Advertisment

மருமகனை மாட்டி விடும் மாமனார்... கணவருக்கு துரோகம் செய்வாரா தீபா? ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், இதயம் ஆகிய சீரியல்களின் இன்றைய எபிசோடு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

author-image
WebDesk
New Update
zee tamil Serialdec 30

அண்ணா -கார்த்திகை தீபம் - இதயம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சண்முகம் வீட்டிற்குள் போதை பொருள்.. சௌந்தரபாண்டி சூழ்ச்சியால் நடக்க போவது என்ன?

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் தர்மகத்தா தேர்தலில் நிற்க போவதாகவும் முடிந்தால் ஜெயித்து காட்டு என சௌந்தரபாண்டிக்கு சவால் விட்ட நிலையில், இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

பாக்கியம் பதறியடித்து கொண்டு சண்முகம் வீட்டிற்கு வர என்னாச்சு என்று கேட்கின்றனர், ண்முகம் இந்த தேர்தலில் நிற்க உள்ள விஷயத்தை சொல்கிறாள். உடனே பரணி அதான் அவன் நிற்க மாட்டேன்னு சொல்லிட்டானே என்று கேட்க இல்ல, அவன் நிற்க போறதா சொல்லிட்டான். இப்போதைக்கு அவர் கிட்ட இருக்கிறது இந்த தர்மகத்தா பதவி ஒன்னு தான், இதையும் பிடிங்க அவர் விட மாட்டாரு. இதுக்காக அவர் கொலை கூட பண்ணுவாரு, அதனால் இந்த தேர்தலில் நிற்க வேண்டாம்னு சொல்லுங்க என்று சொல்லி விட்டு போகிறார்.

சண்முகம் வந்ததும் தங்கைகள் இந்த தேர்தலில் நிற்க வேண்டாம் என சொல்கின்றனர். ஆனால் சண்முகம் தனது முடிவில் உறுதியாக இருக்க பரணி நான் சொல்றேன் நீ நிற்க கூடாது என்று சொல்ல, சண்முகம் இந்த ஒரு விஷயத்துல உன் பேச்சை நான் கேட்க மாட்டேன் என்று சொன்னதும் பரணி அப்படினா என்கிட்ட பேசாத என்று கோபித்து கொண்டு சென்று விடுகிறாள்.

அதன் பிறகு வீட்டில் சௌந்தரபாண்டி முருகன் நகையெல்லாம் எடுத்து பார்த்து இது முருகன் நகையாக இருந்தாலும் இப்போ என் நகை, யார் கேட்டாலும் இதை கொடுக்க மாட்டேன் என்று பேச, சனியன் இப்போ என்ன பண்றது என்று கேட்க, சௌந்தரபாண்டி முத்துபாண்டிக்கு போன் போட்டு போதை பொருளை வீட்டில் வைத்து போதை பொருள் கடத்தல் கேஸில் சண்முகத்தை கைது செய்ய சொல்லி சொல்கிறார்.

முத்துப்பாண்டி நீங்க போதை பொருளை வைக்கிற வேலையை பாருங்க மற்றவற்றை நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி போனை வைக்க, ஒருத்தன் மூலமாக பான் பிராக் பெட்டிகளை எடுத்து வர சொல்லி அதை மளிகை சாமான் என்று சொல்லி சண்முகம் வீட்டில் இறக்கி வைக்கின்றனர். ஹாஸ்பிடலில் இருக்கும் பரணியை சண்முகம் வீட்டிற்கு கூட்டி வர செல்ல, அவள் உன்கூட வர மாட்டேன் என்று நடந்து வருகிறாள்.

வீட்டிற்கு வந்ததும் மூட்டைகள் இருப்பதை பார்த்து என்னவென்று கேட்க மளிகை சாமான், நீ தான் கொண்டு வர சொன்னதா சொல்லி இறக்கி வச்சிட்டு போனாங்க என்று சொல்ல, சண்முகம் நான் சொல்லலையே என்று சந்தேகம் அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கரெண்ட் ஷாக் கொடுத்த சிதம்பரம்.. கார்த்திக் கொடுத்த சர்ப்ரைஸ் –

கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் எல்லாரும் ரிஸார்டுக்கு வந்திருக்க செல்பி பாட்டி ஏதாவது கேம் விளையாடலாம் என்று சொல்லிய நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

செல்பி பாட்டி வீட்டில் உள்ள பெண்கள் எல்லாரையும் நிற்க வைத்து ஒவ்வொரு ஆண்களாக அழைத்து அவர்களது கண்ணை கட்டி விட்டு கையை தொட்டு பார்த்து மனைவி யார் என்பதை கரெக்ட்டாக கண்டு பிடிக்க வேண்டும், அது தான் இந்த கேம் என்று சொல்கிறார். முதலாவதாக அரவிந்தை கூப்பிட அவன் மீனாட்சியை கண்டு பிடிக்க முயற்சிக்க முடியாமல் போகிறது.

அடுத்தாக அருணுக்கு கண்ணை கட்டி விட அவனும் ஐஸ்வர்யாவை சரியாக கண்டுபிடிக்க தவறுகிறான். மூன்றாவதாக கார்த்திக்கு கண்ணை கட்டி விட அவன் தீபாவின் கையை பிடிக்காமலேயே தீபா இடத்திற்கு வந்து நின்று கண்டுபிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறான். இதெல்லாம் நடந்து முடிந்ததும், சிதம்பரம் தீபாவுக்கு போன் போட்டு எனக்காக வந்து பாட சொல்லியிருந்தேன் என்னாச்சு என்று கேட்க தீபா முடியாது என்று மறுக்கிறாள்.

சிதம்பரம் பொறுமையாக சொல்லி பார்த்துட்டேன், சரிப்பட்டு வரல. அப்படினா உன் குடும்பத்துக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்து விட வேண்டியது தான் என்று போனை வைக்க, தீபா யாருக்கு என்ன ஆக போகுதுனு தெரியாமல் பதறி தவிக்கிறாள். இறுதியாக அருணாச்சலம் சார்ஜ் போட போகும் போது கரெண்ட் ஷாக் அடிக்க எல்லாரும் பதறுகின்றனர். என்ன பிரச்சனை என்று பார்க்க வந்த மேனேஜருக்கும் கரெண்ட் ஷாக் அடிக்க செல்பி பாட்டி கட்டையால் அடித்து காப்பாற்றுகிறார்.

மழைக்காலம் என்பதால் இப்படி நடந்திருக்கலாம் என்று எல்லாரும் நினைக்க தீபா அதிர்ச்சியில் நிற்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஹாஸ்பிடலில் ட்விஸ்ட் கொடுத்த ஆதி.. பளாரென அறைந்த பாரதி 

இதயம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ஆதிக்கு ஆக்சிடென்ட் என பாரதிக்கு கேசவ் தகவல் கொடுக்க, அவள் பதறி ஹாஸ்பிடல் கிளம்பிய நிலையில் இன்று பாரதி ஹாஸ்பிடலுக்கு பதறி அடித்து ஓடி வருகிறாள். கேசவ் நின்று கொண்டிருப்பதை பார்த்து ஆதிக்கு என்னாச்சு? எங்க இருக்காரு என்று கேட்க, கேசவ் உள்ள தான் இருப்பதாக சொல்ல பாரதியும் தமிழும் உள்ளே வருகின்றனர்.

ஆனால் இங்கே ஆதி ஹாயாக உட்கார்ந்து போனை  பார்த்து கொண்டிருக்க பாரதி ஷாக் ஆகிறாள். ஆதி என்மேல காதல் இல்லை என்றால் எதுக்கு வந்தீங்க? உங்களுக்கும் காதல் இருக்கு தானே? அதை ஏன் மறைக்கறீங்க என்று ஆதி பேச, பாரதி பளார் பளாரென அறைந்து எல்லாரும் ஏன் இப்படி என்னை ஏமாத்துறீங்க? இனிமே என் முகத்திலேயே முழிக்காதே என்று திட்டி விடுகிறாள்.

பாரதி வெளியே சென்றதும் தமிழ் பாப்பா ஏன் ப்ரண்ட் இப்படி பொய் சொன்ன என்று கோபப்பட்டு அவனை போட்டு அடித்து அழுது கட்டி கொள்ள, ஆதி இனிமே இப்படி சொல்ல மாட்டேன் ப்ரண்ட் என்று சமாதானம் செய்கிறான். பிறகு பாரதி கண்ணீருடன் வீட்டிற்கு வர தமிழ், அம்மா அழறாங்க என்று சொல்ல, மாமியார் என்னாச்சு என்று கேட்க மனசு சரியில்லை என்று பாரதி கட்டி பிடித்து அழுகிறாள்.

அதன் பிறகு மாமனார் ரத்னம் கூடிய சீக்கிரம் துரைக்கும் பாரதிக்கும் கல்யாணம் செய்து வைத்து விடலாம் என்று சொல்லிட்டு செல்ல, பாரதி தனியாக உட்கார்ந்து அழுகிறாள். பிறகு வீட்டிற்கு வரும் லதா ஏன் ஆதியை வேண்டாம்னு சொல்ற, உன் வாழ்க்கைக்கு அவர் தேவை என்று சொல்ல, பாரதி அவளிடம் கோபப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்தாகி நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment