Advertisment

கணவனுக்கு விஷ ஊசி... கார்த்தியை மீண்டும் ஏமாற்றும் தீபா? இது எங்க போய் முடியுமோ!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி  புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, இதயம், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

author-image
WebDesk
New Update
Zee tamil Anna KD

அண்ணா - கார்த்திகை தீபம் - இதயம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் முதன்மை தமிழ் தொலைகாட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி  புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, இதயம், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

கார்த்திகை தீபம்:

தீபாவை விலை பேசும் சிதம்பரம்.‌. கார்த்திக்கு காத்திருக்கும் சிக்கல்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் சிதம்பரம் ஒரு மீட்டிங் இருக்கு வந்திருக்க இங்கு எல்லோரும் கார்த்திக்காக காத்திருப்பதாக சொல்ல கார்த்திக் மாஸாக என்ட்ரி கொடுத்த நிலையில் இன்று, சிதம்பரம் எப்பவும் போல இந்த முறையில் எனக்கு தானே பிசினஸ் கொடுக்கப் போறீங்க என்று கேட்க, வட மாநில கம்பெனி ஒன்று, உங்களுக்கு கிடையாது. கார்த்திக் ரிலீஸ் பண்ண பாட்டுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைச்சிருக்கு.

அந்த பல்லவி என்ற பாடகிக்கு ஒரு டிமாண்ட் இருக்கு அதனால பல்லவிக்காக யார் பாடுறாங்களோ அவங்களுக்கு தான் இந்த முறை பிசினஸ் என்று சொல்கிறார்கள். இதை கேட்ட சிதம்பரம் பணம் கொடுத்தா அந்த பல்லவி எனக்கும் பாடி கொடுப்பார் என்று சொல்கிறார். வடமாநில கம்பெனி பல்லவியிடம் அக்ரிமெண்ட் போட்டுட்டு வந்தால் உங்களுக்கு தான் பிசினஸ் என்று சொல்லி அனுப்புகின்றனர். அதன்பிறகுஇருவரும் கிளம்பி வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா சிதம்பரத்தை சந்தித்து அந்த பல்லவி தான் உங்களுக்காக வந்து பாட மாட்டார் என்று சொல்ல, எல்லாருக்கும் ஒரு விலை இருக்கு அது கொடுத்தா பல்லவி கண்டிப்பா எனக்கு பாடி கொடுப்பா என்று பதில் கூறுகிறார். அதன் பிறகு சிதம்பரம் தீபாவுக்கு போன் செய்து பேச, முதலில் பெரிதாக ரியாக்ட் செய்யாத தீபா சிதம்பரம் ஹாய் பல்லவி என்று சொன்னதும் அதிர்ச்சி அடைகிறாள்.

பிறகு சிதம்பரம் தீபாவை நேரில் சந்தித்து உங்க அண்ணனுக்கு வேலை கிடையாது. உன் தம்பிக்கு ட்ரீட்மென்ட் பாக்கணும் இது எல்லாத்துக்கும் தேவையான பணத்தை நான் தருவேன். நீ எனக்காக பாடி கொடுக்கணும் என்று சொல்ல, தீபா முடியாது என கூறுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அண்ணா:

சண்முகத்துக்கு விஷ ஊசி.. மரண பயத்தை காட்டிய பரணி

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணிக்கு தாயத்து ரகசியம் தெரிய வந்ததை தொடர்ந்து இன்று, வீட்டுக்கு வந்த பரணி எல்லோரிடமும் சண்டை போட்டு சண்முகத்திடம் இன்னைக்கு நைட்டு உனக்கு விஷ ஊசி போட்டு கொல்ல போறேன் என்று சொல்ல, அவன் பயத்துடன் படுக்க செல்கிறான்.

சண்முகம் தூங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென அவனுக்கு பரணி ஊசி போடுவது போல தோன்ற, அலறி எழுந்து கொள்கிறான். ஆனால் அது கனவு என தெரிய வருகிறது. ஊசி போட்டு கொண்டாலும் கொன்னுடுவார் என்ற பயத்தோடு சண்முகம் தூங்காமல் இருக்க விடியற்காலையில் அசந்து தூங்குகிறான். தங்கைகள் அவனை எழுப்ப சண்முகம் எழுந்திரிக்கவில்லை.

அதன்பிறகு வைகுண்டம் சண்முகம் முகத்தில் தண்ணீர் ஊற்றி எழுப்புகிறார். வெளியில் வரும் சண்முகம், பரணி கோலம் போட்டு இன்னும் 40 நாளில் இங்கிருந்து ரிலீஸ் ஆகி விடுவேன் என்று எழுதி இருக்க அதை பார்த்ததும் வைகுண்டத்துடன் சண்டை போடுகிறான். வைகுண்டம் தாயத்தால் தானே இவ்வளவு பிரச்சனை சரி இனிமே பிரச்சனையே வரக்கூடாதுன்னு ஒரு தாயத்து வாங்கிட்டு வரேன் என்று சொல்ல, சண்முகம் கோவப்பட, வைகுண்டம் அங்கிருந்து ஓடி விடுகிறார்.

அடுத்ததாக சௌந்தரபாண்டி ஊர் பெரியவர்களை சந்தித்து சண்முகம் தர்மகத்தா தேர்தலில் நிற்க போறது இல்லை என்று சொல்ல, அங்கு வரும் வைகுண்டம் யார் அப்படி சொன்னது, சண்முகம் இது தேர்தல்ல நிப்பான் என்று சொல்ல, அதை அவனே வந்து சொல்லட்டும் என்று ஷாக் கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதயம் :

சௌமியாவுடன் ஆதியின் சந்திப்பு.. பாரதியை திட்டிய சாரதா

இதயம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ஆதியின் தோழியாக சௌமியா என்ற கதாபாத்திரத்தில் ஆயிஷா என்ட்ரி கொடுத்த நிலையில் இன்று, ஆதி மற்றும் சௌமியா இருவரும் ஒரு ரெஸ்டாரண்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, ஆதி அவளிடம் எனக்கு என்னமோ அவளை ரொம்ப நாளா பார்த்த மாதிரி இருக்கு என்று பாரதி குறித்து பேசுகிறான்.

இப்ப பாரு அவகிட்ட இருந்து போன் வரும் என்று சொல்லிக் கொண்டிருக்க, அதே போல் பாரதி ஆதிக்கு போன் செய்து ஒரு பைல் விஷயமாக சந்தேகம் கேட்டு பிறகு எங்கே இருக்கீங்க என்று கேட்க, அவன் பக்கத்தில் இருக்கும் கேன்டினில் இருப்பதாக சொல்லி போனை வைக்கிறான்.

அதன் பிறகு பாரதி ஆதியின் காதலி யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த கேண்டிலுக்கு கிளம்பி வர, பாரதி வருவதை பார்த்த ஆதி சௌமியாவிடம், உன்னுடைய முகத்தை காட்ட வேண்டாம் என்று சொல்லி விடுகிறான். சௌமியாவும் அதே போல் முகத்தை மறைத்து பேசிவிட்டு வெளியே வந்து செக்யூரிட்டியை கட்டிப்பிடித்து பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு கிளம்பி செல்கிறாள்.

உடனே பாரதி சாரதாவிடம் சென்று ஆதி லவ் பண்ற பொண்ணு பொருத்தமா இருக்கா அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடுங்க என்று சொல்ல, சாரதா உன்னை அந்த பொண்ணு யாருன்னு மட்டும் தான் பார்க்க சொன்னேன். அவனுக்கு அந்த பொண்ணோட கல்யாணம் பண்ணி வைக்க சொல்ற ரைட்ஸ் உனக்கு கிடையாது என விட்டு விடுகிறாள்.

அதன் பிறகு மன்னிப்பு கேட்கும் பாரதி அங்கிருந்து கிளம்பி ஆபிஸ் வருகிறாள். ஆதியின் போன் பாஸ் வேர்ட்டை தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment