Advertisment

நாயகன் மீது காதலில் விழுந்த நாயகி: அப்போ நிச்சயதார்த்தம் நடக்குமா? அண்ணா சீரியலில் இன்று!

ஜீ தமிழிர் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா மற்றும் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
NK and Anna

நெஞ்சத்தை கிள்ளாதே - அண்ணா

சௌந்தரபாண்டிக்கு வந்த சந்தேகம், பரணி கொடுத்த வார்னிங்

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் உண்மையறிந்த பாக்கியம் சௌந்திரபாண்டியை போட்டு வெளுத்தெடுத்த நிலையில் இன்று, சௌந்தரபாண்டி பாக்கியம் பேயாட்டம் ஆட என்ன காரணம் என்று யோசிக்க இசக்கி மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் பேய் பிடித்திருப்பதாக நினைத்து ரூமுக்கு அழைத்து சென்று ஆசுவாசப்படுத்துகின்றனர்.

இதையடுத்து பாக்கியம் இப்படி நடந்துக்க என்ன காரணம் என்று யோசிக்கும் சௌந்தரபாண்டி ரூம் அருகே வர முத்துப்பாண்டி இப்போ அம்மா கிட்ட போகாதீங்க என்று சொல்ல, ஜன்னல் வழியாக எட்டி பார்க்க பாக்கியம் பேய் போல் நின்று கொண்டிருக்க சௌந்தரபாண்டி ஷாக் ஆகிறார். மேலும் அவ வெளியே வந்தா தானே எனக்கு பிரச்சனை என்று ரூமை சாத்தி பல பூட்டுகளை போடுகிறார்.

அடுத்ததாக வீட்டிற்கு வந்த பரணி ரூமுக்கு பல பூட்டு போடப்பட்டு இருப்பதை பார்த்து காரணம் கேட்க சௌந்தரபாண்டி அவ பேயாட்டம்ஆடுறா என்று சொல்கிறார். பிறகு பரணி ரூமுக்குள் சென்று இப்போ தான் எல்லாம் கை கூடி வருது, அத்தை வீட்டில் இருப்பதை காட்டி கொடுத்து விடாதே என்று சொல்லி கிளம்பி வருகிறாள். 

அடுத்து ரத்னா வெங்கடேஷுடன் வண்டியில் வர அதை முத்துப்பாண்டி பார்த்து ஜீப்பில் பின்னாடியே பின் தொடர்ந்து வந்து ஓரிடத்தில் பைக்கை மடக்கி காரை நிறுத்துகிறான், ரத்னாவின் புடவை பைக் டயரில் மாட்டி இருக்க அதை எடுத்து விட்டு பார்த்து கூட்டிட்டு போ என்று சொல்லி கிளம்ப இருவரும் வியப்புடன் பார்க்கின்றனர்.  அதன் பிறகு ரத்னா வெங்கடேஷுடன் வந்து இறங்க அதை பார்த்த சூடாமணி இது தான் வெங்கடேஷா என்று கேட்க அது உங்களுக்கு எதுக்கு என்று திட்டி விட்டு உள்ளே செல்கிறாள்.

பிறகு சூடாமணி ரெண்டாவது பொண்ணுக்கு கல்யாணம் ஆகிருச்சு. முதல் பொண்ணு வீட்டில் இருக்கிறது சரியில்ல, சீக்கிரம் கல்யாணத்தை முடிக்கணும் என்று பேசுகிறார்.  அதை கேட்கும் ரத்னா சூடாமணியிடம் கோபப்பட்டதை நினைத்து வருத்தப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தடபுடலாக நடக்கும் நிச்சயதார்த்த ஏற்பாடுகள்.. கௌதம் வார்த்தையால் வந்த சந்தேகம்

நெஞ்சத்தை கிள்ளாதே இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் மதுமிதா கல்யாணத்துக்கு ஓகே சொன்ன நிலையில் இன்று, மது கல்யாணத்துக்கு ஓகே சொன்ன விஷயம் அறிந்து கௌதம் மற்றும் மாயா சந்தோஷப்படுகின்றனர். மதுமிதாவை பார்க்க வந்த கௌதம் அவளிடம் பேசுவதை கேட்க ஒரு நாள் ரெஸ்ட் ரூம் வெளியே நின்று பேசியதை அப்படியே சொல்ல அன்று பேசியது கௌதம் தானா என்று சந்தேகம் மதுவுக்கு வருகிறது.

இது குறித்து கௌதமிடம் கேட்கலாம் என்று முயற்சிக்க அது முடியாமல் போகிறது. அடுத்து மாயா ஜீவாவை கூட்டிட்டு போய் நாளைக்கு நமக்கும் நிச்சயதார்த்தத்தை வச்சுக்கலாம் என்று சொல்ல அவன் நோ சொல்கிறான். இவர்கள் பேசுவதை கேட்ட சகுந்தலா குடும்பத்தாரிடம் நாளைக்கு மதுமிதா, ஜீவா என ரெண்டு பேருக்கும் ஒரே மேடையில் நிச்சயதார்த்த வச்சிக்கலாம் என்று சொல்ல எல்லோரும் ஓகே சொல்லி விடுகின்றனர்.

அடுத்த நாள் நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் நடக்க கௌதம் குழந்தைகளிடம் சிரித்து பேசி விளையாட்டு கொண்டிருக்க அதை பார்த்து மது இவர் இவ்வளவு சாஃப்ட் கேரக்டரா என்று யோசிக்கிறாள். பிறகு மதுவிடம் நிச்சயதார்த்தத்திற்காக வாங்கிய மோதிரத்தை கொடுக்கிறான். இதைப் பார்த்து சந்தோஷ் கௌதமை கலாய்க்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment