Advertisment

அப்பாவை சிறையில் தள்ளிய வில்லன்... லைவ் டெலிகாஸ்ட் பர்த்டே : ஜீ தமிழில் இன்று

ஜீ தமிழில் அதிக TRP புள்ளிகளை பெற்றுவரும், சீதா ராமன், அண்ணா, இதயம், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

author-image
WebDesk
New Update
zee tamil anna

ஜீ தமிழ் சீரியல்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழில் அதிக TRP புள்ளிகளை பெற்றுவரும், சீதா ராமன், அண்ணா, இதயம், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

சீதா ராமன் :

உண்மை அறிந்த ராம்.. மகா போடும் டிராமா, அர்ச்சனா வைக்கும் செக்மேட்

சீரியல் சீதாராமன் சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சீதா கல்பனாவை துப்பாக்கி முனையில் மிரட்டி அரைவிட்டு, வீட்டை விட்டு துரத்திய நிலையில் இன்று, கல்பனா உன்னையும் மகாவையும் சும்மா விடமாட்டேன் என்று சவால் விட்டுவிட்டு கிளம்பி செல்கிறார். அதன் பிறகு சிரிச்சா மகாவிடம் கம்பெனி செய்ய அவர் எதுவும் தெரியாது என நல்லவள் வேஷம் போடுகிறாள்.

அதனை தொடர்ந்து சீதா ராமுக்கு போன் போட்டு நடந்தவற்றையெல்லாம் சொல்லி கண்கலங்க, அவன் உடனடியா கிளம்பி வரேன் என்று சொல்கிறான். சீதா நீங்க வரவேண்டாம் என்று சொல்லியும் ராம் நான் லீவ் போட்டுட்டு கிளம்பி வரேன் என்று ஃபோனை வைக்கிறான். பிறகு சீதா தன்னுடைய அம்மாவிடம் தனக்கு நடந்த விஷயத்தை பற்றி சொல்லி கண் கலங்கி அழுகிறாள்.

அடுத்ததாக மகா இது எல்லாத்துக்கும் காரணம் அர்ச்சனா தான் என அர்ச்சனா மீது பழி போட்டு பேச, இது எல்லாம் ஓட்டு கேட்கும் அர்ச்சனா என்னை நீ இந்த வீட்டை விட்டு துரத்த பார்க்கிறியா? நான் போகும் போது உன்னையும் கூட்டிட்டு தான் போவேன் என்று சவால் விடுகிறாள். அதை தொடர்ந்து சீதா, ராம் வீட்டுக்கு வந்துவிட்டது பல நினைத்து தனியாக பேசத் தொடங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

ஜெயிலுக்குள் கம்பி எண்ணும் சௌந்தரபாண்டி.. மாஸ் என்ட்ரி கொடுத்த பாண்டியம்மா

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தர பாண்டி கைது செய்யப்பட்ட நிலையில் இன்று, சௌந்தரபாண்டியை கைது செய்து ஸ்டேஷன்க்கு அழைத்து வர எஸ்பி குற்றவாளி சௌந்தரபாண்டி தான் என அவரிடம் கையெழுத்து வாங்கி அக்யூஸ்ட் போல நடத்துகிறார். அதனை தொடர்ந்து எஸ்.பி இங்கிருந்து கிளம்பி செல்கிறார். ஸ்டேஷனில் சௌந்தரபாண்டியுடன் இருக்கும் திருடன் ஒருவன் நான் ஜெயிலுக்கு வர உன் பையன் தான் காரணம் அவன கொல்லதம விட மாட்டேன் என மிரட்டுகிறார். சௌந்தரபாண்டி என்ன வேற செல்லில் போடு இல்லனா வெளியே கூட உட்கார்ந்துகிறேன் என கெஞ்ச, முத்துப்பாண்டி கொஞ்ச நேரம் சும்மா இருப்பா என ஷாக் கொடுக்கிறார்.

அதனைத் தொடர்ந்து இந்த திருடன் தான் தப்பை செய்தான் என்று சௌந்தரபாண்டிக்கு பதிலாக கையெழுத்து போட வைக்க பிளான் போடுகின்றனர். இதைப் புரிந்து கொண்டத்துடன் உங்க அப்பா செஞ்ச தப்புக்கு நான் தண்டனை அனுபவிக்கணுமா என ஸ்டேஷனில் இருந்து தப்பி ஓடுகிறான். இதைப் பார்த்து எல்லோரும் ஷாருக்காக திருடன் போன வேகத்தில் ஜெயிலுக்குள் வந்து உட்கார்ந்து கொள்கிறான்.

அப்போது பாண்டியம்மா படு மாஸான என்ட்ரி கொடுக்கிறார். இதைப் பார்த்த சௌந்தரபாண்டி என் அக்கா வந்துட்டா டா என சந்தோஷப்படுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதயம் :

அம்மாவின் பிறந்த நாள்.. ஆதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பாரதி

இதயம் சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் ஆதி தமிழிடம் தனது அம்மா சாரதாவுக்கு பிறந்தநாள் என்று சொல்ல அது பாரதிக்கு தெரிய வந்த நிலையில் இன்று, மறுநாள் காலையில் வீட்டில் எல்லோரும் சாரதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுகின்றனர். மறுபக்கம் ஆபிஸ் வந்த பாரதி ஆதி வருவதற்கு முன்பாக சாரதாவின் பிறந்த நாளை கொண்டாட எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறாள்.

ஆபிஸ் வந்த ஆதி பாரதி செய்த ஏற்பாடுகளை பார்த்து சந்தோஷப்படுகிறான்.  அதனை தொடர்ந்து ஆதியை வைத்து கேக் வெட்டிக் கொண்டாட பாரதி அதை வீடியோ காலில் காட்ட சாரதா சந்தோஷப்படுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment