அதற்கான ஏற்பாடுகளை செய்த நிலையில் இன்று, சண்முகம் வைகுண்டத்திடம் எதுக்கு பா இப்படி பண்ண என்று கோபப்பட அவன் சூடாமணி இசக்கியை பார்க்கணும்னு ஆசைப்பட்டா அவளை வீட்டிற்கு கூப்பிட முடியாது, அதனால் தான் கோவிலுக்கு வர சொன்னதாக சொல்ல ரத்னா இதை அரைகுறையாக கேட்டு விடுகிறாள்.

யார் நீங்க? நீங்க எதுக்கு இசக்கியை பார்க்கணும் என்று சூடாமணியை நிற்க வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்க, சண்முகம் உட்பட எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர், சண்முகம் ரத்னாவை அமைதியாக இருக்க சொல்லியும் அவள் கேட்காமல் சூடாமணியிடம் கோபப்பட சண்முகம் அவளை அடிக்க கை ஓங்குகிறான். இதனால் ரத்னா இன்னும் கோபமாகிறாள்.

இதுவரைக்கும் எங்க அண்ணன் எங்களை அடிச்சது கிடையாது, ஆனால் இப்போ என் அண்ணனே என்னை அடிக்க கை ஓங்கிருச்சி.. இதுக்கு நீங்க தான் காரணம், நீங்க வந்த ரெண்டாவது நாளே இப்படி ஆகிருச்சு என்று கோபப்படுகிறாள். இதனால் சூடாமணி ரத்னா பாவம் பா, புள்ளைங்க யாரும் சாப்பிடல.. நான் கூட இந்த வீட்டை போயிடுறேன் என்று சொல்ல சண்முகம் அவங்க உங்களை பத்தி தெரியாமல் பேசுறாங்க என்று ஆறுதல் சொல்கிறான்.

அதன் பிறகு தங்கைகளை சமாதானப்படுத்தி அவர்களை சாப்பிட வைக்க அதை பார்த்த சூடாமணி நீ ஒரு அண்ணன் மட்டுமில்ல அம்மாவாகவும் இருக்க என்று சந்தோசப்படுகிறாள். அடுத்து கோவிலுக்கு நாங்களும் வரோம் என்று சௌந்தரபாண்டி மற்றும் முத்துப்பாண்டி சொல்ல இந்த விஷயம் சண்முகத்துக்கு தெரிய வர அவன் ஷாக் ஆகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜீவா போட்ட கண்டிஷன், அதிர்ச்சியான குடும்பம்.. கௌதம் எடுத்த முடிவு

நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் நேற்றைய எபிசோடில் கௌதம் குடும்பத்தினர் மதுமிதாவின் வீட்டிற்கு வந்துள்ள நிலையில் இன்று, கௌதம் நான் உங்களுக்கு என்னுடைய பேக்டரி ஒன்னை எழுதி வச்சிடுறேன். நீங்க அதை பாத்துக்கிட்டா போதும். என் தங்கச்சி சந்தோசமாக இருக்கனும் அதுதான் என்னுடைய ஆசை என்று சொல்ல ஜீவா மாயாவை நான் என்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் பார்த்துக்கணும்னு ஆசைப்படுவதாக சொல்கிறான்.

இதையடுத்து என் அக்காவுக்கு கல்யாணம் ஆன பிறகு எனக்கு கல்யாணம் நடக்கும் என்று சொல்ல எல்லாரும் ஷாக்காக கௌதம் அதற்கு சம்மதம் சொல்கிறான், இப்படியொரு மாப்பிள்ளை கிடைக்க நாம கொடுத்து வச்சிருக்கணும் என்று சொல்கிறான். உனக்கு நான் உதவி பண்றேன், உன் அக்காவுக்கு கல்யாணம் முடிந்ததும் உங்க கல்யாணத்த வச்சிக்கலாம் என்று வாக்கு கொடுக்கிறான்.

அதன் பிறகு எல்லாரும் ஜீவாவிடம் ஏண்டா இப்படி சொன்ன என்று கேட்க அவன் மதுவுக்கு சப்போர்ட்டாக பேச மதுமிதாவின் அம்மா நீயும் சந்தோசமாக இருக்க மாட்ட எங்களையும் சந்தோசமா இருக்க விடமாட்ட என்று கோபப்பட்டு திட்டுகிறாள். மறுபக்கம் மாயா கோபத்தில் அமெரிக்கா கிளம்ப கௌதம் அண்ணன் மேலே உனக்கு நம்பிக்கை இருக்கா? இல்லையா என்று கேட்க மாயா டிக்கெட்டை கிழித்து போட்டு தனது முடிவை மாற்றி கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment