/indian-express-tamil/media/media_files/2025/04/21/QzXEBuwEex8Pv6kQEFv9.jpg)
கடத்தப்படும் ரேவதி.. கார்த்தியை சிக்க வைக்கும் நடக்கும் மாஸ்டர் பிளான் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி நவீனை வீட்டை விட்டு துரத்திய நிலையில் இன்று, நவீன் கார்த்தியை சந்தித்து நான் துர்காவை காதலிக்கிறேன், இந்த ஊரை விட்டு போனால் அவளோட தான் போவேன் என்று சொல்கிறான். இதையடுத்து கார்த்தியும் மயில்வாகனமும் வீட்டிற்கு வருகின்றனர்.
அப்போது துர்கா நவீன் வாங்கி கொடுத்த கொலுசை அணிந்திருப்பதை கவனிக்கின்றனர், இதனால் துர்கா மனதுக்குள் நவீன் மீது காதல் உள்ளது என்பதை புரிந்து கொள்கின்றனர். பிறகு கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் ட்ரேவல் ஏஜென்சிக்கு வருகின்றனர், ரேவதி ஆஸ்திரேலியே செல்லவிருந்த விமானத்தில் மாற்றம் இருப்பதாக சொல்கின்றனர், அதாவது காலை 6 மணிக்கு பதிலாக 10 மணிக்கு பிளைட் என சொல்லி அனுப்புகின்றனர்.
தூரத்தில் இருந்து இவர்களை கவனித்த மாயா ஏஜென்சியிடம் விசாரிக்க ரேவதி ஆஸ்திரேலியா செல்வது தெரிய வருகிறது. இதனால் மாயா ரேவதிக்கு போன் செய்து சந்தித்து பேச வேண்டும் என்று சொல்கிறாள். பிறகு சந்திரகலாவும் சிவனாண்டியும் சந்தித்து பேச கார்த்தியை சிக்க வைக்க ராஜசேதுபதி வீட்டில் ஒரு வேலைக்காரியை ஏற்பாடு செய்து குடும்ப போட்டோவை திருட திட்டமிடுகின்றனர். அடுத்து ரேவதி கார்த்தியிடம் சொல்லாமல் மாயாவை சந்திக்க வர மாயாவின் ஆட்கள் ரேவதியை கடத்துகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருமணத்தை தள்ளி போடும் வெற்றி, துளசி.. திவ்யா கொடுத்த ஷாக், மகேஷ்க்கு உச்சகட்ட டென்ஷன் - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
கெட்டிமேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் லட்சுமி, சிவராமன், பாட்டி மற்றும் முருகன் ஆகியோர் அஞ்சலி வீட்டிற்கு வர மகேஷ் டென்ஷனான நிலையில் இன்று, வெற்றியின் குடும்பத்தினர் பத்திரிக்கை அடிப்பது குறித்து முனுசாமி வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர். எல்லாரும் வெற்றியை திவ்யாவிடம் தனியாக பேச சொல்கின்றனர். மறுபக்கம் மகேஷ் வீட்டில் லட்சுமி, பாட்டி, அஞ்சலி ஆகியோர் சமைத்து கொண்டிருக்க கிச்சன் சுத்தம் இல்லாமல் இருப்பதை பார்த்து மகேஷ் டென்ஷன் ஆகிறான், ஆனால் அதை வெளியே காட்ட முடியாமல் தவிக்கிறான்.
மேலும் பாட்டி இவ்வளவு பெரிய வீட்டை தனியா எப்படி சுத்தம் பண்றீங்க என்று கேட்க அஞ்சலி சுத்தம் செய்ய ஆட்கள் இருக்காங்க, ஆனால் இதுவரைக்கும் நான் அவங்களை பார்த்ததே இல்ல என்று சொல்கிறாள். மகேஷ் இவர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்க அஞ்சலி இங்கு நடப்பதை சொல்லிடுவாளோ என்று அவனது டென்ஷன் அதிகமாகிறது. இடையில் புகுந்த முருகன் வீடு சூப்பராக இருப்பதாக சொல்லி சுத்தி பார்க்க செல்ல மகேஷ்க்கு அஞ்சலி கொடுத்த போட்டோ நினைவுக்கு வந்து ஓடி போய் அந்த போட்டோவை மறைத்து வைக்கிறான்.
அடுத்து துளசிக்கு பார்த்த மாப்பிள்ளை சிவராமனுக்கு போன் செய்து கல்யாணம் குறித்து பேச துளசி 2 மாதம் டைம் கேட்ட விஷயத்தை சொல்கிறார். மகேஷ் நிச்சயம் முடிந்த பிறகு எதுக்கு 2 மாசம் என்று கேட்க உடனே அஞ்சலி நான் அக்காகிட்ட பேசுறேன் என்று போன் செய்கிறாள். மறுபக்கம் வெற்றி திவ்யாவிடம் எலெக்சன் வருவதால் கல்யாணத்தை தள்ளி போடலாம் என்று கேட்க திவ்யா கல்யாணம் சீக்கிரம் நடக்கணும் என்று சொல்லி ஷாக் கொடுக்கிறாள்.
பிறகு அஞ்சலி துளசியிடம் பேச அவள் தியாவுக்கு ஹாஸ்பிடல் செலவுகளை பார்க்க இந்த வேலை ரொம்ப முக்கியம், சேர்ந்த உடனே லீவ் போட முடியாது. அதனால் கல்யாணத்தை தள்ளி வைப்பதாக சொல்கிறாள். அடுத்து ரேவதி முருகன் கடைக்கு வராததால் என்னாச்சு என்று தெரியாமல் கிளம்பி லட்சுமி வீட்டிற்கு வருகிறாள். முருகன் குறித்து விசாரிக்க அவன் அஞ்சலி வீட்டிற்கு சென்றிருக்கும் விஷயத்தை சொல்ல அஞ்சலியின் போன் நம்பரை வாங்கி கொண்டு வந்து வீடியோ கால் செய்கிறாள். ரேவதி என்ற பெயரை கேட்டதும் முருகன் குஷியாக அஞ்சலி அவனை கலாய்க்கிறாள்.
அம்மா அப்பா கிட்ட சொல்லி கல்யாணம் முடிச்சிடலாம் என்று சொல்ல முருகன் முதலில் காதலை சொல்வதாக சொல்கிறான். அடுத்து வெற்றி கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என யோசனையில் இருக்க அவனது நண்பர்கள் இரண்டு பேரும் நீங்க தான் என்ற உண்மையை சொல்லுங்க, உங்க மனசை புரிஞ்சுக்கிட்டு ஏத்துப்பாங்க என்று சொல்கின்றனர். இந்த சமயத்தில் துளசியே வெற்றிக்கு போன் செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடத்தப்படும் வைகுண்டம்.. சண்முகத்தை பழி தீர்க்க வைஜெயந்தி போடும் திட்டம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் சீமந்தத்திற்கு வராத காரணத்தால் இசக்கி சாப்பிடாமல் இருக்க பரணி கொட்டும் மழையில் நனைந்தபடி நின்ற நிலையில் இன்று, பரணி வீட்டிற்குள் வர மாட்டேன் என்று வெளியில் நின்றபடி இருக்கிறாள். சண்முகம் நைட் நேரம் ஆனதும் யாருக்கும் தெரியாமல் முகத்தை மறைத்து கொண்டு சௌந்தரபாண்டி வீட்டிற்கு வருகிறான்.
சுவர் ஏறி குதித்து இசக்கி ரூமுக்கு சென்று தூங்கி கொண்டிருக்கும் அவளுக்கு வளையல் போட்டு கண் கலங்குகிறான், நான் ஏன் வரல என்பதை ஒரு நாள் நீ புரிஞ்சிப்பல, அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு என்று கண்ணீர் விடுகிறான். இங்கே வைகுண்டம் பரணியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து செல்கிறார். சண்முகத்திடம் நீ ஏன்டா இப்படி இருக்க? யாரையும் புரிஞ்சிக்க மாட்டியா என்று கோபப்பட்டு பேசுகிறார். பிறகு வெளியே வந்த அவர் மனவேதனையில் சரக்கு அடிக்கிறார்.
இதை பார்த்த இன்ஸ்பெக்டர் குரு வைஜயந்திக்கு தகவல் கொடுக்க அவள் ரவுடிகளை அனுப்பி வைகுண்டத்தை மேலும் குடிக்க வைத்து ஒரு வண்டியில் தூக்கி போட்டு செல்கின்றனர். மறுபக்கம் சண்முகம் பரணியுடன் வண்டியில் வருகிறான், பரணி சீமந்தத்திற்கு வரல, ஆனால் அதுக்கு யாருக்கும் தெரியாமல் போய் வளையல் போட்டுட்டு வந்த என்று கேட்க அதெல்லாம் கேட்காத என்று சண்முகம் சொல்லி விடுகிறான். வழியில் இருவரும் குல்பி சாப்பிட நிற்க வைகுண்டத்தை கடத்தி வரும் ரவுடிகளும் காரை நிறுத்தி விட்டு குல்பி சாப்பிட வருகின்றனர். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.