Advertisment

அண்ணன் மீது புகார் கொடுத்த தங்கை: அப்பாவை தப்பிக்க வைத்த போலீஸ் மகன்; அடுத்து என்ன?

அண்ணா மற்றும் சந்தியா ராகம் சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
anna Santh

சௌந்தரபாண்டி பக்கம் தாவிய முத்துப்பாண்டி.. சண்முகம் எடுத்த முடிவு - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி சௌந்தரபாண்டி ஜாமினில் வெளியே வராதபடி மேஜிஸ்திரேட்டிடன் அனுமதி வாங்கிய நிலையில் இன்று, சௌந்தரபாண்டி முத்துப்பாண்டிக்காக சின்ன வயசில் செய்த விஷயங்களை சொல்லிக் காட்டி அவனை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்கிறார். செய்ததை எல்லாம் சௌந்தர பாண்டி சொல்லிக் காட்ட முத்துப்பாண்டி இப்ப நான் என்ன பண்ணனும் என்று கேள்வி கேட்க என்னை தப்பிக்க வைக்கணும் என்று சொல்கிறார் சௌந்தரபாண்டி.

பிறகு முத்துப்பாண்டி சரி உங்களை தப்பிக்க வைக்கிறேன், ஆனா நீங்க திரும்பவும் எந்த தகராறுக்கும் போகக்கூடாது என சொல்ல சௌந்தரபாண்டி ஓகே என சம்மதம் சொல்கிறார். மறுபக்கம் சண்முகம் குடும்பத்தினர் எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க அப்போது வைகுண்டம், சூடாமணிக்கு அறுபதாம் கல்யாணம் செய்ய முடிவெடுத்து இருப்பதாக சண்முகம் சொல்கிறான். ஆனால் சூடாமணி ரத்னா கல்யாணம் முடியாம எங்களுக்கு எதுக்கு என்று கேள்வி கேட்கிறாள்

சண்முகம் ரத்னாவோட கல்யாணம் தான் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடக்க போகுதுல என்று சொல்கிறான். சூடாமணி நிச்சயத்தில் நடந்த பிரச்சனையால் அவ இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருக்கா அவ கல்யாணத்துக்கு சம்மதிக்கட்டும் அதுக்கப்புறம் அறுபதாம் கல்யாணம் பற்றி யோசிக்கலாம் என்று சொல்கிறாள். அடுத்து சண்முகம் மற்றும் உடன்குடி என இருவரும் தாடி மீசை எல்லாம் வைத்துக் கொண்டு மாறுவேடம் அணிந்து ரத்னா வெங்கடேசனை சேர்த்து வைக்க வெங்கடேஷ் உடன் இணைந்து திட்டம் ஒன்றை தீட்டுகின்றனர்.

பிறகு வெங்கடேஷ் நடந்து வரும் ரத்னாவை வண்டியில் ஏற சொல்லி கூப்பிட அவள் முடியாது என்று கோபப்பட சண்முகம் பரணி கையை பிடித்து கையை பிடித்து இழுத்து காட்டி அதேபோல் ரத்னா கையை பிடித்து இழுக்க சொல்லி சைகை காட்டுகிறான். வெங்கடேசனும் ரத்னா கையை பிடித்து இழுக்க உடனே மாறு வேடத்தில் இருந்த சண்முகம், உடன்குடி ஆகியோர் ஓடி வந்து பொம்பள புள்ள கிட்ட தகராறு பண்றியா என வெங்கடேஷை போட்டு அடிக்கின்றனர்.

பிறகு ரத்னா இடையில் புகுந்து அவர் நான் கட்டிக்க போற மாப்பிள்ளை என தடுத்து நிறுத்துகிறாள். பிறகு வெங்கடேஷ் உடன் பைக்கில் ஏறி செல்ல வைகுண்டம், சூடாமணி இதை பார்த்து சந்தோஷப்படுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரகுராம் மீது புகார் கொடுத்த பத்மா.. மாயா சொன்ன வார்த்தையால் ஷாக் - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்

சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் லிங்கம் உங்க பேர்ல எந்த சொத்துமே கிடையாது அப்படி இருக்கும்போது உங்களை நம்பி என் பொண்ணை எப்படி கொடுக்க முடியும் என்று பத்மா குடும்பத்தை அவமானப்படுத்தி வெளியே துரத்திய நிலையில் இன்று பத்மா குடும்பம் உடைந்து போய் லிங்கம் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர்.

மறுபக்கம் ரகுராம் வீட்டில் ரமணி பத்மா விஷயத்துல என்ன முடிவெடுத்து இருக்க என்று கேட்க அவர் இதுல நான் முடிவு எடுக்க என்ன இருக்கு நான் வீட்டை விட்டு வெளியே போக சொல்லலையே என்று சொல்கிறார். பார்வதி எல்லாத்துக்கும் காரணம் மாயா தான் என மாயாவை திட்ட மாயா நான் இந்த வீட்டை விட்டு வெளியே போயிடுறேன் என்று சொல்ல ரகுராம் நீ என்னுடைய பொண்ணு எங்கேயும் போகக்கூடாது என்று சொல்கிறார்.  

இந்த நேரத்தில் பஞ்சாயத்தார் வீட்டுக்கு வந்து பிராது வந்திருப்பதாக சொல்கின்றனர். பிறகு ரகுராம் பஞ்சாயத்திற்கு கிளம்பி வர பத்மா என் அண்ணனே என்னை கை விட்டுட்டார் என பிராது கொடுத்திருப்பது தெரிய வருகிறது. ரகுராம் என் தங்கச்சிக்கு என்னுடைய வீட்ல எல்லா உரிமையும் இருக்கு, அவள வீட்ட விட்டு நான் வெளியே போக சொல்லல என்று சொல்கிறார். பிறகு லிங்கத்தை பஞ்சாயத்திற்கு அழைத்து வர வைக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment